India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஆக.17) முதலமைச்சர் முரசொலி மாறன் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார், அதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு இ-கிஷான் கார்டு, ரூ.1,718 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார் அங்கிருந்து சாலை மார்கமாக விமான நிலையம் செல்ல உள்ளார்.
தர்மபுரி: மத்திய அரசு இப்போது EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி போன்ற பொறுப்புகளுக்கு காலியிடங்கள் அறிவித்துள்ளது, இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Companies Act, Indian Labor law போன்ற படிப்புகளில் பாலிடெக்னிக் படித்திருந்தால் போதுமானது. எழுத்து தேர்வும் உண்டு, இந்த பணிக்கு 45,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட்-18குள் <
மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள 4,987 காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். 18-27 வயது உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.21,700 முதல் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று இங்கு பல பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகனை வழிபடுவார்கள்.இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவதால் கர்ம வினைகள் நீங்கும், செவ்வாய் தோஷம் அகலும், திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். ஷேர்
தர்மபுரியில், ஓய்வுபெற்ற அரசு ஊழியரான கனகசனிடம் பழைய கார் விற்பனை செய்வதாகக் கூறி ரூ. 4.30 லட்சம் மோசடி செய்த வழக்கில், வடிவேல் என்ற நபர் கைது செய்யப்பட்டார். காரின் ஆர்.சி புத்தகத்தை தராமல் மீதி பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றியதால், கனகசன் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவல்துறையினர் வடிவேலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக P. ராமமூர்த்தி
நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி வேலுதேவன், அரூர் வான்மதி, பென்னாகரம் குமரவேல் மற்றும் பாலக்கோடு வீரம்மாள் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்க
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒரே நாளில் 100 இடங்களில் ஆய்வு செய்தனர். இதில் பழைய சிக்கன், நூடுல்ஸ், செயற்கை நிறமூட்டிகள், பலமுறை பயன்படுத்திய எண்ணெய்யை உபயோக படுத்திய கடைகளுக்கு ரூ.17,000 அபராதம் விதித்தனர். மேலும், பொதுமக்கள் உணவு தொடர்பாக 9444042322 என்ற எண்ணிலோ அல்லது <
கிருஷ்ணகிரி சுதந்திர தின விழாவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுதேர்வில் 100% தேர்ச்சி பெற்றுத்தந்த தலைமையாசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் பட்டம் வழங்கப்பட்டது. இதன்படி பையர்நத்தத்தை சார்ந்த தலைமை ஆசிரியர் குபேந்திரனுக்கு சிறந்த ஆசிரியர் பட்டம் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <
Sorry, no posts matched your criteria.