Dharmapuri

News January 17, 2025

தருமபுரியில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம், அதியமான்கோட்டை, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, தொட்டம்பட்டி, இருமத்தூர் துணை மின்நிலையங்களில் உட்பட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பென்னாகரம், இண்டூர் ஏரியூர், அக்ரஹாரம், காரிமங்கலம் கெரகோடஹள்ளி , இருமத்தூர், சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க

News January 15, 2025

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் மரியாதை

image

குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை திறந்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு, திருவள்ளுவர் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று (15.1.2025) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News January 13, 2025

ஒரே ஆண்டில் அரசுக்கு ரூ. 3.40 கோடி வருவாய்

image

2024ஆம் வருடத்தில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலக செயலாக்க பணிகள் மூலம் ஆரசுக்கு மொத்தம் ரூ.3 கோடியே 41 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார். மேலும் வாகன சோதனையின் மூலமாக அரசுக்கு சாலை வரியாக ரூ.1.70 கோடியும், இணக்க கட்டணமாக ரூ.73 ஆயிரமும், வாகன சோதனை மூலம் பல்வேறு குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ. 1.60 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. 

News January 13, 2025

இந்திய விமானப்படையில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய விமானப்படையில் சேர விரும்புவோர் ஜன.7 முதல் ஜன 27 வரை விண்ணப்பிக்கலாம். வருகின்ற மார்ச். 22 அன்று இணைய வழியில் தேர்வு நடைபெறும். எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள நபர்கள் இருபால்(ஆண்/பெண்) கல்லூரி மாணவர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து கலந்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

News January 13, 2025

2025-ஆம் ஆண்டிற்கான முன்மாதிரி விருது ஆட்சியர் அறிவிப்பு

image

திருநங்கைகள் சமூகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளையும் மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து பல்வேறு துறைகளில் முன்னேறியவர்களில் ஒருவக்கு 2025-ஆம் ஆண்டிற்கான முன்மாதிரி விருது ஜன.15ல் வழங்கப்பட உள்ளது. இவ்விருத்திற்கு ரூ.1,00,000 காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://award.tn.gov.in என்ற தளத்தில் பதிவு செய்யலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்.

News January 13, 2025

2024-ம் ஆண்டில் 62 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

image

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டில் 62 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், குழந்தை திருமணங்கள் நடத்தியது தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதில் தொடர்புடைய 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குழந்தை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ஏற்படும் உடல் நல மற்றும் மனநல பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

News January 12, 2025

ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

image

நல்லம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ஆட்டுச்சந்தை நடந்தது. இதில், 700க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, 4,000 -முதல், 20,000 ரூபாய் வரை விற்பனையாகின. அதன்படி, ஒரு கோடி ரூபாய் அளவுக்கு, ஆடுகள் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

News January 12, 2025

பெண் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

image

பாலக்கோடு அடுத்த பெருங்காடு ஊ.ஒ.ந பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணி. இவர் 5ஆம் வகுப்பு மாணவிகள் 3 பேரை தினமும் கழிவறை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியதாக, மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அது உண்மை என்பது தெரிந்தது. தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திராவின் உத்தரவின் பேரில் தலைமை ஆசிரியை கலைவாணி 3 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

News January 12, 2025

தருமபுரி மண்டலத்தில் 180 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

தருமபுரி மண்டலத்தில் உள்ள திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 20ஆம் தேதி வரை 180 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு ஊர்களுக்கு செல்ல நேற்று முதல் 14ஆம் தேதி வரை 5 நாட்களும், இதேபோல் ஊர் சென்றவர்கள் திரும்புவதற்கு ஏதுவாக ஜனவரி 16ஆம் தேதியில் இருந்து 20ஆம் வரையிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

News January 12, 2025

ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை

image

தருமபுரி ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் பாதுகாப்பு மற்றும் அசம்பாவிதங்களை தவிர்க்க, தருமபுரி வழியாக வரும் ரெயில்களில் ஜி.ஆர்.பி. மற்றும் ஆர்.பி.எப். போலீசார் சோதனை மேற்கொண்டனர். ரயில் பயணத்தின் போது, உடைமைகள் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

error: Content is protected !!