Dharmapuri

News February 13, 2025

ஒப்புதலுக்கு பின்னரே ஜல்லிக்கட்டு; ஆட்சியர்

image

தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த நாளது தேதி வரை மாவட்ட நிர்வாகத்தினால் எந்த அமைப்புக்கும் அனுமதியேதும் வழங்கப்படவில்லை என்பதால், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் செய்திகளை நம்ப வேண்டாம். PR பேரவை சார்பாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவித்து வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்தி உலா வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சதிஷ் விளக்கமளித்துள்ளார்.

News February 13, 2025

தர்மபுரி மாவட்டத்தில் அஞ்சல் துறையில் வேலை

image

இந்திய அஞ்சல் துறை தர்மபுரி மாவட்டத்தில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு காலியாக உள்ள 83 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு India Pos thttps://www.indiapost.gov.inRecruitments என்ற இணையதளத்தில் அறிந்து மார்ச் 3ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது. ஷேர் பண்ணுங்க

News February 13, 2025

கொடிக் கம்பங்களை அகற்ற ஆட்சியர் உத்தரவு

image

தருமபுரி மாவட்டத்தில், நெடுஞ்சாலை, மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி மற்றும் பிற அரசு துறைகளுக்குச் சொந்தமான இடங்கள் பொது இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்ட தொடர்புடைய அரசியல், மதம் போன்ற அனைத்து அமைப்புகளும், பொது இடங்களில் அனுமதி இல்லாத கொடிக்கம்பங்களையும் தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும், கொடி கம்பம் அகற்றவில்லை என்றால் நீதிமன்ற ஆணைப்படி நடடிவக்கை என மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

தருமபுரியில் பிப்.15இல் வேலைவாய்ப்பு முகாம்

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில், தருமபுரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் பிப்.15 ஆம் தேதி தருமபுரி, சோகத்தூரில் உள்ள தொன் போஸ்கோ கல்லூரியில் நடைபெறவுள்ளது. முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு 5,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.

News February 13, 2025

தருமபுரி எழுத்தாளருக்கு முதல் பரிசு

image

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தகடூர் அ. மணிவண்ணன், பல்வேறு கவிதைகள் மற்றும் புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய அந்த மூன்று நாட்கள் எனும் புத்தகம் புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் நடத்திய நெடுங்கதை போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளது. பல்வேறு எழுத்தாளர்கள் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

News February 13, 2025

பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் 

image

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.S.மகேஸ்வரன் தலைமையில் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. வழங்கப்பட்ட 75 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 46 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும் இன்று புதிதாக 29 மனுக்கள் பெறப்பட்டன.

News February 12, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

தருமபுரியில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் தருமபுரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு ரோந்து பணி போலீசாரின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

News February 12, 2025

டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை

image

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் 234 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News February 12, 2025

இளம் பெண்ணுக்கு திருமணம்: தடுத்த அதிகாரிகள்

image

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த நொனங்கனுாரை சேர்ந்தவர் மாரி. இவரது மகன் மாரப்பனுக்கும், அரூரை சேர்ந்த 17 வயது கல்லுாரி மாணவிக்கும் நேற்று காலை திருமணம் நடக்க இருந்தது. இதுகுறித்து, வருவாய்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, பே.தாதம்பட்டி வி.ஏ.ஓ., வாச்சாத்தி வி.ஏ.ஓ., கோபிநாதம்பட்டி போலீசார், குழந்தைகள் நல அலுவலர்கள் அங்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

error: Content is protected !!