India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் ஒட்டப்பட்டியில் திமுக சார்பில் தேர்தல் பிரச்சாரம் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் மணி மீன் வியாபாரம் செய்து வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் சண்முகம் மற்றும் கட்சியினை கலந்து கொண்டனர்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று(ஏப்.7) பிரச்சாரம் மேற்கொள்கிறார். பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பாக, தருமபுரியில் சௌமியா அன்புமணி வேட்பாளராக களம் காண்கிறார். அவரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்யுவுள்ளார். ஏப்.19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரம் சூடுபிடிடுத்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளான ஏழை மக்களுக்கு உணவு, இரத்ததானம், ஆதரவற்று இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வது போன்ற சேவைகளை ‘மை தருமபுரி’ செய்து வருகிறது. இதையடுத்து, இந்த அமைப்பிற்கு அசுபா நிறுவனம் சார்பில் ‘சிறந்த சமூக சேவை அமைப்புக்கான விருது’ நேற்று(ஏப்.6) சென்னையில் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது இயல்பை விட 3.1 டிகிரி செல்சியஸ் முதல் 5.0 டிகிரி செல்சியஸ் வரை அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லம்பள்ளி வட்டம் பட்டாகப்பட்டி கிராமத்தில் விவசாயி ஒருவரது வீட்டில் ஏப்ரல் 5ஆம் தேதி நாகப்பாம்பு ஒன்று புகுந்ததாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான குழு பாம்பு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையுடன் ஒப்படைத்தனர். பாம்பு படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் சோகத்தூர் கூட்ரோடு தேசிய நெடுஞ்சாலையில் இன்று(ஏப்.5) காலை 6 மணியளவில் எட்டிமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவரின் கார் மின்கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான குழு, தண்ணீரை குழாய் வழியாக பீச்சி அடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த விபத்தில் காரின் பாதி பகுதி எரிந்து சேதமானது.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இந்த நிலையில் இன்று(ஏப்.5) தருமபுரி ஒட்டப்பட்டியில் சௌமியா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் அனைவரும் ஆரத்தி எடுத்தும், மாம்பழம் ஏந்தியும் வேட்பாளரை வரவேற்றனர். உடன் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர்.

மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்புடன் வாக்களிப்பதை உறுதிப்படுதுதம் நோக்கில், அரூர் அடுத்த கம்பைநல்லூர் பகுதியில் நேற்று(ஏப்.4) போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அரூர் டிஎஸ்பி ஜெகன்நாதன் தலைமையில், கம்பைநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் முன் துவங்கிய அணிவகுப்பு பஸ் ஸ்டாண்ட், காரிமங்கலம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்றது.

தர்மபுரி பாமக வேட்பாளராக சவுமியா அன்புமணி களமிறக்கப்பட்டுள்ளார். இதனிடையே ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் எனது அம்மா சௌமியா, சமூக அக்கறை நிறைந்தவர். இதனால் நிறைய விழிப்புணர்வுகளை பெண்களிடம் ஏற்படுத்தி வருபவர் எனது அம்மா. எனவே எனது தாய்க்கு நீங்கள் அனைவரும் ஆதரவு வழங்கி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் மகள் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.