Dindigul

News March 25, 2024

திண்டுக்கல்லை முன் மாதிரி தொகுதியாக மாற்றுவேன்!

image

எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவரும், திண்டுக்கல் தொகுதி வேட்பாளருமான வி.எம்.எஸ்.முகமது முபாரக், செய்தியாளா்களிடம் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தின் நிலவளம், நீா்வளம் முறையாக முறைப்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை கொண்டு வருவேன். இந்த தொகுதியின் உறுப்பினராக பொதுமக்கள் என்னைத் தோ்வு செய்தால், நாட்டிலுள்ள 543 தொகுதிகளிலும் முன் மாதிரி தொகுதியாக திண்டுக்கல்லை மாற்றுவேன் என்றார்.

News March 24, 2024

பழனியில் தேரோட்டம் வடம்பிடித்த பக்தர்கள்

image

பழனி பங்குனி உத்திரத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். முத்துக்குமாரசாமி-வள்ளி தெய்வயானை சமேதராக‌ தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தில் பழனி கோவில் இணைஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ்!; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

News March 24, 2024

திண்டுக்கல்: நாளை வேட்பு மனுதாக்கல்

image

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் தாெகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் நாளை காலை 11- மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வேட்பு மனு செய்வதாக அறிவித்துள்ளார். இதற்கு ஆதரவாளர்களை தாடிக்கொம்பு சாலையில் உள்ள அஞ்சலி ரவுண்டானா அருகில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

News March 24, 2024

திண்டுக்கல்: அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி

image

வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்கம் குறித்து ஆட்சியர் ஆட்சித்தலைவர் பூங்கொடி கலந்துரையாடினார். அருகில் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேஸ்வரி, வேடசந்தூர் வட்டாட்சியர் விஜயலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.

News March 24, 2024

மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பலகை

image

திண்டுக்கலில் இன்று மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் பேருந்து நிலையத்திலும், ரயில்வே நிலையம், மேலும் மக்கள் அதிகம் கூடும் அரசு அலுவலகங்கள், திரையரங்கம், அரசு அலுவலகம், அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பலகை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சார்பில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

News March 24, 2024

கொடைக்கானல் மலையில் கடும் புகை மூட்டம்

image

பழனி சவாரிக்கு மலைப்பகுதியில் காட்டு தீ பற்றி எரிந்தது. வனத்துறையினர், கிராம மக்கள் போராடிய தீயை அனைத்து நிலையில் இன்று புகை மூட்டமாக காணப்பட்டது. மலையிலிருந்து வெளியேறிய புகை வின்னி முட்டும் அளவிற்கு சென்றது. காட்டு தீயால் ஏராளமான மரங்கள், மூலிகை செடிகள் கருகி நாசமாகின. வனத்துறையினர் அடர் வனப்பகுதியில் தீ பிடிக்காமல் தடுக்க கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

News March 24, 2024

பழனியில் விழாக்கோலம் பூண்டது

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் இன்று மாலை பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் பழனியை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தீர்த்தம் எடுத்தும் காவடி எடுத்தும் ஆடிப்பாடி வருவதால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டது.

News March 24, 2024

வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை

image

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

News March 24, 2024

திண்டுக்கல்: 978 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

image

2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் முன்னிலையில் 88 துப்பாக்கிகளும், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 25 துப்பாக்கிகளும் என திண்டுக்கல் மாவட்டத்தில் 36 போலீஸ் நிலையத்தில் 978 துப்பாக்கிகளும் அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

News March 24, 2024

நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

image

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, திண்டுக்கல்லில் மருத்துவர் கைலைராஜன் துரைராஜன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!