India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கொட்டையூர் கிராமத்தை சேர்ந்த முனியம்மாள்(57). இவர் நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு வீட்டின் அருகில் இருந்த கம்பியில் துணியை காய வைத்தபோது மின்சாரம் தாக்கி பலியானார். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர். *எப்போதும் ஈரத்துடன் மின்கம்பிகளை தொடாதீர்கள் மக்களே. உங்கள் பகுதியில் மின் தொடர்பான குறை இருந்தால் (6380281341) வாட்ஸ்அப் பண்ணுங்க. *SHARE IT*
அக்டோபர் 2, 1965 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் அரூர் தாலுகாவை உள்ளடக்கி தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர், நிர்வாக காரணங்கள், 09-02-2004 அன்று மீண்டும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இது பழங்காலத்தில் தகடூர் என அழைக்கப்பட்டது. ஒகேனக்கல் மற்றும் தீர்த்த மலை ஆகியவை முக்கிய சுற்றுலா தலம். ஷேர்!
குடிமக்கள் கோரும் சான்றிதழ்களை தராமல் இழுத்தடித்தாலோ, சம்மந்தப்பட்ட கிராமத்தில் VAO வசிக்காவிட்டாலோ VAO மீது தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் (9445000908) எழுத்து பூர்வமாக புகார் அளிக்கலாம். அளிக்கப்படும் புகார்களுக்கு 3 – 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். VAO மீது கொடுக்கப்படும் புகார் உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வேறொரு VAO நியமிக்கப்படுவார். ஷேர்!
மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் உதவியாளருக்கான 500 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 37 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 21 – 30 க்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.22,405 – 62,265 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் ஆகஸ்ட் 17க்குள் இந்த <
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அரூரில் 42.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கம்பைநல்லூரில் 32.2 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டியில் 16 மி.மீ, தீர்த்தமலையில் 6.6 மி.மீ, பாலக்கோடு சுகர்மில்லில் 6.5 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மற்றும் ஒகேனக்கல்லில் 3 மி.மீ மழையும், பென்னாகரத்தில் 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட்.05) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ஆர். ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புஷ்பராணி, அரூர் மணிகண்டன், பென்னாகரம் செல்வமணி, மற்றும் பாலக்கோடு பாலசுந்தரம் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி ஆட்சியர் சதீஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘தர்மபுரியை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அடையாள அட்டை எண்ணினை பதிவு செய்யாமலோ அல்லது இதுவரை தங்களின் குடும்ப நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை எண் பெறப்படாமலோ இருந்தால் தர்மபுரி முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் சென்று கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார். *உங்களுக்கு தெரிந்த முன்னாள் படை வீரர்களுக்கு பகிரவும்*
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி நடைபெறும் சம்பவம் அதிகரித்துள்ளன. தேர்வு எழுதாமல் அரசு வேலை பெற முடியாது. இதுபோன்ற மோசடிகளில் உஷாரா இருங்க மக்களே. மேலும், இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் (1800 599 0050) மற்றும் <
தருமபுரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
கொங்கன் ரயில்வேயில் உள்ள முக்கிய பதவியாக கீமேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீமேன் பதவிக்கு 10ஆம் வகுப்பு முடித்த 28 வயது உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,500 சம்பளம் வழங்கப்படும். தேர்வு கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.