Dharmapuri

News October 11, 2025

தருமபுரி: காளான் வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு

image

பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இன்று முதல் 11/10/25 முதல் 14/11/2025 வரை. காளான் வளர்ப்பு பற்றிய பயிற்சி தொடர்ந்து 26 நாட்கள் நடைபெற உள்ளது. வயதுவரம்பு 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட 10ஆம் வகுப்பு தேர்ச்சி இருபாலாரும் பங்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர். முனைவர் தெய்வமணி 9626674884 என்ற எண்ணில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

News October 11, 2025

உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டம்

image

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் 100 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டம் வெளியிட்டுள்ளனர்.விண்ணப்பப் படிவம் இக்கழக இணையதள முகவரியில் (www.tabcedco.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் சதிஸ் தகவல்

News October 11, 2025

தருமபுரி: உதவித்தொகை விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு!

image

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை (PM-YASASVI) திட்டத்தின் கீழ், ஒபிசி, இபிசி மற்றும் டிஎன்டி மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (http://Scholarships.gov.in) வழியாக விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தெரிவித்தார். தகுதியுடைய மாணவர்கள் பள்ளி கல்வியில் சிறந்து விளங்கி இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.

News October 11, 2025

தருமபுரி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

கே. பி. ஆர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

News October 10, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்..

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்டோபர்-10) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்..

News October 10, 2025

பருவமழை குறித்தும் ஆட்சியர் ரெ.சதீஸ் ஆலோசனைக் கூட்டம்

image

தருமபுரி பழைய ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறையின் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி  திட்ட பணிகள் குறித்தும் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அலுவலர்களுடனான ஆட்சியர் ரெ.சதீஸ், அவர்கள் தலைமையில் இன்று (அக்.10) மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. இதில், அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News October 10, 2025

முதல்வரை வரவேற்ற தர்மபுரி எம்.பி மணி

image

இன்று (அக்.10) ஓசூர் பேளகொண்டப்பள்ளி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். இந்நிலையில் தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மணி எம்.பி முதலமைச்சரை சந்தித்து புத்தகம் கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் மதியழகன் ஒய் பிரகாஷ் மேயர் உள்ளிட்டவர் உடன் இருந்தனர்.

News October 10, 2025

மத்திய அரசு வேலை, ரூ.92,000 வரை ஊதியம்

image

தேசிய அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள உதவியாளர், டெக்னீஷியன், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th, ஐடிஐ, Visual Art / Fine Arts / Commercial Arts) டிகிரி முடித்த 19 முதல் 35 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்கு ஏற்ப மாதம் ரூ. 19,900 – ரூ. 92,000 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்க கிளிக்<<>> செய்து வரும் அக்.20க்குள் விண்ணப்பிக்கலாம்.

News October 10, 2025

தருமபுரி: மின் கட்டணத்தை குறைக்க சூப்பர் வழி!

image

தர்மபுரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <>ஆன்லைன் <<>>மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர்!

News October 10, 2025

தருமபுரியில் கூட்டுறவுத் துறை நுழைவுத் தோ்வு அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்ட கூட்டுறவு துறையில் காலியாக உள்ள 103 உதவியாளர் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வு அக்டோபர் 11 அன்று நடைபெறுகிறது. மொத்தம் 1829 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். தேர்வுகள் தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி, நல்லம்பள்ளி மையங்களில் நடைபெறும். தேர்வர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் உதவி எண்கள் 04342-233803, 6382688363 வழங்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!