Dharmapuri

News April 27, 2025

மலைப்போல் குவிந்துள்ள குப்பை – நோய் தொற்று அபாயம்

image

இன்று ஏப்ரல்-27, தர்மபுரி மாவட்டப் பகுதியில் அமைந்திருக்கும் உழவர்சந்தையில் தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலையும் குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் மீதமான காய்கறிகளை உழவர் சந்தைக்கு வெளியே கொட்டி செல்வதால் மலைபோல் குவிந்துள்ள காய்கறிகளின் குப்பையில் இருந்து அழுகிய துர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம்

News April 27, 2025

அதியமான் கோட்டை அருகே ரயில்வே பணி

image

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட அதியமான் கோட்டை பஞ்சாயத்தில் அமைந்துள்ள பெங்களூர் முதல் சேலம் வரையிலான ரயில் பாதை, பராமரிப்பு பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. ரயில்வே பாதையின் இருபுறமும் மண் சரி செய்யப்பட்டு ரயில் பாதையில் சிறிய ஜல்லி கற்களையும் ரயில்வே துறை ஊழியர்கள் மாற்றம் செய்து வருகின்றனர். விரைவில் இந்த ரயில் பாதை பயன்பட்டிற்கு வரவேண்டும் என பொதுக்கல் கோரிக்கை

News April 27, 2025

எனக்கு பாதிகாப்பு தாங்க..! போலீஸிடம் நகைக்கடை உரிமையாளர் மனு

image

தர்மபுரி நகரைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் குமார் நேற்று தர்மபுரி மாவட்ட போலீஸ் மகேஸ்வரனை நேரில் சந்தித்து  ”எனது தந்தை எங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ள இடத்தில் நான் ஒரு சில கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்தேன். இந்த கட்டுமான பணிகளை எனது சகோதரர் தடுத்து நிறுத்தி தகராறு செய்து வருகிறார்”. என அவர் அளித்த இந்த மனுவை பெற்றுக் கொண்ட போலீஸார் நடவடிக்கை எடுக்கப்படும் உறூதியளித்தனர்

News April 27, 2025

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

News April 27, 2025

விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

image

சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தனா (18). தனியார் கல்லூரியில் வேதியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 23ம் தேதி பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சையில் இந்த கீர்த்தனா நேற்று உயிரிழந்தார். மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து வீசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 26, 2025

ஐஸ்வர்யம் தரும் சுயம்பு மூர்த்தி

image

தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலை பகுதியில் அமைந்துள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். இங்கு சென்று சுயம்பு மூர்த்திக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என சொல்லப்படுகிறது.
இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்!

News April 26, 2025

தருமபுரி: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு<<>> செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். ஷேர் பண்ணுங்க.

News April 26, 2025

தருமபுரியை வாட்டி வதைக்கும் வெயில்

image

தருமபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாகவே தருமபுரியில் வெயில் சதமடித்து வருகிறது. ஏப்.23 அன்று 100.4°F வெயிலும், ஏப்.24 அன்று 102.2°F வெயிலும், ஏப்.25 நேற்று 100.76 °F வெளியும் பதிவாகியுள்ளது. நாளை 27-ந்தேதி முதல் இம்மாத இறுதி வரையில் வெப்பம் அதிகரித்தே இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே!. 

News April 26, 2025

இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

image

தர்மபுரி மல்லிகார்ஜுனேஸ்வர் திருக்கோவில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம், கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.

News April 25, 2025

கண் திருஷ்டி நீக்கும் காமாட்சி அம்மன்

image

தர்மபுரி நகர் பகுதியில் கல்யாண காமாட்சி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாளித்து வரும் காமாட்சி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் கண் திருஷ்டி சாபம் விலகும் என நம்பப்படுகிறது. மேலும், நேர்த்திகடன் செலுத்தி பிரார்த்தனை செய்தால் வியாபாரம் செழிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
கண் திருஷ்டியால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்..,

error: Content is protected !!