India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவமுகாம் நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் சதீஸ் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த முகாமில் 103 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். இதில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள ‘1543’ இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது . இதற்கு 18 வயது நிரம்பிய B.Sc, B.E., B.Tech, M.Tech, ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ30,000 முதல் ரூ1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <

ஐ.டியில் வேலை தேடும் இளைஞர்கள் அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவசமாக பயிற்சி பெற்று வேலை வாய்ப்பை பெறலாம். இந்த பயிற்சி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் போன்ற மாவட்டங்களில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் இல்லை, உணவு, தங்கும் இடம் இலவசம். மேலும் மாதம் ரூ.12,000 உதவித்தொகை உண்டு. இந்த <

இலவசமாக ஐ.டி பயிற்சி பெற 2022 – 25 கல்வியாண்டில் CSE,ECE,EEE,BCA, B.Sc (CS) , MCA அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் கொண்ட கலை அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது. வயது 18 – 35க்குள் இருக்க வேண்டும். *ஐ.டி துறையில் செலவில்லாமல் பயிற்சி பெற்று வேலைக்கு செல்ல நல்ல வாய்ப்பு. வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

தர்மபுரி மக்களே நாட்டு கோழி பண்ணை அமைக்க தமிழ்நாடு அரசு 50% மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் பண்ணை அமைக்க தேவையான செலவில் பாதியை அரசு மானியமாக பெற முடியும். மேலும் 4 வார வயதுடைய 250 நாட்டுக்கோழிக் குஞ்சுகளையம் இலவசமாக இதில் பெறலாம். இதற்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவ மனைகளில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு <<17560499>>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தில் மானியம் பெற 625 சதுரஅடி நிலம், அந்த நிலத்திற்கான பட்டா, சிட்டா, அடங்கல் நகல், மின் இணைப்பு இருக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் இருந்து தள்ளி இருக்க வேண்டும். பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். *கோழி பண்ணை அமைத்து வருவாய் பெற நல்ல வாய்ப்பு ஷேர் பண்ணுங்க*

தருமபுரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 4 நீா்நிலைகளில் 1050 சிலைகள் நேற்று கரைக்கப்பட்டன. 3 நாள்கள் வழிபாட்டுக்குப் பிறகு மேள தாளங்களுடன் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட விநாயகா் சிலைகள், ஒகேனக்கல், இருமத்தூா் தென்பெண்ணை ஆறு, சின்னாறு அணை, தொப்பையாறு ஆகிய நான்கு இடங்களில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு தண்ணீரில் கரைக்கப்பட்டன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக தர்மபுரி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை துவங்கி வைத்தனர்.

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.29) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக கரிகால் பாரிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர்!

தர்மபுரி மக்களே! பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000க்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தர்மபுரி மாவட்ட சமூக நல அலுவலரை (04342-233088) அனுகலாம். SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.