India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து ஆதரவற்றோர் முதியோர் மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இவ்வில்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பயனடைய https://www.msmetamilnadu.tn.gov.in/aabcs என்ற இணைய முகவரியை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மாவட்ட தொழில் மையத்தை 8925533943 தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளோர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் வந்து விண்ணப்ப படிவத்தினை பெற்றுக்கொள்ளலாம். மேலும், https://tnvelaivaaippu.gov.in (அ) www.Invelaivaaippu.gov.in இணையதளத்தில் படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.
திண்டுக்கல்: பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன்கள் பவித்ரன்(30), ஹரிஹரன்(26). இந்நிலையில் கள்ளக்காதல் தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக அண்ணன் பவித்ரன் தம்பி ஹரிஹரனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புத்த, சமண, சீக்கிய மதத்தினர் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்/ சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ அல்லது www.bcmbcmw.tngov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. 18 வயது முதல் 27 வயதுரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை 24ஆம் தேதியே கடைசி நாள். அருகில் உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE!
▶️விண்ணப்பிக்கும் முறை(<<17001655>>CLICK HERE<<>>)
▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு மதுரை, திருச்சி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க் ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
உரிய ஆவணங்களுடன் விண்ணபிக்க<
திண்டுக்கல் மாவட்டத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை(ஜூலை 10) வேடசந்தூஎ, லகுவனம்பட்டி, நகம்பட்டி, முதலியார் பட்டி, அய்யம்பாளையம், விராலிப்பட்டி, புதுப்பட்டி, சின்னக்காம்பட்டி, அண்ணாநகர், பாறைப்பட்டி, வலையப்பட்டி, ஜவ்வாதுப்பட்டி, இடையக்கோட்டை ஆகிய பகுதிகளிளில் காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அக்கம் பக்கத்தினருக்கு உடனே SHARE பண்ணுங்க!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மூஞ்சிக்கல்லில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (கலையரங்க கூடத்தில்) ஜூலை.10 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான சிறப்பு முகாம் அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணிவரை நடைபெற உள்ளது. இதில் 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
இதில் அதார் நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படங்கள் 4 உடன் கலந்து கொள்ளலாம்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மெயின்ரோடு சிறுமலைபிரிவு அருகில் அமைந்துள்ள கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பெண்களுக்கான இலவச ஆரி ஒர்க் , எம்ப்ராய்டரி பயிற்சிக்கான முன்பதிவு இன்று ( ஜூலை 8 ) முதல் நடைபெறுகிறது. இதில் 18 வயது முதல் 45 வயதுடைய பெண்கள் கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு : 88700 76537, 83449 50658, 90802 24511
Sorry, no posts matched your criteria.