Dharmapuri

News February 15, 2025

திருமண தடை நீக்கும் அதியமான் காலபைரவர்

image

அதியமான்கோட்டையில் 1200 ஆண்டுகள் பழமையான காலபைரவர் ஆலயம் உள்ளது. இந்த கால பைரவர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் மக்கள் வருவர். இக்கோயிலில் திருமணத் தடை உள்ளவர்கள் சாம்பல் பூசணியில் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News February 15, 2025

தருமபுரியில் வேலைவாய்ப்பு முகாம்

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தொன் போஸ்கோ கல்லூரி, சோகத்தூர் கூட்ரோடு, தருமபுரி வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதி உடைய நபர்களை வேலைக்குத் தேர்வு செய்ய உள்ளார்கள். இந்த முகாமில் வேலை இல்லாதவர்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 15, 2025

கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

தருமபுரி அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. மாணவர்களின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000 இருக்க வேண்டும். விண்ணப்பங்களை https/umis.tn.gov.in இணையத்தளத்தில் 28-02-2025க்குள் விண்ணப்பிக்கலாம்.

News February 15, 2025

தர்மபுரியில் இன்றைய இரவு ரோந்து பணி விவரம்

image

தர்மபுரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்றச்சம்பவங்கள் தடுக்கவும் அசம்பாவிதங்கள் தவிர்க்கவும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தருமபுரி மாவட்ட எல்லை பகுதிகளில் மாவட்ட இரவு ரோந்து அதிகாரி பாஸ்கர் தலைமையில் பிப்ரவரி 14 பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News February 15, 2025

பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் முக்கிய ஆலோசனை

image

பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவருமான ஜி.கே.மணி, பாமக சார்பில் கும்பகோணத்தில் நடைபெறும் சமய-சமுதாய நல்லிணக்க சோழ மண்டல மாநாடு குறித்து கடலூரில் இன்று (14/02/2025) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

News February 14, 2025

மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் தேதி அறிவிப்பு

image

நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை, இண்டூர், பாலவாடி, பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் (மூன்றாம் கட்டம்) முகாம் 19.02.2025 புதன்கிழமை நடைபெறுகிறது. அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுகளை வழங்கி விரைந்து தீர்வு காண கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார்.

News February 14, 2025

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

image

நாட்டில் அன்றாட கூலியாக பணிபுரியும் பெண்களுக்கான வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்க வேண்டியும், ஊதிய ஏற்ற தாழ்வுகளை தடுத்து பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி வலியுறுத்தி பேசியுள்ளார்.

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 83 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க <<>>வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

தருமபுரியில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளையோர் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகமும், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்,  நாளை (பிப்) 15-ம் தேதி தருமபுரியை அடுத்த சோகத்தூர் பகுதியில் உள்ள தொன் போஸ்கோ கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் பங்குபெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 14, 2025

மனைவி கண்டிப்பு: கணவன் விஷம் அருந்தி பலி 

image

அரூர், வீரப்ப நாயக்கன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன்ர்கூலித் தொழிலாளி இவருக்கு சுமிதா என்ற கு மனைவியும், 2 மகன்கள் உள்ளனர். வேடியப்பனுக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வேடியப்பன் குடி போதையில் இருந்ததை கண்டு மனைவி கண்டித்துள்ளார். இதனால் வேடியப்பன் மனமுடைந்து அரளி விதை உண்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!