Dharmapuri

News July 7, 2025

ரூ.122.02 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள்

image

தருமபுரி, கடந்த 4 ஆண்டுகளில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 1,57,820 பயனாளிகளுக்கு ரூ.122.02 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள், கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் தகவல் அளித்துள்ளார். 2021-22 முதல் 2024-25 வரை 411 நபர்களுக்கு ரூ.10.74 இலட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News July 6, 2025

தர்மபுரி காவல்துறை சார்பில் இரவு ரோந்து பணி

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (06.07.2025) இரவு நேரத்தில் மாவட்ட காவல்துறை சிறப்பு ரோந்து நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. மாவட்ட பொறுப்பாளராக ஆய்வாளர் திரு.ஜே.ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகி‌ய பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தொடர்பு கொள்ள தொடர்பு எண்கள் மேலே உள்ளது. பொதுமக்கள் இரவு பாதுகாப்பிற்கு தொடர்பு கொள்க.

News July 6, 2025

தருமபுரியில் பைக்கில் சென்ற பெண் லாரி மோதி பலி!

image

மொரப்பூர் சாலையில் இன்று (ஜூலை 6) முக்காரெட்டிப்பட்டியை சேர்ந்த முல்லைவேந்தன் தனது மனைவி சசிகலா (28) மற்றும் இரு குழந்தைகளுடன் தனது இருசக்கர வாகனத்தில் மொரப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து சசிகலா கீழே விழுந்ததில், பின்னால் வந்த லாரி அவரது தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News July 6, 2025

தருமபுரிக்கு வருகை தந்த அமைச்சர்

image

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நாளை (ஜூலை 7) காலை 9.00 மணிக்கு தருமபுரி கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டிடத்தை திறந்து வைக்கிறார். காலை 11 மணியளவில் தருமபுரி மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் புதிய கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார்.

News July 6, 2025

குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய பள்ளி மாணவி

image

தருமபுரி சாலை விநாயகர் கோவில் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் சஷ்மிதா ஸ்ரீ என்ற மாணவி புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக இன்று (ஜூலை 6) கூந்தல் தானம் செய்துள்ளார். இந்த நற்செயலை மேற்கொண்டதற்காக இவரையும் இவரது பெற்றோரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

News July 6, 2025

தர்மபுரி; உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

image

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும், ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு ( 04342-296188) தொடர்பு கொள்ளுங்கள். *10th முடித்த நண்பர்களுக்கு பகிருங்கள்* <<16962456>>தொடர்ச்சி<<>>

News July 6, 2025

கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் விவரம்

image

சைக்கிள், பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க

News July 6, 2025

தர்மபுரி கலெக்டர் தெரிவித்த செலவு விவரங்கள்

image

தர்மபுரி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2021-25ஆம் ஆண்டு வரை ரூ.18.09 கோடி மதிப்பீட்டில் 298 பணிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், (NNT) 2021-25ஆம் ஆண்டுவரை ரூ.13.04 கோடி மதிப்பில் 228 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.52.45 கோடி மதிப்பீட்டில் 1959 பணிகள் நடைபெற்றது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 6, 2025

வீரர்களுக்கு நிதியுதவி: தர்மபுரி ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தேசிய மற்றும் பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற, தற்போது நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. தகுதியுள்ளோர் <>இங்கு கிளிக் செய்து <<>> விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து ஜூலை 31, 2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் தெரிவித்துள்ளார். *நண்பர்களுக்கு பகிர்நது உதவுங்கள்*

News July 5, 2025

தர்மபுரி: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறையின் சார்பில் இரவு ரோந்துப் பணிக்கான அலுவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் A. சிவராமன் அவர்கள் இந்த இரவு ரோந்து பணிக்கு பொறுப்பாக உள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு உள்ளிட்ட ஒவ்வொரு பகுதியிலும் காவல் நிலையங்களின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைக்காக அனைத்து ரோந்து அலுவலர்களின் தொடர்பு எண்கள் உள்ளன.

error: Content is protected !!