Dharmapuri

News August 24, 2025

தருமபுரி: 12th போதும்.. உள்ளூரில் கைநிறைய சம்பளம்

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள SBI வங்கியில் காலியாக உள்ள 40 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th முடித்த 20-45 வயது உள்ள இருபாளர்களும் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவையில்லை. மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் செ.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். *உள்ளூரில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News August 24, 2025

தருமபுரி: வீட்டு பத்திரம் தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் அரசு அலுவலகத்துக்கு அலைய வேண்டாம். தற்போது தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதன் மூலம் நீங்கள் பெற முடியும். மேலும் விபரங்களுக்கு உங்க பதிவு அலுவலகத்தை (04342-260895) தொடர்பு கொள்ளுங்க. ஷேர் பண்ணுங்க

News August 24, 2025

மருவுக்கு தடவும் மருந்து குடித்த குழந்தை பலி

image

மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்தவர் ராமு. கடந்த 21 ஆம்தேதி ராமுவின், மூன்றரை வயது மகள் கனிஷ்கா, வீட்டில் சிறிய பாட்டிலில் இருந்த, தோல் மருக்களுக்கு – தடவப்படும் மருந்தை தவறுதலாக குடித்துள்ளார். அதனால், கனிஷ்கா மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று‌ அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

News August 24, 2025

தர்மபுரி: ரேஷன் கார்டுதாரர்கள் இத நோட் பண்ணிக்கோங்க

image

தர்மபுரி மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 24, 2025

தர்மபுரி: மாணவிக்கு பாலியல் தொல்லை; முதல்வர் கைது

image

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் உள்ள தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து வரும் வினுலோகேஸ்வரன், அதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாணவி பெற்றோரிடம் கூற, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வினுலோகேஸ்வரனை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 24, 2025

ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி

image

ஒகேனக்கலில் சில நாட்களாக விநாடிக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் நீா்வரத்து இருந்ததால் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 9500 கனஅடியாக குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தருமபுரி மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

News August 24, 2025

டிராக்டரில் சென்றவர் உயிரிழப்பு

image

காரிமங்கலம் அடுத்த திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி திப்பம்பட்டி சாலையில் டிராக்டரில் தண்ணீர் கொண்டு சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில், சம்பவ இடத்திலேயே சின்னசாமி உயிரிழந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News August 24, 2025

தருமபுரி அருகே இளைஞர் போக்சோவில் கைது

image

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே தனியார் பள்ளி உரிமையாளரின் மகன் போக்சோ வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கண்மலர்-நடராஜ் மகன் விணுலோகேஸ்வரன் அதே பள்ளியில் பயிலும், 9 வகுப்பு வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். தகாத முறைகளில் பேசியும் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

News August 24, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து செல்லும் காவலர்கள் இரு பாதியாக பிரிக்கப்பட்டு முதல் பாதி விவரங்கள் மாவட்ட காவல்துறை வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக K. பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புஷ்பராணி, அரூர் மணிகண்டன், பென்னாகரம் முரளி, பாலக்கோடு பார்த்திபன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 23, 2025

தருமபுரி: தீராத நோய்கள் தீர்க்கும் அற்புத கோயில்

image

ராமரால் உருவாக்கப்பட்ட சிவலிங்கங்கள் தமிழநாட்டில் இரண்டு உள்ளன. ஒன்று ராமேஸ்வரம் மற்றொன்று தர்மபுரி தீர்த்தகிரி மலை கோயில். ராமர் அயோத்தி திரும்பிய போது சிவனுக்கு பூஜை செய்ய தனது அம்பை எய்து உருவாக்கிய தீர்த்தம் தான்இங்குள்ள ராமர் தீர்த்தம். இதனாலேயே மூலவர் தீர்த்தகிரிஸ்வரர் என பெயர் பெற்றுள்ளார். இங்குள்ள தீர்த்ததில் நீராடினால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!