Dharmapuri

News November 7, 2025

பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

image

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் நோக்கில் தொல்குடித் தொடுவானம் திட்டத்தின் கீழ்
08-11-2025 அன்று சேலம் மல்லூரில் உள்ள தி கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பயிற்சிகள் அளிக்கப்படும்.18 வயது முதல் 33 வரையிலான ஆண்-பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். என ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம்

image

தருமபுரி மாவட்டத்தில், 2025-2026 கல்வியாண்டிற்கு வெளிநாடு சென்று படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம் வெளியாகி உள்ளது. இந்த விவரங்களை www.tabcedco.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து மத்திய கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். என்று ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News November 7, 2025

தருமபுரி: வீடு புகுந்து தாக்குதல்!

image

தருமபுரி, பெரியாம்பட்டியில் முன் விரோதம் காரணமாக, மணிபாரதி என்பவரது இல்ல நிச்சயதார்த்த விழாவில், 2 பெண்கள் உள்பட 3 பேரை ஒரு கும்பல் தாக்கியது. இது தொடர்பாக மணிபாரதி அளித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார், அடிலம் பகுதி ஆனந்தன், மாதேஷ், மணிகண்டன், சிவக்குமார், காசன், ரஞ்சித், வேடியப்பன் ஆகிய 7 பேரை  கைது செய்து காரிமங்கலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

News November 7, 2025

அலுவலக ஈப்பு பொது ஏலம் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலக ஈப்பு (வாகன எண். TN09BG 2345) Bolero LX என்ற வாகனம் கழிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.75,000/- என்ற விலைக்கு விற்பனை செய்திட தொழில்நுட்ப வல்லுநர் குழுவினரால் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாகனத்தை வருகின்ற 07.11.2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மறு ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

News November 7, 2025

தொப்பூர் அருகே கண்டெய்னர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

image

நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் கட்டமேடு அடுத்துள்ள கணவாய் பகுதியில் (நவ.5) காலை 12 மணி அளவில் கன்டெய்னர் லாரி விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு பணியில் இருப்பவரின் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.

News November 7, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் 2025 மாதத்திற்கான கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று நவ.07-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

News November 6, 2025

மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை

image

தருமபுரி மாவட்டம், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி கலையரங்கில் ” மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் தலைமையில் இன்று (நவ.6) நடைபெற்றது. மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர்களான நீங்கள் பெற்றுக்கொள்ளுகின்ற கருத்துகள் அனைத்தும் உங்கள் வாழ்வில் தெரிவித்தார்.

News November 6, 2025

தருமபுரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்று (நவ.06) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள, தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்

News November 6, 2025

தருமபுரி: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

image

தருமபுரி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 6, 2025

தருமபுரி: விவசாயிகளுக்கு ஆட்சியரின் அறிவிப்பு!

image

தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த தருமபுரி குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (07.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!