India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்டத்தில் வீட்டுப் பணியில் ஈடுபடும் பணியாளர்களை தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கு ஏதுவாக தர்மபுரி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் உரிய ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்..
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் “நீர்நிலைப் பாதுகாவலர் விருது” இந்த ஆண்டிற்கான விருதுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 31.01.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விருதிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ஜன.31ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும், கருத்துகளையும் எடுத்து கூறி பயனடையலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அங்கு வந்த 2 பேர் கையில் வைத்திருந்த கேனில் இருந்த டீசலை உடல் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தி விசாரித்த போது பழைய ஓட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த தசரதன் இவரது மனைவி பாஞ்சாலை என்பது தெரியவந்தது.
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (ஜன.31) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. எனவே, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின், வழிகாட்டுதல்படி, அதியமான் ஜல்லிக்கட்டு பி ஆர் பேரவை, நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா வருகின்ற பிப்.14 வெள்ளிக்கிழமை அன்று, தமிழக அரசு விதிமுறைகளுடனும், மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் படியும் நடைபெறும் என அதியமான் ஜல்லிக்கட்டு பி ஆர் பேரவை அறிவித்துள்ளது. இந்த தகவலை உங்க ஊர் மக்களுக்கு SHARE பண்ணுங்க.
சேலத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை நேற்று முன்தினம் கோவில் வெள்ளாறு பகுதியை சேர்ந்த சங்கர் (21) என்பவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று, தொப்பையாறு டேம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்தன் பேரில் பெற்றோர் தொப்பூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.
நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? <
தருமபுரி மாவட்டத்தில் நாளை(ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினம் கிராம சபைக் கூட்டம் நாளை காலை 11.00 மணி முதல் நடத்தப்படவுள்ளது. இந்த செய்தியை உங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடசமுத்திரத்தில் வசித்து வரும் சிவசங்கர் எல் ஐ சி ஏஜென்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். பணி நிமித்தமாக இன்று சாமியாபுரம் கூட்ரோட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது வெங்கடசமுத்திரம் அருகே சேலத்தில் இருந்து பொம்மிடி நோக்கி வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.