India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், இன்று திண்டுக்கல் மாநகர் முழுவதும், வால் போஸ்டர் ஓட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில் ‘டாஸ்மாக் ஊழல்’, அந்த தியாகி யார்?, 1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து, 1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. இது திமுகவை தாக்கி அடிக்கப்பட்ட போஸ்டர் என்று, மக்களால் பேசப்படுகிறது. இந்த போஸ்டரால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லிங்கமநாயக்கர் அரண்மனைக்கு பசும்பால் போதவில்லை என பக்கத்து ஊரியில் இருந்து கொண்டு வந்த பணியாளர், ஒரு நாள் களைப்பாக இருப்பதாக பால் குடத்தை மரத்தின் கீழே வைக்கும் போது அதில் இருந்த பால் மாயமானது. அந்த இடத்தில் தோண்டி அம்மன் சிலையை எடுக்கும் போது, தோளில் பட்டு ரத்தம் வந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. ‘ரத்தம் பீறிட்ட அம்மன், ரத்தம் காட்டிய அம்மன்’ என நாளடைவில் நத்தம் மாரியம்மன் ஆனது. (SHARE பண்ணுங்க)
திண்டுக்கல்லில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மாவட்டத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க, Share பண்ணுங்க.
திண்டுக்கல் மாவட்டத்தில் 22.03.2025-ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு நேராந்து பணியை நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வடமதுரையில் தென்னம்பட்டி பிரிவு நான்கு சாலையில் இரு சக்கர வாகனத்தில் பிரேம்குமாரும் அவருடைய அத்தை மீனா என்பவரும் நான்கு வழிச்சாலையை கடந்தனர். அப்பொழுது உடுமலைப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணபிரசாந்த், அவருடைய மனைவி சண்முகபிரியா இருவரும் காரில் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பிரேம்குமார், மீனா, சண்முகப்பிரியா காயம் அடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 60,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க மார்ச்.24 கடைசி நாள் ஆகும். <
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று(மார்ச்.22) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க. ஷேர் பண்ணுங்க.
திண்டுக்கல்லில் இன்று 21-03-2025 இரவு 11.00 மணி முதல் நாளை சனிக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது…
தமிழ்நாட்டில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் (மார்ச் 21, 22) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், தமிழ்நாட்டில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 60 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். இதற்கு மார்ச்.21 முதல் ஏப்ரல்.21 வரை விண்ணப்பிக்கலாம். (Share பண்ணுங்க)
Sorry, no posts matched your criteria.