Dharmapuri

News October 14, 2025

தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

தருமபுரியில் இலவச செல்போன் ரிப்பேர் மற்றும் சர்வீஸ் பயிற்சி

image

இந்தியன் வங்கி – ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தருமபுரி மாவட்ட மக்களுக்காக 30 நாட்கள் காலம் கொண்ட செல்போன் ரிப்பேர் & சர்வீஸ் பயிற்சி 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் இதில் கலந்து கொள்ளலாம். காலை 9.30 முதல் மாலை 5.30 வரை இந்த பயிற்சி நடைபெறும். தொடர்புக்கு: 04342-230511, 86676 79474, 63831 47667. ஷேர் பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவும்.

News October 14, 2025

தர்மபுரி: ரயில்வேயில் சூப்பர் வேலை, இன்றே கடைசி!

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <>கிளிக் <<>>செய்து இன்றைக்குள் விண்ணப்பிக்கவும். சந்தேகம் இருப்பின்: 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

தர்மபுரி: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

தருமபுரியில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் (17.10.2025) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் வேளாண்மை தொடர்பான குறைகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.

News October 14, 2025

அரூருக்கு வந்த திரைப்பட இயக்குநர்

image

அரூரில் நேற்று தண்டகாரண்யம் திரைப்படத்தின் திறனாய்வு & கலந்துரையாடல் கூட்டம் அம்பேத்கர் நகர் அறிவக அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. இதில் அப்படத்தின் இயங்குனர் அதியன் ஆதிரை, கலை இயக்குநர் த.ராமலிங்கம், ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் கோட்டீஸ்வரன் நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினார்.

News October 14, 2025

தருமபுரிக்கு வந்த திரைப்பட இயக்குநர்

image

அரூரில் இன்று தண்டகாரண்யம் திரைப்படத்தின் திறனாய்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் அரூர் அம்பேத்கர் அறிவக அறக்கட்டளையில் யாசட் இயக்குநர் அதியன்ஆதிரை, கலை சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் அப்படத்தின் இயக்குநர் த.ராமலிங்கம், ஒளிப்பதிவாளர் பிரதீப்காளிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் கோட்டீஸ்வரன் நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினார்.

News October 13, 2025

மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் குறைதீர்க்கும் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், இன்று (13.10.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பொதுமக்களின் பிரச்சனைகள் குறித்து உரிய துறைகளின் அதிகாரிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

News October 13, 2025

தருமபுரி: பெற்றோர் திட்டியதால் மாணவி விபரீத முடிவு

image

அரூர் வர்ணதீர்த்தம், கேகே நகரை சேர்ந்த யுவராஜ். இவரது மகள் ரித்திகா (21). இவர் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ரித்திகா செல்போனை அதிகளவில் பயன்படுத்தி வந்ததால் படிப்பில் கவனம் சிதைந்து விடும் எனக்கூறி பெற்றோர் ரித்திகாவை கண்டித்துள்ளனர். இதனால், மனம் உடைந்த அவர் நேற்று விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 13, 2025

தருமபுரியில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் அக்.16ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 8th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 04342-288890 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். *நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!