Dindigul

News April 25, 2025

ரயில்வேயில் வேலை வாய்ப்பு

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 காலிபணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். இதற்கு <>இங்கு கிளிச் செய்து <<>>ஏப்.12 முதல் மே.11க்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு குறித்து மதுரை ரயில்வே கோட்டம் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளது. SHARE பண்ணுங்க.

News April 25, 2025

திண்டுக்கல் மாவட்டத்தில் மழை

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது. இதனால், இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. மக்களே, உங்க ஏரியாவில் மழை பெய்து இருந்தால் கமெண்ட் பண்ணுங்க

News April 24, 2025

கொடைரோடு அருகே பெண் சிசுக்கொலை தாய் கைது

image

அம்மையநாயக்கனூர் சிசுக்கொயில் மருத்துவ குழுவினர் தலைமையில் இன்று குழந்தையின் உடல் தோண்டி எடுத்து சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
விசாரணையில் ஏற்கனவே பெண் குழந்தை இருக்கும் நிலையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் வளர்க்க முடியாது என்றும் கணவர் திட்டுவார் என மன உளைச்சலில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு செய்து சிவசக்தி தாயாரை கைது செய்தனர்.

News April 24, 2025

எஸ்.ஐ. ஆக ஆசையா? திண்டுக்கல்லில் இலவச பயிற்சி!

image

திண்டுக்கல் : காவல் சார்பு ஆய்வாளர்கள்(Police Sub-Inspectors) பதவிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன; கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரடியாக தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம். இதை ஷேர் செய்யுங்கள்.

News April 24, 2025

கொடைரோடு அருகே பெண் சிசுக்கொலை தாய் கைது

image

அம்மையநாயக்கனூர் சிசுக்கொயில் மருத்துவ குழுவினர் தலைமையில் இன்று குழந்தையின் உடல் தோண்டி எடுத்து சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
விசாரணையில் ஏற்கனவே பெண் குழந்தை இருக்கும் நிலையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் வளர்க்க முடியாது என்றும் கணவர் திட்டுவார் என மன உளைச்சலில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு செய்து சிவசக்தி தாயாரை கைது செய்தனர்.

News April 24, 2025

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது!

image

திண்டுக்கல்: மைலாப்பூரைச் சேர்ந்தவர் வில்லியம்சார்லஸ் (41). இவருக்கும் இவரது மனைவி வேளாங்கண்ணி லீமா ரோஸ் (39) என்பவருக்கும் குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வில்லியம்சார்லஸ், மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாலுகா போலீசார் வில்லியம்சார்லஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News April 23, 2025

தோஷம் தீர்க்கும் சீனிவாசப் பெருமாள்!

image

திண்டுக்கல் : ரங்கநாதபுரம் மலையில் அமைந்துள்ள சீனிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள மூலவரை ’கல்யாண சீனிவாசன்’ என்றும் அழைப்பர். இந்தப் பெருமாளை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், இக்கோயிலில் நெல்லி இலைகளை வைத்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் பித்ரு தோஷங்களும் தீரும் என்கிறார்கள் பக்தர்கள் . பிரச்சனை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 23, 2025

சின்னாளப்பட்டி காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!

image

சின்னாளப்பட்டி அருகே’கிரிண்டர்’ என்ற ஆப் மூலம் பெண் போல் பேசி நவீன முறையில் ஏமாற்றி செல்போன் & டூ வீலர் பறித்த அபிநயவேல், முத்துசெல்வன் (சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் நபர்), வினோத்குமார், வெற்றிவேல்முருகன், அருண்குமார், பிரவீன்குமார், கார்த்திகேயன் & 17வயது சிறுவன் உட்பட 8 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.சென்னை காவல் ஆணையர் அருண்
இதனை தடை செய்யக்கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்

News April 23, 2025

திண்டுக்கல்: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 235 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.

News April 23, 2025

திண்டுக்கல்: அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

image

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE!

error: Content is protected !!