Dharmapuri

News November 14, 2024

தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு முகாம்; கலெக்டர் அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1501 வாக்கு சாவடிகளை உள்ளடக்கிய 907 வாக்குச்சாவடி மையங்களிலும் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் கோரிக்கைகளுக்கான படிவங்கள் பெறப்படும். படிவங்களை பெறுவதற்கு ஏதுவாக நவ 16, 17 மற்றும் 23, 24 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என தர்மபுரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 14, 2024

ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தில் 39 மனுக்கள் பெறப்பட்டன

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டறங்கில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த ஆண்டு பெறப்பட்ட ஓய்வூதியர் மனுக்களின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது ஓய்வூதியர்கள் இடம் இருந்து பெறப்பட்ட 39 மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மனுதாரர்களுக்கு பதில் தெரிவிக்கப்பட்டது.

News November 14, 2024

தர்மபுரி மாவட்டத்தில் வாக்குசாவடி மைய அலுவலர்கள் நியமனம்

image

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, மற்றும் அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் இடமிருந்து படிவங்களை பெற்றிட வாக்குசாவடி மைய அலுவலர்கள் DLO நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News November 14, 2024

தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் தகவல்

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை( நவ 15) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூடிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், அக்கவுண்டன்ட், மெக்கானிக் வேலைக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

தருமபுரி மாவட்ட மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், லிங்கை கிளிக் செய்யுமாறு கூறி, போலியான லிங்குகளை அனுப்பி தரவுகள் திருடப்படுவதால், எச்சரிக்கையாக இருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.  மேலும், உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்யலாம் எனக் கூறியுள்ள காவல்துறை, புகார்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கலாம் எனக் கூறியுள்ளது.

News November 13, 2024

தர்மபுரி மாவட்டத்திற்கு துணை முதலமைச்சர் வருகை

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 5,6,7 தேதிகளில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வருகை தர உள்ளார். மேலும் தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை குறித்தான அரசாணை கடிதம், இமெயில் மூலம் நேற்று  பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

News November 13, 2024

தர்மபுரியில் முன்னாள் அமைச்சர் அறிக்கை

image

தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கேபி அன்பழகன் எம்.எல்.ஏ., இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை முதல் மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்படும் சிறப்பு வாக்குச்சாவடி சுருக்க திருத்த முகாமில் அதிமுகவினர் அனைவரும் பொதுமக்களுக்கு துணையாக இந்த பணியில் தங்களை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

தர்மபுரி ஆட்சியர் அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டம் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பட்டய கணக்காளர் இடைநிலை செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் இடைநிலை மற்றும் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார். பயிற்சியில் சேர்வதற்கு என்ற www.tahdco.com என்ற இணையதளத்தை பதிவு செய்ய வேண்டும்

News November 13, 2024

கணக்காளர் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி கலெக்டர் தகவல்

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பட்டய கணக்காளர் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோ மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு தர்மபுரி தாட்கோ மாவட்ட மேலாளர் அவர்களை நேரில் அணுகுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி நவம்பர் 12 இன்று தெரிவித்துள்ளார்.

News November 12, 2024

கிணற்றில் விழுந்த சிறுத்தை தப்பியது எப்படி?

image

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் விழுந்து உறுமிக் கொண்டிருந்த சிறுத்தை, வனத்துறையினர் மீட்புப் பணியை தொடங்கும்போதே குதித்து ஓடியது. சிறுத்தை விளைநிலங்களில் உள்ள பயிர்களுக்குள் நுழைந்து வனத்தை நோக்கி ஓடியதால் அது வனத்துக்குள் சென்றது. மேலும், சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் வனத்துறை சார்பில் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

error: Content is protected !!