India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் வருகின்ற 17.03.2025 முதல் 22.03.2025 வரை நடைபெற உள்ளது. பொது மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களைப் பெறுவதற்கு, தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பித்தல் விவசாயிகளின் பதிவு விவரங்களை மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தருமபுரி மாவட்ட விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய 31.03.2025 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கம்பைநல்லுார் அடுத்த, கே.ஈச்சம்பாடியில், உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின், 6 முதல், 8ம் வகுப்பு கட்டடங்களின் கூரை சீரமைக்கப்பட்டு, இரும்பு தகடுகளான ஷீட்கள் பொருத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம்( மார்ச் 12) மாலையில் சூறை காற்றுடன் பெய்த கனமழையால், பள்ளி கூரையில் இருந்த ஷீட்கள் தூக்கி வீசப்பட்டன. அதிர்ஷ்டவசமாக பள்ளியில் மாணவர்கள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (50), இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம், பூந்தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சின்னசாமி சென்றுள்ளார். அப்போது கீழே கிடந்த ஒயரை எதிர்பாராத விதமாக மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கிசென்று பரிசோதித்த பொழுது,ஏற்கனவே சின்னசாமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 தணிக்கையாளர் (Concurrent Auditor) வேலைவாய்ப்பு உள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 3 ஆண்டுகள் வரை விரிவாக்கம் செய்யப்படும். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். 15ஆம் தேதிக்குள் <
தருமபுரி மாவட்டம் நல்லபள்ளி அருகே ஷேர்லின்பெல்மா என்றவர் ஆசிரியராக பணி புரிந்து வரும் இவர் ஓய்வுபெற்ற ஆசிரியையும்,தனது தாயாருமான மேரியுடன் வசித்து வருகிறார்.மேரி மருத்துவ சிகிச்சைக்காக,வேலூருக்கு சென்ற நிலையில் ஷேர்லின்பெல்மா வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார்.வீடு திரும்பிய அவர் பூட்டு உடைக்கப்பட்டு 100 பவுன் நகை மற்றும் 1.5 லட்ச ருபாய் மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்துள்ளது.
தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குனராக பணிபுரிந்த ஜி.திலகவதி பிறந்த மாவட்டம் தருமபுரி.1951-இல் பிறந்த இவர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வானார். 34 ஆண்டுகள் அத்துறையில் பல்வேறு பிரிவுகளில் பதவிகளை வகித்துள்ளார்.கல்மரம் என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.இவரை அனைவரும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யுங்கள்
தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலை தேர்த்திருவிழாவை முன்னிட்டு அரூர் வருவாய் கோட்டத்திற்கு 18.03.2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 29 /03 /2025 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகின்றது இவ்வாறு தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் 11/03/2025 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இங்குள்ள தீர்த்தத்தில், அற்புத மூலிகைகளின் சத்து கலந்து விளங்குவதால், நீராடுபவர்கள் உடற்பிணி, உளப்பிணி யாவும் தீர்ந்து, புத்துணர்வும், புதுவாழ்வும் பெறுகின்றனர். மேலும் இக்கோயிலில் கடன் தொல்லை தீர வேண்டுவதுடன், வீடு கட்டவும், குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு இலவச படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பு மூலம் செயலிகளை உருவாக்குவும், செயல்படுத்தவும் முடியும். 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.35,000 – ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் <
Sorry, no posts matched your criteria.