India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரியில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் தருமபுரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு ரோந்து பணி போலீசாரின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலன் & திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம், தொன் போஸ்கோ கல்லூரி, இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்.15 ஆம் தேதி சனிக்கிழமை, காலை 8.மணி முதல் 3 மணி வரை தொன் போஸ்கோ கல்லூரியில் நடக்கிறது.
பொம்மிடி உதவி காவல் ஆய்வாளர் கணேஷ் தலைமையிலான காவலர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் சென்ற போது பொம்மிடியில் மளிகை கடையில் சிலர் மது குடித்துக் கொண்டிருந்ததை கண்டனர் விசாரணையில் மளிகைக்கடையில் பார் நடத்தியது தெரியவந்தது. இது குறித்து மளிகை கடை நடத்திய பெருமாள் என்பவரை காவலர்கள் கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த ரூ.8000 மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் மினி பஸ்களை இயக்க விருப்பம் உள்ளவர்கள் புதிய வழித்தடங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேற்று பிப்ரவரி 7 வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த திட்டத்தின்படி போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அரசிதழில் வெளியிடப்படும். விருப்பமுள்ளவர்கள் போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
தருமபுரியில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் தருமபுரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு ரோந்து பணி போலீசாரின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு இலவச சிசிடிவி கேமரா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 18 வயது முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவல்களுக்கு இந்தியன் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் ஆட்சியர் அலுவலகம் பின்புறம் தர்மபுரி என்ற முகவரியை அணுகலாம் என இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வள்ளலார் நினைவு தினமான பிப்.11ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் பிப்.10 ஆம் தேதி முதல் பிப்.12ஆம் தேதி காலை 12.00 மணி வரை மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.
அரூர் பகுதியை சேர்ந்த அபிஷேக் (24). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கோவிலில் அபிஷேக் அந்த மாணவியை குழந்தை திருமணம் செய்து கொண்டதை அறிந்த மாணவியின் பெற்றோர்,அரூர் போலீசில் புகார் அளிக்க, அதன் பேரில் போலீசார் அபிஷேக் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில் ரோந்து பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் அவரச கால தேவைக்கு காவலர்களின் எண்ணை தொடர்புகொள்ளலாம்.
தருமபுரி மாவட்டத்தில் எதிர் வரும் 10.02.2025 திங்கள்கிழமை அன்று தேசிய குடற்புழு நீக்க நாள் கடைப்பிடிக்கப்பட உள்ளது. 1-வயது முதல் 19-வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரை 10.02.2025 இன்று வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.