India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள எல்லைப்பட்டி கோவில் திருவிழாவில் இன்று ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த எருது விடும் போட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாடுகள், மற்றும் அதன் உரிமையாளர்கள் பங்கேற்றனர். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்ச்சியான இதை காண திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் மக்கள் காண வந்திருந்தனர்.
பழனியைச் சேர்ந்த 3 மாணவர்கள் ஸ்கேட்டிங் செய்தபடியே 30 நிமிடம் யோகாசனம் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். தக்சதர்ஷன் , ஹர்னேஷ் , ஆதித்யா ஆகிய மூவரும் தொடர்ச்சியாக பயிற்சி எடுத்து ஸ்கேட்டிங்கில் யோகா செய்ததற்காக நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் உலக சாதனையாக பதிவு செய்துள்ளது. சாதனை மாணவர்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் பலரும் பாராட்டினர்.
கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சி மே மாதம் நடைபெற உள்ளது. பூங்கா நிர்வாகத்தினர் பராமரிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 கட்டமாக ஊட்டி, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் சுமார் 2½ லட்சம் மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது. தற்போது அந்த நாற்றுகள் பூக்க தொடங்கி சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் மதுரை கோட்டத்திற்குட்பட்ட TN57N2410 என்ற அரசு பேருந்தில் திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்து என்று இடம் பெற்றிருக்கும் மின்னணு பெயர் பலகையில் வேற்று மொழி பெயர் பலகையுடன் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்தது. பொள்ளாச்சி பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் தமிழ் சொற்களுக்கு பதிலாக வேற்று மொழியில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பழனி துணைமின் நிலையத்திற்குட்பட்ட ஆயக்குடி பீடரில் கொடைக்கானல் சாலை உயர் அழுத்த மின் பாதையில் பாராமரிப்பு பணிகள் இன்று (ஏப்.26) நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை அய்யம்புள்ளி, ஆலமரத்துக்களம், தேக்கம்,தோட்டம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அணிக்கான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 14, 16 வயது பிரிவில் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி உடையோர் பிறப்பு சான்றிதழுடன் விளையாட்டு உபகரணங்கள், வெள்ளை சீருடையில் ஏப்.27 ல் சீலப்பாடி பிரசித்தி வித்யோதயா பள்ளியில் நடக்க உள்ள வீரர்கள் தேர்வில் பங்கேற்கலாம் என செயலாளர் அமர்நாத் தெரிவித்துள்ளார்.
பழனி சாலையில் உள்ள இடையபட்டியில் பகவதியம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா இன்று 25.04.2024- துவங்கியது. இன்று நடந்த கொடியேற்று விழா நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு முகூர்த்த கால் ஊன்றி கோவில் திருவிழாவை துவங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த திருவிழாவில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்பது முக்கியமானதாகும்.
பழனி மார்க்கெட்டுக்கு விவசாயிகள் காய்கள், பழங்கள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் எலுமிச்சை பழம் வரத்து குறைவாக உள்ளது. மக்கள் அதிகம் எலுமிச்சை பழம் வாங்குவதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறையில் ஒரு பழம் ரூ. 8 முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பேட்டரி வாகனமும், ஆம்புலன்ஸ் வசதியும் இன்று கொண்டுவரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறநிலைத்துறை அலுவலர்களும், கோயில் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் மின் வாகனங்கள் பக்தர்கள் வசதிக்காக அதிகப்படுத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரியின் இலவச லேப்டாப் திட்டம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது. விரைவாக பதிந்து கொண்டு இதனை 15 பேருக்கு அனுப்பினால் உங்கள் விண்ணப்பம் பூர்த்தியாகும் என வாட்ஸ் அப்பில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரியான திட்டம் எதுவும் இல்லை இது போலி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.