Dharmapuri

News February 26, 2025

விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தர்மபுரி MP

image

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை தனி நிதி நிலை அறிக்கை 2025-26 ஆண்டுகளுக்கான விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், நீலகிரி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தர்மபுரி MLA, தர்மபுரி MP ஆகியோரும் கலந்து கொண்டுள்ளார்.

News February 26, 2025

தருமபுரி வெடி விபத்து; ஒருவர் கைது

image

நேற்று முன்தினம் பூமிசமுத்திரத்தில் பட்டாசு குடோன் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கிருபாகரன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பட்டாசு குடோன் உரிமையாளர் சின்னதுரையை கம்பைநல்லூர் காவலர்கள் நேற்று பிப்ரவரி 25 மாலை கைது செய்தனர். மேலும் பொதுமக்கள் நலன் கருதி இந்த பட்டாசு ஆலை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

News February 26, 2025

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெயிண்டர் தற்கொலை

image

பாப்பிரெட்டிப்பட்டி, வாணியாறு டேம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவரது மகன் பிரேம்குமார் (26) பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 25, 2025

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (பிப்25) இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

News February 25, 2025

POST OFFICE JOB- விண்ணப்பித்தால் வேலை

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தருமபுரில் மட்டும் 83 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>https://indiapostgdsonline.gov.in/ <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

News February 25, 2025

பட்டாசு ஆலை விபத்து: முதலமைச்சர் இரங்கல்

image

தருமபுரி அருகே கம்பைநல்லூரில் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த துயரமான செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

News February 24, 2025

CISFல் வேலை- கைநிறைய சம்பளம்!

image

மத்திய தொழில் பாதுகாப்பு படையான CISFல் 1161 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18- 23(1.8.25) வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் 5-03-2025- 3-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News February 24, 2025

பதவியில் இருந்து நீக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளரின் பதிவு

image

திமுக தர்மபுரி மாவட்ட கிழக்கு பொறுப்பாளராக இருந்த இன்பசேகரன் பதவியில் இருந்து இன்று நீக்கப்பட்டார். இதையடுத்து அவரின் முகநூல் பதிவில் அவர் கூறியது, கழகத்தை எதிர்க்கட்சியுடன் (பாமக+அதிமுக) கூட்டணி சேர்ந்து கொண்டு ஒழிக்க நினைத்தவர், கழகத்தின் உயரிய பொறுப்பான மாவட்ட செயலாளர் பதவிக்கு தகுதியுடைய நபர்தானா? என்று அவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News February 24, 2025

கும்பமேளா தீர்த்தம் தர்மபுரி மக்களுக்கு வழங்கப்பட்டது

image

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், கும்பமேளா நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து தீர்த்தம் வரவழைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரியில் நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்ட பாஜக தலைவர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News February 23, 2025

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு மானியத்தால் பயன்பெறும் AAY மற்றும் PHH வகை குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் மார்ச் 31ஆம் தேதிக்குள், தங்களது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதாரை, சம்பந்தப்பட்ட நியாய விலை கடைகளுக்கு சென்று e-kyc முறையில் ஆதார் சரிபார்ப்பு செய்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!