Dindigul

News March 19, 2025

திரிபுரா கொலைகாரனுக்கு திண்டுக்கல்லில் ஸ்கெட்ச் 

image

திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ரோஸாங்லா ரியாங் (27) என்பவர் கடந்த மாதம்  ஒருவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்து விட்டு தமிழகத்திற்கு வந்தார். இந்நிலையில், திண்டுக்கல்லில் இருந்தவரை பிடிக்க திரிபுரா போலீசார் திண்டுக்கல் போலீசாரிடம் உதவி கோரினர்.இதையடுத்து,  ரியாங்கின் அலைபேசி எண்ணை வைத்து நேற்று(மே 18)  மதியம் 3:00 மணிக்கு அவரை கைது செய்த திண்டுக்கல் போலீசார் திரிபுரா போலீசிடம் ஒப்படைத்தனர். 

News March 19, 2025

திண்டுக்கல்லில் வேலைவாய்ப்பு முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்ச்.21ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இதில், 8, 10, 12, டிப்ளமோ, டிகிரி, ஐடிஐ முடித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். (Share பண்ணுங்க).

News March 19, 2025

திண்டுக்கல்லில் சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

திண்டுக்கல்லைச் சேர்ந்த 13வயதுடைய சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன், அப்பகுதியில் நடந்த திருவிழாவிற்கு சென்றார். அங்கு பாண்டித்துரை என்பவர் பேச்சுக் கொடுத்துள்ளார். பின் பைக்கில் அழைத்துச் சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர், போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து போக்சோவில் கைது செய்துள்ளனர்.

News March 18, 2025

இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 18.03.2025-ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு நேராந்து பணியை நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News March 18, 2025

திண்டுக்கல்: இன்று இரவு மழைக்கு வாய்ப்பு

image

திண்டுக்கல்லில் சில நாட்களாக சுட்டெறிக்கும் வெயில் நீடித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்தது. இந்நிலையில், இன்று(மார்ச் 18) இரவு 7:00 மணி முதல் மாவட்டத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது அதீத கனமழையாக இருக்காவிடினும் இதனால் சாலை போக்குவரத்து சற்று பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2025

திண்டுக்கல்: இறந்த கணவருக்கு மகளிர் உரிமை தொகை

image

திண்டுக்கல்: குஜிலியம்பாறை தாலுகா கருங்கல் ஊராட்சி செட்டியூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் இறந்து ஒரு வருடங்கள் ஆன நிலையில் இவரது மனைவி காளியம்மாளுக்கு கிடைக்க வேண்டிய மகளிர் உரிமைத்தொகை அலுவலர்களின் குளறுபடியால் கடந்த ஆறு மாதங்களாக இறந்துபோன இவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News March 18, 2025

திண்டுக்கல்: EPS 9 ஓய்வூதியத்தை உயர்த்த ஆர்பாட்டம் 

image

திண்டுக்கல் மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பாக EPS 95 ஓய்வூதியத்தை  ஆயிரம் ரூபாயிலிருந்து குறைந்தபட்சம் 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் இன்று(மார்ச் 18) நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் தவமணி தொடங்கி வைக்க மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.

News March 18, 2025

திண்டுக்கல்லில் வேலை! APPLY NOW

image

திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Sc, Diploma, ITI, MBBS, Nursing முடித்தர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.24ஆகும். <>விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்<<>>. Share பண்ணுங்க.

News March 18, 2025

திண்டுக்கல் அருகே விபத்து: 2 பேர் பலி

image

ஆத்துாரை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி பாப்பாத்தி. இருவரும் நேற்று பைக்கில் மதுரைக்கு சென்று விட்டு ஊர் திரும்பினர். கொடைரோடு சுங்கச்சாவடியை அடுத்த தளி மேம்பாலத்தில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சுவற்றில் மோதியது. இதில் பாப்பாத்தி கீழே விழுந்து பலியானார். பாலத்தில் இருந்து 40 அடி பள்ளத்தில் துாக்கி வீசப்பட்ட கருப்பையாவும் இறந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

News March 18, 2025

இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 17.03.2025-ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு நேராந்து பணியை நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!