Dharmapuri

News August 13, 2025

தருமபுரி மாவட்டத்தில் மின் தடை

image

கடத்தூர், ஆர்.கோபிநாதம்பட்டி, இராமியணஹள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதனால், பசவபுரம், பொம்பட்டி, பூதநத்தம், சிந்தல்பாடி, மணியம்பாடி, நவலை, ஆண்டிப்பட்டி, நத்தமேடு, புளியம்பட்டி, தென்கரைக்கோட்டை, ரேகடஹள்ளி சுற்றுவட்டார பகுதியில் நாளை காலை 9 மணி -பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே ஷேர் பண்ணுங்க.

News August 13, 2025

தர்மபுரி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் ஆணையரின் அறிவுரைப்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15 அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இக்கூட்டத்தில் பொதுமக்கள், வாக்காளர்கள், மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சதீஸ் அறிவித்துள்ளார்.

News August 12, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தலைமை அதிகாரியாக R. குணவர்மன்
நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புஷ்பராணி, அரூர் ஆதமலி, பென்னாகரம் முரளி , மற்றும் பாலக்கோடு பார்த்திபன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 12, 2025

தர்மபுரி மாணவர்கள் கவனத்திற்கு!

image

தருமபுரி, காரிமங்கலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 இலவச பேருந்து பாஸ், புத்தகங்கள், பாடக் கருவிகள், சீருடைகள், ஷூ,மிதிவண்டி ஆகியவை வழங்கப்படும். குறைந்த இடங்களே உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 12, 2025

தருமபுரியில் ட்ரோன் பறக்கத் தடை

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தர உள்ளார். இதன் காரணமாக, பாதுகாப்பு கருதி ஆகஸ்ட் 16 (சனிக்கிழமை) மற்றும் ஆகஸ்ட் 17 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.

News August 12, 2025

ரேசன் பொருட்களை வழங்கிய கலெக்டர்

image

தருமபுரி மாவட்டம், பாலஜங்கமனஹள்ளியில் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின்’ கீழ், குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை ஆட்சியர் சதீஸ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி மற்றும் தருமபுரி MLA வெங்கடேஷ்வரன் ஆகியோர் உடனிருந்தனர். இந்தத் திட்டம் மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் கூட்டுறவுத்துறையின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

News August 12, 2025

தருமபுரியில் ஆட்சிமொழி பயிலரங்கம்

image

தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழி திட்டத்தை விரைவாகவும், முழுமையாகவும் செயல்படுத்தும் நோக்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இந்தப் பயிலரங்கம் நடத்தப்படுகிறது. ஆட்சியர் ரெ.சதீஸ் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.

News August 12, 2025

தருமபுரி மக்களே…கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

image

தருமபுரி மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 12, 2025

தருமபுரி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

image

தருமபுரி மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<> E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News August 11, 2025

விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசம்

image

தண்டகுப்பம் மற்றும் அரூர் நாற்றங்கால்களில் தேக்கு, மகாகனி, வேங்கை, ஈட்டி போன்ற உயர்தர மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, சாமிபுரம் பகுதி விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலவசமாக மரக்கன்றுகளைப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, வனவர் சந்திரசேகரை 9626934955 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!