Dharmapuri

News September 14, 2025

ஒகேனக்கலில் தொடரும் தடை

image

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகள் நிரம்பிவிட்டன. பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. எனவே, ஒகேனக்கலில் பொதுமக்கள் குளிப்பதற்குத் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

News September 14, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் காவல் நிலைய வாரியாக இரவு ரவுண்ட்ஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட இரவு ரவுண்ட்ஸ் அதிகாரியாக ஹரூர் துணை பிரிவு காவல் கண்காணிப்பாளர் எஸ்.கரிகல் பாரி சங்கர், டி.எஸ்.பி. பொறுப்பேற்றுள்ளார். அதிகாரிகளின் கைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

News September 13, 2025

தர்மபுரி: SBI வங்கியில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News September 13, 2025

தருமபுரி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

தருமபுரி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
▶️2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.
▶️ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
▶️வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
▶️மீறினால் தொடர்புடைய அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 13, 2025

தர்மபுரி: டிகிரி இருந்தால் ரிசர்வ் வங்கியில் வேலை!

image

தர்மபுரி மக்களே, ரிசர்வ் வங்கியில் கிரேட்-பி பிரிவில் 83 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.55,200 – ரூ.99750 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 21-30. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 30க்குள் இந்த <>இணையத்தில் <<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News September 13, 2025

தர்மபுரி: வாங்கிய பொருளை மாற்ற மறுத்தால் புகார் அளிக்கலாம்

image

கடைகளில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்ற மறுத்தாலோ அல்லது பணத்தைத் திரும்பத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற (அ) பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. தர்மபுரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News September 13, 2025

தர்மபுரி: திருமண ஆசை காட்டி 16 வயது சிறுமி கடத்தல்

image

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள செங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் திருமண ஆசை காட்டி கடத்திச் சென்றதாக சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிறுமி முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

News September 13, 2025

தருமபுரியில் தீபாவளி பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

தருமபுரி மாவட்டத்தில் தீபாவளிக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். ஊராட்சி வரி ரசீது, கட்டட வரைபடம், கட்டட வரி ரசீது, ஒப்பந்த பத்திரம் மற்றும் ₹600 செலுத்தியதற்கான வங்கி சலான் ஆகியவை வேண்டும். கல் அல்லது தார்சு கட்டிடங்களில் மட்டுமே கடைகள் அமைக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளார். ஷேர்

News September 13, 2025

பருத்தி, துவரைக்கு பயிர் காப்பீடு செய்ய அதிகாரி அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காரி பருவப் பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், பருத்திக்கு ஏக்கருக்கு ரூ.13,978 வரையும், துவரைக்கு ரூ.17,000 வரையும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். துவரைக்கு செப்டம்பர் 16-ம் தேதியும், பருத்திக்கு செப்டம்பர் 30-ம் தேதியும் விண்ணப்பிக்க கடைசி நாள் என வேளாண் இணை இயக்குனர் அறிவித்துள்ளார்.

News September 13, 2025

ஆதிதிராவிடர் நலத் திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம்

image

தருமபுரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்களை இனி CM-ARISE இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ரெ.சதீஸ், அறிவித்துள்ளார். சமூக நலத்திட்டங்கள், பிரதம மந்திரி ஆதி ஆதர்ஷ் கிராம் யோஜனா (PM-AJAY), நலவாழ்வு நில உதவித் திட்டம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் இந்த ஆன்லைன் முறை கட்டாயம் என அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!