Dharmapuri

News March 27, 2025

இந்திய ரயில்வே வேலை: சூப்பர் சம்பளம்

image

இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ, டிப்ளமோ, BE, B.tech, முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.19,900 சம்பளம் வழங்கப்படும்.

News March 27, 2025

பாறையில் தவறி விழுந்து விவசாயி பலி

image

தர்மபுரி, பாப்பாரப்பட்டி பி.கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அம்மாசி (64) விவசாயி. இவர் வீட்டின் பின்புறம் உள்ள நிலத்திற்கு சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர். அங்கு அம்மாசி பாறையின் மேல் தவறி விழுந்து இறந்து கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

News March 26, 2025

இயற்கை அழகு நிறைந்த மேலகிரி மலைகள்

image

மேலகிரி மலைகள், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு வனப்பகுதி ஆகும். பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் பெற்ற இந்த மலைகள் சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக இருக்கும். மேலும், செல்லும் வழி எங்கும் பனி மூட்டம் சூழ ரம்மியமாக காட்சியளிக்கும் மேலகிரி மலைகள் வெளிநாடுகளுக்கு டிரக்கிங் செல்லும் அனுபவத்தை நமக்கு தருகின்றன. இந்த செய்தியை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 26, 2025

நாளை இலவச இருதய பரிசோதனை முகாம்

image

தருமபுரியில் மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 12.30 மணி வரை. தருமபுரி அ.கொல்லஅள்ளி சென்னகேசவ பெருமாள் கோவில் வளாகத்தில் முகாம் நடைபெறுகிறது. இதில் இருதயம் சம்பந்தமான பரிசோதனை எக்கோ பரிசோதனை பரிசோதனை இலவசமாக பரிசோதிக்கப்படுகிறது. முகாமில் தர்மபுரி மாவட்ட மக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். ஷேர் பண்ணுங்க

News March 26, 2025

10வது பாஸ் போதும்; இலவச பயிற்சியுடன் வேலை

image

தமிழ்நாடு அரசு சார்பில், மருத்துவ துறை சார்ந்த முதியோர் பராமரிப்பு உதவியாளர் பயிற்சி தமிழ்நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், முதியவர்களை பார்த்துக்கொள்ளும் வேலைவாய்ப்புகளை பெறலாம். 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பயிற்சி – 3 மாதம். இதற்கு வயது வரம்பு கிடையாது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தினை அணுகவும். ஷேர் பண்ணுங்க

News March 26, 2025

விபரீதத்தில் முடிந்த காதல் திருமணம் 

image

தருமபுரி மாவட்டம் மிட்டாநூலஅள்ளி கிராமத்தை சேர்ந்த கவிதா, 8 வருடங்களுக்கு முன்பு எட்டிமரத்துப்பட்டியைச் சேர்ந்த பிரபு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், நேற்று கவிதா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது  இறப்பில் சந்தேகம் இருப்பதாக  பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மதிகோன்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 25, 2025

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணிகள் சரியாக மேற்கொள்ளப்படாமல் இருந்தது. தூய்மை பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரருக்கு ரூபாய் 10,000/- அபராதம் விதித்ததோடு, தனியார் ஒப்பந்ததாரரை மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும், இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் எச்சரித்தார். ஷேர் பண்ணுங்க

News March 25, 2025

பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

+2 பொதுத் தேர்வு இன்றுடன் முடிவடையும் நிலையில். பள்ளி மாணவர்கள் தங்களது உயர் படிப்பை “எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம்”என்ற தலைப்பின் கீழ் நாளை மற்றும் நாளை மறுநாள் (மார்ச். 26,27) இரு தினங்களுக்கு. தர்மபுரி மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் ஹோட்டல் அதியமான் பேலஸில் இந்த இலவச உயிர் கல்வி வழிகாட்டி நிகழ்வு நடைபெறுகிறது. இச்செய்தியை 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News March 25, 2025

தர்மபுரி மக்களே இத கண்டிப்பா பண்ணிடுங்க!

image

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தவறும் பட்சத்தில் குடும்பஅட்டை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 25, 2025

புளியமரத்தில் பைக் மோதி விவசாயி பலி 

image

கொட்டுமாரன அள்ளியை சேர்ந்தவர் தலைகொண்டான் விவசாயி. இவர் டூவீலரில் பெரியாம்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிய போது, நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.

error: Content is protected !!