Dindigul

News April 24, 2024

திண்டுக்கல்: ரயிலில் அடிபட்டு பலி

image

திண்டுக்கல், பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஓய்வு பெற்ற காவலர் மாணிக்கம்(59) என்பவர்; திண்டுக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சரக்கு ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 24, 2024

பாலமுருகன் கோயிலுக்கு வந்த மயில்

image

ஒட்டன்சத்திரம் தாலுகா, இடையகோட்டை அருகில் உள்ள இ. அய்யம்பாளையத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் இன்று சித்ரா பௌர்ணமி பூஜைக்காக 108 -சங்கு பூஜை நடைபெற்றது. அப்போது அங்கு வட்டமடித்து சுற்றிக் கொண்டிருந்த மயில் கோவில் வளாகத்திற்குள் வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து இருந்தது. இதனை கண்ட பக்தர்கள் முருகனின் வாகனம் மயில் என்பதால் பக்தி பரவசம் அடைந்தனர்.

News April 24, 2024

பழனி: பால் வியாபாரிக்கு சரமாரி வெட்டு

image

பழனி அருகே ஆயக்குடியில் இன்று அதிகாலை பால் வியாபாரத்திற்கு சென்ற ஜெகதீசன் என்பவர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது. குடும்பத்தகராறு காரணமாக உறவினர் ராம்குமார் என்பவர் ஜெகதீசனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியதாக தெரிகிறது. ஜெகதீசனை மீட்டு ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆயக்குடி போலீசார் விசாரிக்கன்றனர்.

News April 22, 2024

தனியார் பள்ளியில் சேர்க்கை இன்று முதல் ஆரம்பம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் RTE – மூலம் 25 சதவீதம் மாணவர் சேர்க்கை இன்று ஏப்ரல்.22 முதல் மே மாதம் 21ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனwww. tnschools.gov.in என்ற முகவரியில்  விண்ணப்பித்தவுடன் பெற்றோர்களின் செல்போன் நம்பருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வரும் எனவும் அதிக அளவில் பதிவானால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகம் அறிவித்துள்ளனர்.

News April 22, 2024

சித்திரை திருவிழா – திருக்கல்யாணம்

image

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. வண்ண பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு நகைகள் சாா்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பட்டா்கள் சிறப்பு யாகம்நடத்தி பூஜைகள் செய்ய, மேளதாளம் முழங்க மங்கலநாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 7.35 மணி அளவில் தேரோட்டம் நடைபெறவுள்ளது

News April 21, 2024

பழனி கோயிலுக்கு புதிய ஆம்புலன்ஸ்

image

பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மலை மீது செல்லும் பக்தர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வசதியாக புதிய ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. நவீன மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக இன்று முதல் ஆம்புலன்ஸ் வாகனம் இயக்கப்படுகிறது.

News April 21, 2024

திண்டுக்கல்: போதிய விலை இல்லை

image

ஒட்டன்சத்திரம் தாலுகா, இடையகோட்டை பகுதியில் அதிகம் பயிரிடப்படும் முக்கிய பயிரான சூரியகாந்தி குறைந்த நீரில் மூன்று மாதங்களில் பயன் தரக்கூடிய இந்த பூவில் உள்ள விதைகளை வெளியூர் வியாபாரிகள் கிலோ 60- முதல் 70 வரை அவர்களே விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கிறனர் . இதனால் தங்களுக்கு போதிய விலை இல்லை எனவும் அரசே கொள்முதல் செய்தால் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News April 21, 2024

திண்டுக்கல் அருகே இறைச்சி விற்பனை

image

பழனி, சின்னகலையம் புத்தூர்,சிவகிரிபட்டி பகுதிகளில் இறைச்சி கடைகள் இன்று திறந்து விற்பனை நடைபெறுகிறது.மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் திறக்க இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி இறைச்சிக் கடைகள் திறந்து விற்பனை செய்யப்படுகிறது. சுகாதாரத் துறை அதிகாரிகள் , ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News April 21, 2024

வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

image

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பழனி,ஒட்டன்சத்திரம்,ஆத்தூா்,நிலக்கோட்டை, நத்தம்,திண்டுக்கல் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,812 வாக்குச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறைகளுக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அந்த வளாகம் முழுவதிலும் 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

News April 21, 2024

வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

image

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பழனி,ஒட்டன்சத்திரம்,ஆத்தூா்,நிலக்கோட்டை, நத்தம்,திண்டுக்கல் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,812 வாக்குச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறைகளுக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அந்த வளாகம் முழுவதிலும் 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

error: Content is protected !!