Dharmapuri

News September 11, 2025

தருமபுரியில் போலீஸ் அத்துமீறலா? இதை செய்யுங்க!

image

தருமபுரி மக்களே, போக்குவரத்து காவலர்கள் உங்கள் பைக் சாவியைப் பிடுங்குவது, அநாகரிகமாகப் பேசுவது அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், கவலை வேண்டாம். உடனடியாக இந்த <>லிங்க் <<>>மூலம் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம். புகார் மீது உங்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) மூலம் நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு கிடைக்கும். இனி கவலையில்லாமல் பயணம் செய்யுங்கள். இதை உங்க நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News September 11, 2025

தகடூர் மன்னன் அதியமானைப் பற்றி தெரியுமா?

image

சங்க காலத்தில் இன்றைய தருமபுரி மாவட்டம் தகடூர் என அழைக்கப்பட்டது. இதனை சேரர் மரபைச் சேர்ந்த அதியமான் நெடுமானஞ்சி ஆட்சி செய்து வந்தார். இவர் இறும்பொறையூர், ஆரைக்கால் என அழைக்கப்பட்ட இன்றைய நாமக்கல் பகுதியையும் ஒருசேர ஆண்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. சாகாவரம் பெற நெல்லிக்கனியை ஒவைக்கு அளித்ததால், இவர் இன்றளவும் நினைவு கூறப்படுகிறார். இவர் கடையேழு வள்ளல்களில் ஒருவராகவும் திகழ்கிறார். ஷேர் பண்ணுங்க!

News September 11, 2025

தருமபுரி: சொந்த ஊரில் அரசு வேலை!

image

தருமபுரி, ஊரக வளர்ச்சி & ஊரகத் துறை சார்பில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
▶️ஈப்பு ஓட்டுநர்-ரூ.19,500-ரூ.71,900
▶️பதிவறை எழுத்தாளர்- ரூ.15,900-ரூ.58,500
▶️அலுவலக உதவியாளர்-ரூ.15,700-ரூ.58100
▶️இரவு காவலர்-ரூ.15,700-ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
▶️கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
▶️விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்., 30 என அறிவிக்கப்பட்டுள்ளது. <>மேலும் தகவலுக்கு<<>>.
ஷேர் பண்ணுங்க!

News September 11, 2025

தர்மபுரி ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!

image

தர்மபுரி, காரிமங்கலத்தில் அரசு பதிவு பெறாமல் இயங்கிவந்த 32 செங்கல் சூளைகளுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டிருந்தது. மேலும், தமிழ்நாடு புவியியல் & சுரங்கத்துறையின் இணையதளத்தில் செப்.,3-ம் தேதிக்குள் பதிவு செய்ய காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த சூளைகள் இணையதளத்தில் பதிவு செய்யாததால், மாவட்ட ஆட்சியர் சதீஷ் குமார் இந்த சூளைகளை சீல் வைக்க காரிமங்கலம் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

News September 11, 2025

எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி: தருமபுரி மாணவிகள் சாதனை

image

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட தனியார் கல்லூரி மாணவி நர்மதா மாநில அளவில் மூன்றாம் இடமும், ரோஜா மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்தனர். சென்னையில் நடைபெற்ற விழாவில் சுகாதார துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

News September 10, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.10) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்புஎண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 10, 2025

மருத்துவ முகாமின் செயல்பாடுகள் ஆய்வு கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பெறப்பட்ட மனுவின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும், இணைய வழி இ-பட்டாக்கள் குறித்தும் மற்றும் “நலம் காக்கும் ஸ்டாலின்” முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குனர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

News September 10, 2025

தர்மபுரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.பெறப்பட்ட 57 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டன. இத்தகைய முகாம்கள் காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துகின்றன.இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

News September 10, 2025

எஸ்.பி அலுவலகத்தில் குறை தீர் முகாம்

image

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று தருமபுரி  மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது .இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். பொதுமக்களால் வழங்கப்பட்ட 57 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 57மனுக்களுக்கும்  தீர்வுகாணப்பட்டது.
இன்று புதிதாக 45 மனுக்கள் பெறப்பட்டன.

News September 10, 2025

தர்மபுரி: விபத்தில் சமையல் மாஸ்டர் பலி

image

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கன்னிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சமையல் மாஸ்டர் பூவரசன். இவரது மனைவி பூர்ணிமா. இவர்களுக்கு கடந்த, 7 மாதங்களுக்கு முன் திருமணமானது.நேற்று (செப்-9) அவர் தர்மபுரி-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் கெரகோடஹள்ளி அருகே சென்றபோது, அங்கு நின்றிருந்த சரக்கு லாரியின் பின்பக்கம் பைக் மோதியது. இதில் பூவரசன், சம்பவ இடத்திலேயே பலியானார்.

error: Content is protected !!