India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று(பிப்.17) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட மைய நூலகத்தின் சார்பில் சிறுவாணி இலக்கியத் திருவிழா-2025 போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் சதீஸ் வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர் கொத்தனார், கொல்லன் மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை <
பெரும்பாலையில் நேற்று காவலர்கள் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அங்கு வேகமாக அந்த கார் காவலர்கள் நிறுத்துமாறு கூறியும் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றது. காவலர்கள் பின் தொடர்ந்த நிலையில், ஓட்டுநர் சிறிது நேரத்தில் சாலையின் நடுவில் நிறுத்தி விட்டு ஓடினார். காரை பறிமுதல் செய்த போது காருக்குள் தடை செய்யப்பட்ட 50 மூட்டை குட்காகள் இருந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.
அரூர் அருகே உள்ள உள்ளசக்கிலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த காசிநாதன் என்பவரின் வளர்ப்பு நாய் நேற்று இரவு அங்குள்ள பெண்கள், ஆண்கள் என 10க்கும் மேற்பட்ட நபர்களை கடித்தது. இதில் சக்கிலிபட்டியை சேர்ந்ததீபா (46) உண்ணாமலை (42) பழனிச்சாமி (55) இந்துமதி (35) கல்யாணசுந்தரம் (60) ஆகியோருக்கு காயம் அதிகமாக ஏற்பட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 <
கம்பைநல்லூர் ஜேஜே நகர் பகுதியை சேர்ந்த சூர்யா இவரது 2 வயது ஆண் குழந்தை நேற்று வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த சரக்கு வாகனம் குழந்தை மீது மோதியதில் படுகாயமடைந்த குழந்தையை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கம்பைநல்லூர் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நல்லபள்ளி அடுத்த காணாபட்டி நள்ளிரவு 12 மணி அளவில் வெள்ளையன் முன்னாள் மந்திரி கவுண்டர் வீட்டின் முன்பு குடிசை வீடு பயங்கர தீ விபத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தீயில் கறிகி உயிரிழந்தார். மேலும் முதியவரை அருகில் இருந்தவர்கள் தீக்காயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி பிப்15 மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஆட்சியர் சதீஷ்குமார் தெரிவித்தாவது, தருமபுரி மாவட்டத்தின் அதகபாடி பகுதியில், 1,733 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்கா (SIPCOT) அமைய உள்ளது. பல முன்னணி நிறுவனங்களான OLA ATHER ENERGY, TVS, TITAN, e-MAN AUTOMOTIVE அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளன. இதனால் இம்மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
அதியமான்கோட்டையில் 1200 ஆண்டுகள் பழமையான காலபைரவர் ஆலயம் உள்ளது. இந்த கால பைரவர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் மக்கள் வருவர். இக்கோயிலில் திருமணத் தடை உள்ளவர்கள் சாம்பல் பூசணியில் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தொன் போஸ்கோ கல்லூரி, சோகத்தூர் கூட்ரோடு, தருமபுரி வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதி உடைய நபர்களை வேலைக்குத் தேர்வு செய்ய உள்ளார்கள். இந்த முகாமில் வேலை இல்லாதவர்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.