Dindigul

News April 4, 2024

புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்

image

திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திண்டுக்கல் நகர், புறநகர், வேடசந்தூர், எரியோடு, ஆத்தூர், நிலக்கோட்டை பகுதி பெட்டிக்கடை, மளிகை கடைகளில் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வில்
50kg புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர்களான கமல்சேட் (65),வாசிக் அக்ரம் (28),சரவணன் (50),பாலசிங் (40) உள்ளிட்ட 10 பேருக்கு ரூ.1000 அபராதம் விதித்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

News April 4, 2024

டூவீலரிலிருந்து தவறி விழுந்து பெண் பலி

image

வடமதுரை அருகே பிலாத்து கிராமம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் சாதிக் அலி, இவரது மனைவி சாபுரா பீவி இருவரும் நேற்று முன்தினம் டூவீலரில் சென்றனர்.திண்டுக்கல் – திருச்சி நான்கு வழிச்சாலையில் கல்லாத்துப்பட்டி பாலம் அருகே சென்ற போது டூவீலர் நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.இதில் சாபுரா பீவி படுகாயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். 

News April 4, 2024

மரியாதையை மோடி அரசு கொடுப்பதில்லை – ரோஹிணி

image

கொடைக்கானலில் திமுக கூட்டணியில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான ரோகிணி கலந்து கொண்டார். அதில் பேசிய அவர் பிஜேபி ஆளுகின்ற குஜராத் மாநிலத்தில் பெண்களுக்கான கல்வி 27% மட்டுமே இருப்பதாகவும், பழங்குடியின பெண்ணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுத்த பிறகு அவர்களுக்கு முறையான மரியாதை மோடி கொடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

News April 4, 2024

நீரில் சிக்கிய காட்டு மாடு மீட்பு

image

கடந்த சில தினங்களாக கொடைக்கானல் ஏரிச்சாலை, அண்ணாசாலை, மூஞ்சிக்கல் ஆகிய பகுதிகளில் காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இந்த நிலையில் கொடைக்கானல் அருகேயுள்ள குறிஞ்சி நகா் பகுதியில் காட்டுமாடு ஒன்று நீருற்றுக்குள் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற வனத் துறையினா் பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி மாட்டை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனா்.

News April 3, 2024

மண் மீது சத்தியம் செய்த திலகபாமா

image

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள புது அத்திக்கோம்பை பகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அங்கு விவசாய பணியில் ஈடுபட்ட விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார். தன்னை எம்.பி. ஆக்கினார்,  விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதாக விவசாயம் மண்ணை எடுத்து பெண்கள்கையில் வைத்து சத்தியம் செய்தார்.

News April 3, 2024

பழனி: கோடையில் தாகம் தீர்த்த குரங்கு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. வெயிலை சமாளிக்க பலரும் வெயிலுக்கேற்ற உணவு வகைகளை தேடி உண்கின்றனர். மனிதர்களுக்கே இந்த நிலைமை என்றால் விலங்குகளுக்கு சொல்லவா வேண்டும். இன்று பழனி கோயிலில் குரங்கு ஒன்று தண்ணீர் தேடி அலைந்து இறுதியில் வாட்டர் பாட்டிலில் கிடைத்த 1 லிட்டர் தண்ணியை தாகம் தீர்க்க குடித்தது. இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. 

News April 3, 2024

திண்டுக்கல்லில் பிரபல நடிகை பிரச்சாரம்

image

கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடிகை ரோகிணி திமுக ஆட்சிகாலத்தில் செய்து முடித்த திட்டங்களை ம‌க்க‌ளுக்கு எடுத்துரைத்து தீவிர‌ பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிக‌ழ்வில் காங்கிர‌ஸ், ம‌னித‌ நேய‌ம‌க்க‌ள் க‌ட்சி ம‌ற்றும் விடுத‌லை சிறுத்தைக‌ள் க‌ட்சியின் முக்கிய‌ பொருப்பாளர்க‌ளும், உறுப்பின‌ர்க‌ளும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

News April 3, 2024

திண்டுக்கல்: சரக்கு பாட்டிலுக்கு தமிழ் பெயர்

image

பழனி புஷ்பத்தூர் பாமக வேட்பாளர் திலகபாமா வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டார். தமிழ்நாட்டில் திமுக அரசு சரக்கு பாட்டிலுக்கு வீரன் என்று தமிழ் பெயர் வைக்கிறது. பிரதமர் மோடி திருக்குறளை உலக அரங்கில் எடுத்துக் கூறி தமிழை வளர்க்கிறார். பிரதமர் யார் என்பதே தெரியாமல் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வாக்கு சேகரிக்க வருபவர்களை நிராகரிப்பு செய்யுங்கள் என தெரிவித்தார்.

News April 3, 2024

திண்டுக்கல் அருகே 8 பேர் கைது!

image

நத்தம் அருகே கருத்தலக்கம்பட்டி பகுதியில் உதவி ஆய்வாளர் தர்மர் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது அங்குள்ள பஸ்நிறுத்தப்பகுதியில் கும்பல் ஒன்று சுற்றி அமர்ந்து கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த போலீசார் சுற்றி வளைத்து சென்று பார்த்த போது காசு வைத்து சூதாடியது தெரிய வந்தது. அதைக் கண்ட போலீஸார் அவர்கள் வைத்திருந்த சீட்டுக்கட்டு, ரூ.1000 பறிமுதல் செய்து 8 பேரை கைது செய்தனர்.

News April 3, 2024

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி!

image

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 16,07,051 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
1821 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு ஏப்-19 தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளா்களுக்கு வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பூங்கொடி நேற்று தொடங்கி வைத்தாா்.

error: Content is protected !!