India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

லோன் மோசடி, சிட் ஃபண்ட், பரிசுச் சீட்டு, ஏலச்சீட்டு, கிரெடிட் கார்டு, டிஜிட்டல் பண மோசடி ஆகியன நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க TN போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) என்ற சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இந்த மோசடியில் நீங்கள் சிக்கியிருந்தால் வடக்கு மண்டல SP-044-22500319, EOW CONTROLL ROOM- 044-22504332, உங்கள் பகுதி EOW அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிரவும்.

வி.சி.க தருமபுரி மைய மாவட்டச் செயலாளா் த.கு.பாண்டியன் வெளியிட்ட அறிக்கையின்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழா, தோ்தல் அங்கீகார விழா மற்றும் 2026ம் ஆண்டு தோ்தல் நிதி அளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா தருமபுரி வள்ளலாா் திடலில் வரும் செவ்வாய்(அக்.14) நடைபெறுகிறது. விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் பங்கேற்க உள்ளார்.

தருமபுரி மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள நீங்கள் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய வேண்டாம். <

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க, பட்டா/சிட்டா விவரங்களை தெரிந்துகொள்ள மிகவும் எளிமையாக்க எங்கும் செல்லவேண்டாம். தமிழ்நாடு அரசு இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் அமர்ந்த இடத்திலேயே <

தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எம் பி கௌதம், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதியை நேற்று (அக்.12) சந்தித்து புத்தகம் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தருமபுரி மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் காலியாக உள்ள 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் இன்று (அக்.13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டமான சேலத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

தருமபுரி மாவட்டத்தில், 43 தேர்வு மையங்களில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. அதையொட்டி, நேற்று காலை 11 மணியளவில் அதியமான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

காரிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று சட்ட விரோத மது விற்பனை நடந்து வருவதாக வந்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர் . அப்போது காரிமங்கலம் அருகே சின்னமிட்ட அள்ளி பகுதியில் சட்டவிரோத மது விற்பனை செய்து வந்த நடராஜ் 45 என்பவரை கைது செய்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.