India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேவுகம்பட்டி திமுக செயலாளர் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான 62 சென்ட் நிலத்தை தங்கராஜின் கையெழுத்து இல்லாமல் அய்யம்பாளையம் சார்பதிவாளர் பாலமுருகன் உதவியுடன் மதுரை உத்தங்குடியை சேர்ந்த கிறிஸ்டோபர் சாமுவேலுக்கு திருவள்ளூரை சேர்ந்த பெலிக்ஸ்மார்ட்டின் உள்ளிட்டோர் விற்றுள்ளனர். தங்கராஜ் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் சார்பதிவாளர் பாலமுருகன் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகமுதலமைச்சர். மு. க. ஸ்டாலினை நேற்று அவரது இல்லத்தில் திண்டுக்கல் மக்களவை தொகுதி திமுக கூட்டணியின் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
பழனி ஆவணி மூல வீதியில் உள்ள தனியார் மடத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று சித்திரகுப்தர் சிறப்பு பூஜை நடைபெற்றது. இளநீர், நுங்கு, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் படையல் இடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட மேடையில் சித்திரகுப்தருக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சித்திரகுப்த நாயரை வணங்கினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தட்டச்சு தேர்வானது நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வினை எழுதினர். இதில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இருபிரிவுகளின் கீழ் நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று(ஏப்.24) வெயிடப்பட்டது.<
திண்டுக்கல் மலைக்கோட்டை, சுமார் 290 அடி உயரம் கொண்ட இந்த மலைக்கோட்டை சுமார் 1210 அடி நீளமும், 900 அடி அகலமும் கொண்டது. இது புரட்சி காலகட்டத்தில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர்களின் கட்டுப்பாட்டில் இருந்து, 1790 இல் இக்கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி 1860 வரை ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கைதி அறைகள், ஆயுதக்கிடங்குகள்மற்றும் பீரங்கிகள் போன்றவையை இங்கு காணலாம்.
திண்டுக்கல் நகரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்று (ஏப்.24) கோடை கால வெயிலின் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க திண்டுக்கல் வடக்கு காவல் துறையினரும் தனியார் மாத பத்திரிக்கை நிறுவனமும் இணைந்து ரவுண்ட் ரோடு பகுதியில் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளனர். துவக்க நாளான இன்று நீர்மோர், தர்பூசணி பழம், குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கொடைக்கானல் பெருமாள்மலையை சேர்ந்தவர் முனியாண்டி. பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது சென்பகனூர் அருகே 3 இளைஞர்கள் பேருந்தை தவறவிட்டதாக கூறி லிப்ட் கேட்டுள்ளனர். பரிதாபப்பட்ட முனியாண்டி மூவரையும் ஏற்றி டோல்கேட் அருகே சென்ற போது தாங்கள் வைத்திருந்த கத்தியால் முனியாண்டியை தாக்கி வாகனத்தினை கடத்த முயன்றனர். விரைந்து வந்த போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செல்வம் தலைமையிலான அதிகாரிகள் மெயின்ரோடு , கோவிந்தாபுரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 3 கடைகளில் இருந்து 20 கிலோ குட்கா பறிமுதல் செய்து 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் காசா, கல்லாமி , செந்தூரம், மல்கோவா, அல்போன்சா போன்ற மா ரகங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்படுகின்றன. மாம்பழ சீசன் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி ஜூலை வரை நீடிக்கும். மழையின்மை , கடும் வறட்சி, பூக்கும் காலதாமதம் ஆகிய காரணங்களால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு கிலோ செந்தூரம் மாம்பழம் ரூ.100 முதல் ரூ.110விற்பனை செய்யப்படுகிறது.
நத்தம் அருகே வத்திபட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (13). வத்திப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளியின் இறுதித் தேர்வு முடிந்தது தனது அண்ணன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து வத்திப்பட்டி அருகே உள்ள சொக்கன் ஆசாரி குளத்தில் குளிக்க சென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
Sorry, no posts matched your criteria.