India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சமூக வலைதள பதிவில்; காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த பாமக சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அரைநாள் கடையடைப்பு போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. இதை அனைத்து தரப்பு போராட்டமாக மாற்றிய அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 6வது புத்தகத் திருவிழாவில் இரண்டாம் நாளான இன்று சிறப்பு நிகழ்வாக கலை இலக்கியங்கள் பழுது பார்க்கவா? பொழுது போக்கவா? தலைப்பில் இன்று மாலை 6 மணிக்கு மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது. கலை இலக்கியத்தில் ஆர்வமுள்ள நூல் வாசகர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம் என தகடூர் புத்தகப் பேரவை தலைவர் தெறிவித்துள்ளார்.
தர்மபுரி ரோட்டரி ஹாலில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவு நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பங்கேற்றார். அரசு நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் மற்றும் பயனளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட செயலாளர் பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டில் இருந்து வந்த துறை சார்ந்த வாகனங்கள் TN29 GO583 – ரூ.1,30,000 என்றும், TN29GO650, – ரூ.1,80,000 என்றும் TN29 GO653 – ரூ.1,82,000 என்றும் வாகனங்கள், ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 18ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் ஏலம் கோரலாம் என மாவட்ட ஆட்சியர் கே.சாந்தி தனது அறிக்கையில் கூறினார்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுப்ரமணிய சிவாவின் 141 வது பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி ஆட்சித்தலைவர் கி. சாந்தி, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி ஆகியோர் அவரது படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். உடன் தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
தர்மபுரி எலைட் ரோட்டரி சங்கம் மற்றும் தீபா சில்க்ஸ் இணைந்து நடத்தும் மாபெரும் எலைட் மாரத்தான் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 20.10.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு கலந்து கொள்ள விருப்பமுடியவர்கள் www.rcdharmapurielite.in என்ற இணையதளத்தில் 15/10/2024 தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் பாத்திமா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு சிறு குறு விவசாயிகளுக்கு 100 % மானியமும் பெரு விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் ஆவணங்களுடன் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளித்து விண்ணப்பிக்கலாம். இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட விவசாயிகள், பொதுமக்களும் நீண்ட காலமாக காவிரி உபரிநீர் திட்டம் மூலம் மாவட்டத்திலுள்ள ஏரிகளுக்கு நீர் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று சட்டபூர்வமாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி முதல்வருக்கு நன்றி தெரிவித்து இன்று (அக் 04) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் படைப்பணியில் உயிரிழந்த படை வீரர்களின் கைம்பெண்களுக்கு ரூ. 1 கோடி வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது. நேரில் அணுக இயலாதவர்கள் 04342-297844 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தங்கள் பெயரினை பதிவு செய்து இத்திட்டத்தில் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள ஆராய்ந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள வறண்ட ஏரிகள் மற்றும் ஆறுகளில் காவேரி உபரிநீர் மூலம் நிரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் 3 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு பல கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.