Dindigul

News March 18, 2024

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் விபத்து

image

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று (18.03.2024) திண்டுக்கல் – தாராபுரம் செல்லும் தனியார் பேருந்து வெளிய சென்ற போது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் முழுவதும் சேதமானது. இதையடுத்து அருகே இருந்தவர்கள் இருசக்கர வாகனத்தை மீட்டனர். இந்த விபத்தில் காயமின்றி இருசக்கர வாகன ஓட்டுநர் உயிர் தப்பினார்.

News March 18, 2024

திண்டுக்கல்: கணக்கில் வராத பணம் பறிமுதல்

image

பழனி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வட்டாட்சியர் சக்திவேல் அவர்கள் தலைமையிலான பறக்கும் படையினர் இன்று 18.03.2024-பழனி( FST-1 TEAM ) தணிக்கையில் ஈடுபட்ட போது உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரது வாகனத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ஒரு லட்ச ரூபாய் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

News March 18, 2024

திண்டுக்கல்: முருங்கை விலை சரிவு!

image

ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளில் முருங்கை அதிகமாக விளைவிக்கப்படுகிறது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு செடி முருங்கை கிலோ ரூ.65 க்கு விற்றது. இந்நிலையில் தற்போது பல இடங்களில் முருங்கை அறுவடை தொடர்வதால் மார்க்கெட்டிற்கு வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக விலை சரிவடைந்து கிலோ ரூ.18க்கு விற்றது. முருங்கை விலை தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

News March 18, 2024

பழனியில் இன்று பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

image

பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 23ஆம் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், அடுத்த நாள் பங்குனி உத்திரத்தன்று தேரோட்டமும் நடக்கிறது.

News March 17, 2024

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையால் புதிதாக அலைபேசி எண் (8525852636) அறிமுகப்படுத்தப்பட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்களோ அல்லது சம்மந்தப்பட்ட நபர்களோ உண்மைக்கு புறம்பான செய்தியின் மீது நடவடிக்கை எடுக்க மேற்கண்ட அலைபேசி எண்ணில் புகார் அளிக்க காவல்துறை சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News March 17, 2024

திண்டுக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளான 16.03.2024 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்ற உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைப்பு செய்து, உரிய ஒப்புதல் ரசீதினை பெற்றுக் கொள்ள வேண்டும் என  ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

திண்டுக்கலில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று மார்ச்.17 வெளியிட்ட அறிக்கையில் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் எனவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் விண்ணப்பம் செய்யலாம் எனவும் படிவம் 6- ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம், மேலும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

News March 17, 2024

நத்தம் அருகே மீன் பிடி திருவிழா

image

திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செங்குளத்தில் பாரம்பரிய மீன் பிடி திருவிழா இன்று(மார்ச்.17) நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு பாரம்பரிய முறைப்படி  குளத்தில் இறங்கி வலை, கத்தா, கூடை, சேலை, கொசு வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்க தொடங்கினர். அதிக எடையுள்ள மீன்கள் கை நிறைய கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு அள்ளிச் சென்றனர்

News March 17, 2024

கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

image

கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக பிரையண்ட் பூங்கா, பில்லர்ராக், மோயர் பாயிண்ட், வெள்ளிநீர் வீழ்ச்சி, பைன்பாரஸ்ட் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக காணப்பட்டனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News March 17, 2024

ஒட்டன்சத்திரம் அருகே கடமான் பலி

image

ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பபிள்ளைபட்டி கிராமத்திலுள்ள பெரியசாமியின் தோட்டத்தில் நேற்று ஆண் கடமான் ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வனப்பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடமானின் உடலை மீட்டு பின்னா் விருப்பாட்சி கால்நடை மருத்துவா் சரவணபவா கடமானை உடற்கூறாய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!