India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல், வேடசந்தூர் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ தண்டபாணி(75) உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இவர் வேடசந்தூர் தொகுதியில் 2005 முதல் 2011 வரை எம்எல்ஏ-வாக இருந்தவர். 1986-ல் ஒட்டன்சந்திரம் ஒன்றிய தலைவராகவும், 1996 முதல் 2006 வரை ஒட்டன்சத்திரம் மாவட்ட கவுன்சிலராகவும், 1998 டூ 2013 வரை திண்டுக்கல் மாவட்ட காங்., தலைவராகவும் இருந்தார். இறுதி ஊர்வலம் இன்று(28.10.24) வேடசந்தூரில் நடைபெறுகிறது.
திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை இன்று இரவு 11.00 மணி முதல், திங்கட்கிழமை நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
1.சின்னாளபட்டி அருகே மின்வேலியில் சிக்கி ஒருவர் பலியானார்.
2.திண்டுக்கல்லில் மருது பாண்டியர் சகோதரர்களின் 223 வது குருபூஜை விழா நடைபெற்றது.
3.நத்தம் அருகே டிராக்டர் சக்கரம் ஏறி பெண் பலியானார்.
4.பள்ளப்பட்டி மாவூர் அணை நிரம்பி தண்ணீர் வெளியேற்றம்
5.சேடபட்டி, முனியப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் அன்னதான நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சமூக வலைத்தளங்களில் தினமும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்களிடம் நட்பு கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அவர்கள் பெண்கள் போல் பேசி உங்களிடமிருந்து பணம் பறிக்க வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டலம் சார்பில் சென்னை, கோவை, திருப்பூர், சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.வருகிற 28ஆம் தேதி – நவ. 4ஆம் தேதி வரையிலும் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மண்டலப் பொதுமேலாளர் அ.சசிக்குமார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சமூக வலைதள பக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதேபோல் தற்போது பெய்து வரும் கனமழை தொடர்பாக (மழைக் காலங்களில் மின்கம்பங்கள் அருகில் அல்லது பழைய கட்டிடங்களுக்கு அடியிலோ நிற்பதை தவிர்க்கவும்) என்ற புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் காலசந்தி பூஜை, திருமஞ்சன கட்டளைக்காக 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு சமூக செப்பேடு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மெட்ரோபாலிடன் அருங்காட்சியகத்தில், ஆசியப் பிரிவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இச்செப்பேடு, 34.3 செ.மீ., உயரம், 23.8 செ.மீ., அகலத்தில் உள்ளது. இரு பக்கமும்,119 வரிகளில் எழுதப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 27-10-2024, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1.பழனி 400 தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.
2.சண்முக நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
3.பழனி முருகன் கோயில் கந்த சஷ்டி துவக்கம்
4.வேடசந்தூர்: கார் சென்டர் மீடியினில் மோதி விபத்து 3 பேர் காயமடைந்தனர்.
5.எத்தலப்பநாயக்கனூர் பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை: 2 பேர் கைது
பழனி பாலாறு பொருந்தலாறுஅணை தொடர்மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. அணையிலிருந்து சண்முக நதி ஆற்றில் 200 கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கூடுதல் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சண்முக நதி ஆறு செல்லும் கோரிக்கடவு, மானூர், நரிக்கல்பட்டி கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.