India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்திற்கு இன்று கனமழையும் மற்றும் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கிய புகாரில் தர்மபுரியை சேர்ந்த காவல் ஆய்வாளர் நெப்போலியன் கைது செய்யப்பட்டார். நீர்வளத்துறை கையகப்படுத்திய நிலத்தில் இருந்து 30 தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் என்பவர் வெட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனிப்படையினர் நெப்போலியனை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் ஏமனூரில் தந்தத்திற்காக ஆண் யானையை கொன்றதாக கைது செய்யப்பட்ட செந்தில் என்பவர் கடந்த மாதம் 18ஆம் தேதி கைவிலங்குடன் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் ஏமனூர் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் அழுகிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் திட்டமிட்டே வனத்துறையினர் செந்திலை கொன்று விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <
தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் தங்களுக்கு முறையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி கேட்டு மாணவ-மாணவியர் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். தங்களால் தான் தமிழ்நாடு முன்னேறியது என்றெல்லாம் பெருமை பேசும் 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் அடிப்படை தேவையான கழிவறை மற்றும் குடிநீர் வசதிகூட ஏற்படுத்தி தரவில்லை என்பது வெட்கக்கேடானது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று, காரிமங்கலம், பென்னாகரம், இண்டூர், தீர்த்தமலை போன்ற பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாளை (ஏப்ரல்.5) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் தனிநபர் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும் கிராம மட்டத்தில் 10, 20 பெண்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுக்கள் ஆகும் இந்த குழுக்களுக்கு சுழல் நிதி கடன் பொருளாதார கடன் வங்கி கடன்கள் வழங்கப்படுகின்றது. இந்த கடன் உதவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தர்மபுரி கலெக்டர் சதீஷ் அறிவுறுத்தியுள்ளார்.
கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ், தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்க விண்ணப்பிக்க தேவையான முக்கிய தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை LKG மற்றும் 1-ம் வகுப்பில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். வரும் ஏப்ரல்.22 முதல் மே.20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தருமபுரி மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
மேலே நீங்கள் பார்க்கும் படம் ஊட்டியோ, கொடைக்கனலோ அல்ல. கிழக்குத்தொடர்ச்சி மலைகளுள் ஒன்றான சித்தேரிமலை தான். தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள சித்தேரிமலை பசுமையான காடுகளையும், அழகிய மலை தொடர்களையும் செல்லும் வழி எங்கும் ரசித்துக் கொண்டே செல்லலாம். தற்போது வெயில் வாட்டி வைத்து வரும் நிலையில், இங்கு குடும்பத்துடன் சென்றால் அமைதியான சூழலில் பொழுதை கழிக்க இது ஒரு நல்ல ஸ்பாட். ஷேர் பண்ணுங்க
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணிணி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.