Dharmapuri

News October 24, 2024

2024 2025 ஆம் ஆண்டுக்கான ராபி பயிர்களுக்கு காப்பீடு

image

தர்மபுரி மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ராபி பருவ பயிர்களுக்கு தர்மபுரி, பாலக்கோடு, நல்லம்பள்ளி அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில் உள்ள 23 குறு வட்டாரங்கள் வாரியாக அறிவிக்கப்பட்டு காப்பீடு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

News October 24, 2024

தருமபுரியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் நாளை குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏற்கனவே அறிவித்திருந்தார். நாளை(அக் 25) காலை 11 மணிக்கு தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. தர்மபுரி விவசாயிகள் தங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவித்து பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் சாந்தி  அழைப்பு விடுத்துள்ளார்.

News October 24, 2024

அரூர் கோட்டாட்சியர் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 7000 கன அடி தண்ணீர் இன்று (அக் 24) சிறிது நேரத்தில் திறந்து விடப்படுவதாக தகவல் வரப்பெற்றுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளம் கரைபுரண்டோடும். ஆகவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.எனவே அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News October 24, 2024

தர்மபுரியில் இன்று அமைச்சர்கள் சுற்றுப்பயணம்

image

தர்மபுரியில் இன்று காலை 9.30 க்கு தர்மபுரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆய்வு மற்றும் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, மாவட்ட விவசாயிகள் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், காலை 11.30 க்கு பென்னாகரம் புதிய பேருந்து நிலையம் திறந்து வைத்தல், மதியம் 1.30க்கு அரூர், மாரண்டஹள்ளி பேருந்து நிலையங்களை திறந்து வைத்தல் போன்ற நிகழ்வுகளில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொள்ளவிருக்கிறார்.

News October 24, 2024

முதியோர் மறுவாழ்வு இல்லங்களை பதிவு செய்யலாம்

image

மாவட்ட முழுவதும் குழந்தை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிக்கான இல்லங்கள், போதைப் பொருட்கள் அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களை பதிவு செய்ய https://tnhelth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணையதளம் வாயிலாக 1 மாத காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 23, 2024

தர்மபுரி அருகே லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

image

தர்மபுரி மாவட்டம், அரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், பொதுமக்களிடத்தில் அதிகப்படியான லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் தெரிவித்த நிலையில், இன்று தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் அரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் லஞ்சமும் சிக்கும் என்ற எதிர்பார்ப்பில் சோதனை நடைபெற்று வருகிறது.

News October 23, 2024

தர்மபுரிக்கு அமைச்சர்கள் வருகை பணிகள் தீவிரம்

image

தர்மபுரி மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வருகை தர உள்ளனர். இந்நிலையில் இன்று இடம் தேர்வு பணிகளை தர்மபுரி எம்.பி.மணி, தர்மபுரி நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது மற்றும் திமுக கிழக்கு மா.செ.தடங்கம் சுப்பிரமணியன் பார்வையிட்டனர்.

News October 23, 2024

தர்மபுரியில் நாளை மறுநாள் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

தர்மபுரி நகராட்சியுடன் இலக்கியம்பட்டி ஊராட்சியை இணைப்பதை எதிர்த்து அதிமுக சார்பில் நாளை மறுநாள் (அக் 25) தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் அதிமுக தர்மபுரி மாவட்ட செயலாளர் கேபி. அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதிமுகவினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று  (அக் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News October 23, 2024

தொழிற்சாலைகளுக்கு நிலம் ஒதுக்கீடு பணிகள் விரைவில் தொடக்கம்

image

தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான பணிகள் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது. மேலும், தொழிற்சாலைகள் துவங்க பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. எனவே, தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளை அமைக்க நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளது என சிப்காட் அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

News October 22, 2024

தருமபுரி எஸ்.பி அதிரடி உத்தரவு 

image

தருமபுரி மாவட்ட பட்டாசு விற்பனையாளருக்கு, உரிய அனுமதி பெற்று பட்டாசு கடை வைக்க வேண்டும் எனவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும், 125 டெசிமலுக்கு மேல் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது எனவும், தடை செய்யப்பட்ட சீனா பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்பன போன்ற பல்வேறு விதிமுறைகளை அறிவித்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!