Dharmapuri

News May 1, 2024

பென்னாகரம் அருகே பேருந்து ஏறி விவசாயி பலி

image

பென்னாகரம் நல்லாம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவர் சொந்த வேலை காரணமாக நேற்று(ஏப்.30) மாலை தன பைக்கில் வண்ணாத்திப்பட்டி அருகே வந்தபோது எதிரே வந்த பைக் மோதி தூக்கி வீசப்பட்டு, பின்னால் வந்த அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பென்னாகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 30, 2024

தருமபுரி அருகே பெரியாண்டவர் கோவில் திருவிழா

image

தர்மபுரி வட்டம்,
ஏ.கொல்ல அள்ளி ஊராட்சி குளியனுர் கிராமத்தில் பெரியாண்டவர் திருவிழா இன்று (30.424) 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிடாவெட்டி கோலாகலமாக கொண்டாடினர். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விழா குழு சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

News April 30, 2024

மது விற்ற 2 பெண்கள் கைது

image

கடத்தூர் அருகே உள்ள ராமியம்பட்டியில், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக கோபிநாதம்பட்டி போலீசாருக்கு நேற்று கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்பகுதியில் மதுவிற்ற லட்சுமி, மற்றும் கலா ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 4,200 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News April 30, 2024

தர்மபுரி மாவட்டத்தின் நேற்றைய வெப்பநிலை

image

தர்மபுரியில் நேற்று (ஏப்.29) 104.9 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் தர்மபுரி மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.

News April 30, 2024

பாலக்கோடு: கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் பணந்தோப்பு கிராமத்தில் நேற்று(ஏப்.29) ஜெய்கிருஷ்ணன் என்பவரது விவசாய கிணற்றில் கறவை மாடு தவறி விழுந்து விட்டதாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான குழு கிணற்றில் இறங்கி கயிறு மூலம் கறவைமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

News April 29, 2024

பறவைக்காய்ச்சல் தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் இன்று (29.04.2024) கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கௌரவ் குமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News April 29, 2024

தண்ணீர் பந்தலில் பானை மாயம்

image

அரூர் சட்டமன்ற தொகுதி கம்பைநல்லூர் பேரூராட்சி சார்பில் கடந்த 4 நாட்களுக்கு முன் கோடை கோடைகாலத்தில் பொதுமக்கள் குடிநீருக்காக கம்பைநல்லூர் பேரூராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு இரண்டு பானைகளில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இந்த பானை திடீரென மாயமாகியுள்ளது. இதனால், அப்பகுதியில் தண்ணீர் குடிக்க வரும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

News April 29, 2024

தர்மபுரி நேற்றைய வெப்பநிலை விவரம்

image

தர்மபுரியில் நேற்று (ஏப்.28) 106.16 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 29, 2024

தர்மபுரியில் வெளுத்து வாங்கும் வெயில்

image

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள மிகவும் சிரமப்படுகிறார்கள். தினசரி வெப்பநிலை 105.5 தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் வெப்ப அலை வீசி வருவதால் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

News April 29, 2024

போட்டித் தேர்வு நடைபெறுவது குறித்த ஆலோசனை

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தகுதி 4- (Group-IV) பணிகளுக்கான போட்டித் தேர்வு வருகின்ற ஜூன் 9 தேதி அன்று தருமபுரி மாவட்டத்தில் நடைபெறுவதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!