India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பங்குனி உத்திர திருவிழா, தொடா் விடுமுறை காரணமாக பழனி மலைக்கோவிலில் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். தீா்த்தக்காவடி எடுத்து வந்த பக்தா்களுக்கு கோயில் சாா்பில் தரிசனத்துக்கு தனிவழி அமைக்கப்பட்டிருந்தது. பழனி கிரிவீதியில் பேட்டரி காா்கள் இயக்கும் பேருந்து பற்றாக்குறையாக இருந்ததால், விடுமுறை நாள்களில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 10,473 அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு தொகுதிக்கும் கூடுதலாக 20 சதவீத ஊழியா்கள், இருப்பு அலுவலா்களாக தோ்வு செய்யப்பட்டனா். வாக்குப்பதிவு நாளில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், தபால் வாக்குச் சீட்டு உள்பட அனைத்து விதமான படிவங்களை நிறைவு செய்வதற்கான பயிற்சிகள், மாதிரி வாக்குச்சாவடி அமைத்து விளக்கமளிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் நடந்த பாஸ்கு திருவிழாவில் பங்கேற்க வந்த திமு கஅமைச்சர் ஐ.பெரியசாமியிடம், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது மகனை காலில் விழுந்து ஆசிபெறச் செய்தது அரசியலையும் கடந்து நட்புடன் பழகுவதை கண்ட அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அருகிலிருந்த திமுக மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ.வை அண்ணன் என, அருகில் இருந்து மேயர் இளமதியை அக்கா என அறிமுகப்படுத்தினார்.
பழனி முருகன் கோயிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மொபைல் கவுண்டர் மற்றும் காலணிகள் வைக்கும் இடத்தில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து செல்போன், காலணிகளை வைத்தும், திரும்ப பெற்று ரோப் மற்றும் வின்ச் -ல் செல்லவும் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரபாண்டியன், இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சப்- இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், போலீசார் பிரதீபன், தங்கப்பாண்டி, ஜோசப் மெரின் , மணிகண்டன் திண்டுக்கல், நிலக்கோட்டை, மைக்கேல் பாளையம், கோபால்பட்டி, அய்யலூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சட்ட விரோதமாக மது விற்ற 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 55 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
சாணார்பட்டி தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் நந்தீஸ்வரன் (21). இவர் கடந்த 1 வருடத்திற்கு முன்பாக 17 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசார் நந்தீஸ்வரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மீதான விசாரணை திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நந்தீஸ்வரன் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபணம் செய்யப்படாததால் அவரை விடுதலை செய்தனர்.
நத்தம் அருகே சேர்வீடு கிராமத்தில் வேட்டைகாரன் கோவில் புறவி எடுப்பு திருவிழா இன்று நடந்தது. விழாவையொட்டி மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் வேட்டைகாரன் சுவாமி மற்றும் குதிரை, மதலை சிலைகள் நத்தம் அவுட்டர் பகுதியில் கண் திறக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து. இதில், 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமியை தரிசித்தனர்.
வத்தலக்குண்டு அக்ரஹாரம் கோயில் தெருவை சேர்ந்தவர் சூரியநாராயணன் (78). இவரது மனைவி வசந்தா (75) ஏப் 2 உடல்நிலை பாதிப்பால் இறந்தார். இதைத்தொடர்ந்து சூரிய நாராயணன், அவரது சகோதரர் சுந்தரராஜன் (81) வீட்டில் இருந்தனர். அன்று முதல் வீடு பூட்டிய நிலையில் இருந்தது. நேற்று துர்நாற்றம் வீசத் தொடங்கியது. வத்தலக்குண்டு போலீசார் வீட்டை திறந்து பார்த்த போது சூரிய நாராயணன், சுந்தர்ராஜன் இறந்த நிலையில் கிடந்தனர்.
பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயில் ஏப்-15 காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கும் விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏப்.21 மாலை திருக்கல்யாணம், அதன்பின் சேஷ வாகனத்தில் லட்சுமி நாராயண பெருமாள் சுவாமி புறப்பாடு நடக்கிறது. ஏப்.23 திருத்தேரோட்டம் நடக்கிறது.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <
Sorry, no posts matched your criteria.