Dharmapuri

News March 17, 2025

அங்கன்வாடியில் ரூ.24,200 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.அதிகபட்சம் 12ஆம் வகுப்பும் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்து கொள்ள <>கிளிக்<<>> செய்யவும்.

News March 17, 2025

தர்மபுரிக்கு நாளை விடுமுறை

image

தருமபுரி மாவட்டம், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு அரூர் வருவாய் கோட்டத்திற்கு நாளை (மார்ச் 18) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆர். சதீஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 29-ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2025

மூச்சுத்திணறி குழந்தை பலி

image

பேதாதம்பட்டியை சேர்ந்தவர் அபேக்தர் சேட்பால்-திவ்யா தம்பதியர். இவர்களுக்கு 4 மாத பெண் குழந்தை இருந்தது. தன் பெற்றோர் வீட்டிலிருந்த திவ்யா, நேற்று மதியம் குழந்தைக்கு தாய்பால் கொடுத்தபோது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்று பரிசோதித்த பொழுது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

News March 16, 2025

தருமபுரியில் ஒரு ஊட்டி

image

மேலே நீங்கள் பார்க்கும் படம் ஊட்டியோ, கொடைக்கனலோ அல்ல. கிழக்குத்தொடர்ச்சி மலைகளுள் ஒன்றான சித்தேரிமலை தான். தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள சித்தேரிமலை பசுமையான காடுகளையும், அழகிய மலை தொடர்களையும் செல்லும் வழி எங்கும் ரசித்துக் கொண்டே செல்லலாம். இந்த மலையில் 64 சிறிய மலை கிராமங்கள் இருக்கின்றன. நகரத்தின் இரைச்சலில் இருந்து அமைதியான சூழலில் பொழுதை கழிக்க இது ஒரு நல்ல ஸ்பாட். ஷேர் பண்ணுங்க

News March 16, 2025

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு: கொட்டிக்கிடக்கும் வேலை

image

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். தர்மபுரியை சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஒரே நேரத்தில் 2 பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.

News March 16, 2025

தக்காளி விலை வீழ்ச்சி: கிலோ ரூ.3-க்கு விற்பனை

image

தருமபுரி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து ஒரு கிலோ ரூ. 3-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. எப்பொழுதும் தக்காளி விலை அதிகமாக விற்கப்படும் நிலையில் இவ்விலை சரிவு இல்லத்தரசிகளுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

News March 16, 2025

தீர்த்தமலையின் சிறப்புகள் !!

image

அருள்மிகு தீர்த்த கிரீஸ்வரர் திருக்கோவில், இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மலைக்கு மேற்கே ராமன் தீர்த்தம், வாயு தீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கே இந்திர தீர்த்தம், வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது. தெற்கே எம தீர்த்தம் உள்ளது, இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற மலை தீர்த்தமலை ஆகும். இம்மலை இன்றளவும் சுற்றுலா பயணிகளை வியப்படைய வைக்கும் ஓர் அற்புத தளமாகவே உள்ளது.

News March 15, 2025

மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு வேலை

image

208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளதால், மாவட்ட சுகாதார சங்கம் சார்பில், 208 மருத்துவர்கள் மற்றும் நர்சுகள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். மருத்துவர்களுக்கு மாதம், ரூ.60,000, நர்சுகளுக்கு ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் இந்த க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க<>க்ளிக்<<>>

News March 15, 2025

குற்றச்செயல்களை கண்காணிக்க 1600 கண்காணிப்பு கேமராக்கள்

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் தருமபுரி கோட்டத்தில் 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுவரை 1600 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சாலை விபத்துக்கள் மற்றும் திருட்டு, வழிப்பறி, நகை திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை விரைவாக அடையாளம் காணப்படுகிறது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 15, 2025

தருமபுரி மக்களின் 84 ஆண்டு கால கனவு: அன்புமணி கேள்வி

image

தருமபுரி – மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் என்ன சிக்கல்? 6 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தாதது ஏன் என பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் அறிக்கையில், நிலங்களைக் கையகப்படுத்தாததற்கு தமிழக அரசு கூறியிருக்கும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. தேவையான நிலங்களை கையகப்படுத்தி கொடுக்க அரசு தவறி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!