India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்லில் உள்ள மணிக்கூண்டில் எடப்பாடி பழனிச்சாமி இன்று எஸ்டிபி கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில், அதிமுக சார்பில் போடப்பட்ட மேடையால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பழனி தும்மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று கன்று ஈன்றது. கன்று ஈனுவதற்கு பசுமாடு சிரமப்பட்ட நிலையில், விரைந்து வந்த கால்நடை மருத்துவர் அளித்த சிகிச்சையால் இன்று பசுமாடு சிரமம் இன்றி கன்றை ஈன்றது. ஆனால், கன்று 6 கால்களுடன் பிறந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சர்யமடைந்தனர் . இந்த அதிசய கன்று குட்டி மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
கொடைக்கானலில் சில ஆண்டாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக தூண் பாறை பகுதியில் 3டி யானை, மோயர் சதுக்கத்தில் காட்டுமாடு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றது. தற்போது தூண் பாறையில் மேலும் மெருகேற்றும் விதமாக ஐ லவ் பாரஸ்ட் கொடைக்கானல் என்ற வாசகத்துடன் செல்பி பாயின்ட் அமைக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கொடைக்கானல் மேல்மலை வனப்பகுதியில் காட்டடுத்தீ பற்றி எரிந்து வருகிறது. பூப்பாறை, மன்னவனூர் வனச்சரக எல்லையான பாரிக்கோம்பை வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது. வெம்பாடி பகுதிக்கு காட்டுத்தீ பரவாமல் தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத்தீ காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மூலிகைச்செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் ரொக்கப்பணம் , தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், மதுபானங்கள் என மொத்தம் ரூ.3,31 கோடி பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து ரூ.8.77 லட்சம் மதிப்பிலான பணம் விடுவிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலில் துணை ராணுவப் படையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் இணைந்து ஒத்திகை மற்றும் கொடி அணிவகுப்பு இன்று நடத்தினர். நாயுடுபுரம் பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு ஏரிச்சாலை , கலையரங்கம் பகுதி , பேருந்து நிலையம் அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று மூஞ்சிக்கல் பகுதியில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் 100% வாக்களிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சி அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். உடன் ஜமாத்தார்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி, ரவுண்டானா அருகே நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர் .தொடர்ந்து அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த செயலை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மகுடீஸ்வரனை தேடி வருகின்றனர். உடனடியாக மகுடீஸ்வரன் பொறுப்பிலிருந்து இருந்து நீக்கி மாவட்ட தலைவர் கனகராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க மாநில தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
திண்டுக்கல் அருகே மாலப்பட்டி பகுதியில் 13 வயது சிறுவன் விவசாய கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தவறி விழுந்த சிறுவனின் உடலை இன்று மீட்டனர். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.