India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நல்லகுட்லஅள்ளி பெரியண்ணன் தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச நேற்று சென்ற போது பாம்பை கண்டு பயந்து கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், சிகிச்சை பெற்ற பெரியண்ணன் உயிரிழந்தார். இது குறித்து கடத்தூர் காவலர்கள் வழக்குப்பதிவிட்டு விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அன்னசாகரம் பகுதியில் வீற்றிருக்கும் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சிவசுப்பிரமணிய சுவாமியின் திருத்தேரினை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்கும், சிறப்பு விழா வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனின் அருள் பெற்றனர்.
மோப்பிரிப்பட்டியை சேர்ந்த பிரகாஷ்-ஜெயசுதா தம்பதிக்கு நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது பிரகாஷ், ஜெயசுதாவை தாக்கியுள்ளார், அதனை தொடர்ந்து ஜெயசுதா மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக ஜெயசுதாவை அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜெயசுதாவின் தாய் நேற்று அரூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
▶️தர்மபுரி மாவட்ட ஆட்சியர் 04342231500 ▶️மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது): 231500 ▶️தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் 9445000908 ▶️தர்மபுரி தீயணைப்பு நிலையம் 04342230100 ▶️தர்மபுரி போக்குவரத்து அலுவலகம் 9384808242 ▶️தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 9499055945 முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
தர்மபுரி சேலம் சாலை உள்ள தனியார் மருத்துவமனையில் மேலாண்மை இயக்குநர் சங்கீதா மருந்துகள் வழங்கும் பிரிவில் நேற்று ஆய்வு மேற்கொண்ட போது, உபகரணங்கள் வாங்குவதில் சுமார் 3 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பது கண்டுபிடித்து தர்மபுரி எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்தார். மகேஸ்வரி, கஸ்தூரி கார்மேகம், நந்தேஷ்குமார் ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரையும் காவலர்கள் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது திருத்தங்கள் செய்ய நாளை ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் தாலுகா அலுவலகங்களில் நடத்தப்படுகின்றன. ரேஷன் கார்டுடன் தொடர்புடைய எந்தவொரு கோரிக்கைகளையும் நீங்கள் தெரிவிக்கலாம். இதில், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்றவற்றை இலவசமாகவே செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
தருமபுரி மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும். 18-40 வயதுடைய 10th பாஸ்/ஃபெயில் ஆன பெண்கள் பிடிஓ அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் ஏப்.26 மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். *செம வாய்ப்பு. தெரிந்த 18-40 வயது பெண்களுக்கு பகிரவும்*
அக்னிவீர் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழிலும் தேர்வு எழுதலாம். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் <
தர்மபுரி மாவட்டம் நீடூரை சேர்ந்தவர் லோகநாதன், 42 நேற்று உயிரிழந்தார். இவரது உடலை அப்பகுதியிலுள்ள இடுகாட்டில் அடக்கம் செய்ய, குழி தோண்டப்பட்டது. இதற்கு சுடுகாட்டிற்கு அருகேயுள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த கடத்துார் போலீசார், வி.ஏ.ஓ., முருகன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், சுடுகாட்டில் குழி தோண்டப்பட்டு லோகநாதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வேதா பிசியோதெரபி கிளினிக் சார்பில் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி அன்று இலவச பிசியோதெரபி மற்றும் எலும்பு பரிசோதனை முகாம் தர்மபுரியில் உள்ள அம்மா கண்ணு மருத்துவமனை அருகில் நடைபெறுகிறது. இந்த முகாமில் மூட்டின் செயல்பாட்டினை கண்டறிதல் மற்றும் மூட்டுவலி, இடுப்பு வலி, கழுத்து வலி ஆகியவைக்கான பரிசோதனை அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மூலம் செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.