India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரியில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் தருமபுரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு ரோந்து பணி போலீசாரின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு இலவச சிசிடிவி கேமரா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 18 வயது முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவல்களுக்கு இந்தியன் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் ஆட்சியர் அலுவலகம் பின்புறம் தர்மபுரி என்ற முகவரியை அணுகலாம் என இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வள்ளலார் நினைவு தினமான பிப்.11ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் பிப்.10 ஆம் தேதி முதல் பிப்.12ஆம் தேதி காலை 12.00 மணி வரை மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.
அரூர் பகுதியை சேர்ந்த அபிஷேக் (24). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கோவிலில் அபிஷேக் அந்த மாணவியை குழந்தை திருமணம் செய்து கொண்டதை அறிந்த மாணவியின் பெற்றோர்,அரூர் போலீசில் புகார் அளிக்க, அதன் பேரில் போலீசார் அபிஷேக் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில் ரோந்து பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் அவரச கால தேவைக்கு காவலர்களின் எண்ணை தொடர்புகொள்ளலாம்.
தருமபுரி மாவட்டத்தில் எதிர் வரும் 10.02.2025 திங்கள்கிழமை அன்று தேசிய குடற்புழு நீக்க நாள் கடைப்பிடிக்கப்பட உள்ளது. 1-வயது முதல் 19-வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரை 10.02.2025 இன்று வழங்கப்படும்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மற்றும் நகரத்தில் அருள்மிகு புதூர் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதையொட்டி 12.02.2025 ஆம் தேதி புதன்கிழமை பாலக்கோடு வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 22.02.2025 (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்
பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த பாலாஜி, சங்கீதா தம்பதியருக்கு 8 நாட்கள் முன்பு இரட்டை (1 ஆண்+ 1 பெண்) குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்று சங்கீதா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த போது மூச்சு திணறி மயங்கியது. தொடர்ந்து குழந்தையை தர்மபுரி ஜிஹெச்க்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காரியமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் மற்றும் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டதற்கிணங்க, பிப்ரவரி மாதத்திற்கான கூட்டம் வருகின்ற பிப்.7தேதி அன்று காலை 11.00 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.