India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் ஓ பி சி இ பி சி டி என் டி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார். மேலும் விண்ணப்பிக்க (https://scholarships.gov.in) பயன் பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று (அக்.8)-ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 2 ம வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S.S.மகேஸ்வரன்,அவர்களின் தலைமையில் பொதுமக்களின் குறை பொதுமக்களால் வழங்கப் 71 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 71 மனுக்கள் தீர்வு காணப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் அகவை 60 வைரவிழா கொண்டாட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு தர்மபுரி மாவட்டம் எவ்வாறு வளர்ச்சி பெற்று வருகிறது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கி பேசினார். இதில், கோட்டாட்சியர் காயத்ரி, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வட்டார கல்வி அலுவலர் சாந்தி உள்பட பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

உடன்பிறப்பே வா (அக்.8) என்ற பெயரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் தொகுதி வாரியாக நிர்வாகிகளிடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பனுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளார். அரூர் சட்டமன்றத் தொகுதி இவரிடம் இருந்து எம்பி மணியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், பழனியப்பன் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) தேர்ந்தெடுத்து, ஆதார் எண், மொபைல் எண், OTP எண்ணை பதிவிட்டு கண்டுபிடிக்கலாம். 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இ-சேவை மையங்களில் நேரடியாகவும் சென்று கேட்கலாம். ஷேர் செய்யுங்கள்

தருமபுரி மக்களே, இந்தியன் வங்கியில் Manager, Senior Manager பணியிடங்களுக்கு 171 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 23 வயதுக்கு மேற்பட்ட டிகிரி முடித்த நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,000 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் அக்டோபர்-13-க்குள் இந்த <

தருமபுரி மக்களே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்! TNEB செயலி அல்லது அதன் அதிகாரப்பூர்வ <

கனரா வங்கியில் அப்ரென்டிஸ் பயிற்சிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். மொத்தம் 3500 காலியிடங்கள் உள்ளது அதில் தமிழ்நாட்டில் மட்டும் 394. 20-28 வயதுக்குட்பட்டவர்கள் வரும் அக்.12க்குள் இந்த <

அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள தாழ்வுநிலை மண்டலத்தால், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று (அக்.-8) தருமபுரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட் இருப்பதால் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வெயிலா? மழையா? கமெண்ட்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.07) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. சூர்யா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!
Sorry, no posts matched your criteria.