India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.இந்த முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமினை ஆட்சியர் ரெ.சதீஸ், இன்று (அக்.11) பார்வையிட்டு, பழங்குடியினர் மக்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டைகளை வழங்கினார்கள். உடன் அரசு துறை அலுவலர்கள் இருந்தனர்.

தர்மபுரி; ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 12.10.2025 நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு உதவி மையம் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி சம்பத்குமார்9443288753, நல்லம்பள்ளி ராஜசேகர்9489171852, பாலக்கோடு பாபு சுந்தரம்9443455678 அரூர் ஆறுமுகம்9843616002, பாப்பிரெட்டிப்பட்டி கலைவாணன்9942544067 பெண்ணாகரம் பாலாஜி9443509332 காரிமங்கலம் நாகையா 9443923858

தருமபுரி மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற <

தருமபுரி 102.5 F,M நிகழ்ச்சிகளை, சேலம் ஏற்காட்டில் புதிதாக அமையவுள்ள 5 கிலோவாட் டவர் மூலம் ஒலிபரப்ப மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், தருமபுரி மாவட்டத்தின் மலை மறைவுப் பகுதிகளான அரூர், மொரப்பூர் உள்ளிட்ட இடங்களிலும், அண்டை மாவட்டங்களிலும் உள்ள மக்கள் இனி தெளிவாக நிகழ்ச்சிகளைக் கேட்டுப் பயனடையலாம் என பா.ம.க. எம்.எல்.ஏ. வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Trade Apprenticeship Training,raduate Apprenticeship Training போன்ற பதவிகளுக்கு 1,101 வரை காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10,000-15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்அக்-21குள் <

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தெரிவித்ததாவது; 2025 ஆம் ஆண்டுக்கான பனை விதை நடவு திட்டத்தின் கீழ், மாவட்ட நிர்வாகம், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 15 வரை மொத்தமாக 8,35,500 பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான முக்கியமான கட்டமாக அமையும்.

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: NSDL
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த <

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படிக்க கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 100 மாணவர்கள் பயனடையலாம். தகுதியுள்ள மாணவர்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

தருமபுரி, கிராம ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,450 பணியிடங்களுக்கு இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.tnrd.tn.gov.in. விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் முதல் வாரத்தில் நேர்காணல் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. தகுதியுள்ள தருமபுரி மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இன்று முதல் 11/10/25 முதல் 14/11/2025 வரை. காளான் வளர்ப்பு பற்றிய பயிற்சி தொடர்ந்து 26 நாட்கள் நடைபெற உள்ளது. வயதுவரம்பு 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட 10ஆம் வகுப்பு தேர்ச்சி இருபாலாரும் பங்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர். முனைவர் தெய்வமணி 9626674884 என்ற எண்ணில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.