India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டம் கோலம்பட்டியை சேர்ந்த செந்தில் குமார்(40) அசாமில் போலீசாக உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் பாப்பநாயக்கன்வலசை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று(ஏப்.22) மாமனார் வீட்டுக்கு சென்ற செந்தில்குமார் மாமியாருடன் சண்டையிட்டு வீட்டை சேதப்படுத்தி உள்ளார். இது குறித்து அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் நேற்று(ஏப்.22) அதிகபட்சமாக 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்று தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது. அதன்படி, முதலிடமாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், 2வதாக தருமபுரி, திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
காரிமங்கலம் காவேரிபட்டிணம் சாலையில் இருந்து மாரண்டஅள்ளி செல்வதற்காக காரில் வந்த இரு நபர்கள் எதிரே வந்த தண்ணீர் வாகனம் பிக்கப் மீது தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி சாலையோர இருந்த பனைமரத்தின் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த இரு நபருக்கும் பலத்த ரத்த காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
2024 மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணப்படும் தருமபுரி செட்டிகரையில் உள்ள பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று 22.04.2024 கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பதை பார்வையிட்டார்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு மின்னனு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இன்று ஏப்ரல் 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அவர்கள் சிசிடிவி காட்சி மற்றும் பாதுகாப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(ஏப்.22) குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பென்னாகரம் அடுத்த மூங்கில் மோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது வீட்டிற்கு செல்லும் வழித்தடத்தில் ஓடை புறம்போக்கு வழிப்பாதை எனக்கூறி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை அகற்றக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் சிறுது நேரம் பரபரப்பு நிலவியது.
ஈரோடு மாவட்டத்தை சார்ந்த ராமகிருஷ்ணன் அவரது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டு நேற்று மாலை சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். சங்கிலிவாடி அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டில் இருந்த கார் சாலை தடுப்புச் சுவற்றில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் பயணம் செய்த 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
காரிமங்கலம் ஏ முருக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். கடந்த 19ம் தேதி காலையில் அவரது குடும்பத்தினர் வெளியே சென்று இருந்தனர். மாலையில் அவரது வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதாக அவருக்கு தகவல் தெரிவித்தனர். வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் நகை கொள்ளை போனது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக 2024 மக்களவைத் தேர்தல் நேற்று(ஏப்.19) நடைபெற்றது. அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இந்த வாக்களிப்பில் புதிய இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அவர்களும் வாக்களித்தனர். இறுதியாக தருமபுரி மாவட்டத்தில் 75.44 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. 6:00 மணிக்கு முன்னதாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் ஒட்டுமொத்தமாக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 75.44% வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.