Dharmapuri

News October 20, 2025

தருமபுரி: வீட்டில் செல்வம் பெருக உகுந்த நாள்

image

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், கடன் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க.

News October 20, 2025

தருமபுரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

தருமபுரியில் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று (அக்-19) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். ஷேர் செய்யவும்

News October 19, 2025

தருமபுரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்டோபர்-19) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

News October 19, 2025

தருமபுரி: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987 என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE

News October 19, 2025

தருமபுரி: தரமற்ற பெட்ரோலா? இதை பண்ணுங்க!

image

தருமபுரி மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.

1) இந்தியன் ஆயில்: 18002333555

2) பாரத் பெட்ரோல்: 1800224344

3) HP பெட்ரோல்: 9594723895

பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!

News October 19, 2025

தர்மபுரி: தீபாவளி முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு !

image

தர்மபுரி பூ மார்க்கெட்டில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இன்று (அக்.19) காலை 8 மணி நிலவரப்படி குண்டு மல்லி ஒரு கிலோ 800 ரூபாய், சன்னமல்லி ஒரு கிலோ  1000 ரூபாய், கனகாம்பரம் ஒரு கிலோ 800 ரூபாய், ஜாதி மல்லி ஒரு கிலோ 400 ரூபாய், சம்பங்கி ஒரு கிலோ 70 ரூபாய், பட்டன் ரோஸ் ரூ.250, செண்டு மல்லி ஒரு கிலோ 40 ரூபாய், சாமந்திப்பூ 100 ரூபாய் விற்பனையானது.

News October 19, 2025

தருமபுரி: 30,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

image

ரயில்வே துறையின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள 600 Senior Technical Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேதியியலில் B.Sc, சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் முழுநேர டிப்ளமோ முடித்த 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதம் ரூ.29,735/வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ-12குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம் ஷேர்.

News October 19, 2025

தருமபுரி: நிலம் வாங்க போறிங்களா?

image

நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா அல்லது புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும். அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும். பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம். பட்டாவுடன் ஆதார் இணைக்க, <>இணையதளத்தில்<<>> சென்று, ‘Aadhaar Linking for Patta’ பகுதியில் தேவையான விவரங்களை உள்ளிட்டு OTP மூலம் உறுதிசெய்து இணைக்கலாம். ஷேர்

News October 19, 2025

தருமபுரி: இலவச GAS சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

image

தருமபுரி மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க

News October 19, 2025

தருமபுரி: திருக்குறள் முற்றோதல் – ஆட்சியர் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் அறிவித்துள்ளார். இதில், கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியர் தமிழ் வளர்ச்சியின் tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பித்து கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!