Dharmapuri

News February 6, 2025

தருமபுரி  குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல் 

image

தருமபுரி மாவட்டத்தில் எதிர் வரும் 10.02.2025 திங்கள்கிழமை அன்று தேசிய குடற்புழு நீக்க நாள் கடைப்பிடிக்கப்பட உள்ளது. 1-வயது முதல் 19-வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரை 10.02.2025 இன்று வழங்கப்படும்.

News February 6, 2025

பாலக்கோடு வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மற்றும் நகரத்தில் அருள்மிகு புதூர் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதையொட்டி 12.02.2025 ஆம் தேதி புதன்கிழமை பாலக்கோடு வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 22.02.2025 (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க. 

News February 6, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News February 6, 2025

பிறந்த 8 நாளில் இறந்த பெண் குழந்தை

image

பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த பாலாஜி, சங்கீதா தம்பதியருக்கு 8 நாட்கள் முன்பு இரட்டை (1 ஆண்+ 1 பெண்) குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்று சங்கீதா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த போது மூச்சு திணறி மயங்கியது. தொடர்ந்து குழந்தையை தர்மபுரி ஜிஹெச்க்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காரியமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 6, 2025

தருமபுரியில் விவசாயிகளின் குறைகளை தீர்ப்பு கூட்டம்

image

தருமபுரி மாவட்டம் மற்றும் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டதற்கிணங்க, பிப்ரவரி மாதத்திற்கான கூட்டம் வருகின்ற பிப்.7தேதி அன்று காலை 11.00 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

News February 6, 2025

தருமபுரி ஆட்சியர் தகவல்

image

தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 07.02.2025-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது என்று ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். இதனால் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

News February 5, 2025

தருமபுரியில் போலி சித்த மருத்துவர் கைது

image

ஒட்டப்பட்டி பகுதி, வள்ளுவர் நகரில் தனியாக உள்ள ஒரு வீட்டில் பி.எஸ்.சி தாவரவியல் படித்துவிட்டு போலியாக சித்த மருத்துவ சான்றிதழ் வைத்துக் கொண்டு சித்த மருத்துவ சிகிச்சை அளித்து வந்த ரமேஷ் குமார் என்பவரை அதியமான் கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் மருந்து, மாத்திரைகள், சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

News February 5, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

தருமபுரியில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் தருமபுரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு ரோந்து பணி போலீசாரின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

News February 5, 2025

தருமபுரி மாவட்ட ஆட்சியராக சதீஷ் பதவியேற்பு

image

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஈரோடு துணை ஆட்சியராக பதவி வகித்த சதீஷ் அவர்கள் இன்று (05.02.2025) முறையாக கையொப்பமிட்டு பதவியேற்றுக்கொண்டார். அப்போது ஏராளமான அலுவலர்கள் உடன் இருந்தனர். புதிதாக பதவி ஏற்று கொண்ட ஆட்சித் தலைவருக்கு அரசு அலுவலர்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

News February 5, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். <>ஷேர் பண்ணுங்க.<<>>

error: Content is protected !!