Dharmapuri

News May 2, 2024

தர்மபுரி சுற்றுவட்ட பகுதியில் சாரல் மழை

image

தர்மபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று அதே போல் தருமபுரி மாவட்டத்தில் இன்று வெயிலின் தாக்கம் 108 டிகிரியாக அதிகரித்தது. அதே போல் இன்று மாலை 5 மணி அளவில் மேகங்கள் கருமேகம் கூட்டம் சாய்ந்து உள்ளது. தற்போது ஆறு மணி அளவில் தர்மபுரி சுற்றுவட்ட பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News May 2, 2024

தருமபுரி: பெற்றோருக்கு பாத பூஜை செய்த மாணவர்கள்

image

கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியில் இன்று முதல் பாரா மெடிக்கல் கல்லூரி பல்கலைகழக தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் இக்கல்லூரி மாணவ மாணவிகள் 267 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வுகள் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக பள்ளி வளாகத்தில் தங்களது பெற்றோர்களை, மாணவ மாணவிகள் வரிசையாக நிற்க வைத்து அவர்களின் பாதங்களது பாதங்களை கழுவி குங்குமம் வைத்து மலர் தூவி ஆசி பெற்றனர்.

News May 2, 2024

தருமபுரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

வடமாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது முதன்முதலாக தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தருமபுரிக்கு இன்று (மே.02) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

News May 2, 2024

அரூர்: இளைஞர்கள் அமைத்த தெருவிளக்கு

image

அரூர் அருகே உள்ள சோரியம்பட்டி புதூர் மெயின் ரோட்டில் தெரு மின்விளக்கு அமைத்து தர வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் மோப்பிரிபட்டி பஞ்சாயத்து கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்‌.
ஆனால் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று(மே 1) அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அப்பகுதிக்கு மின்விளக்கு அமைத்துள்ளனர்.

News May 1, 2024

பென்னாகரம் அருகே பேருந்து ஏறி விவசாயி பலி

image

பென்னாகரம் நல்லாம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவர் சொந்த வேலை காரணமாக நேற்று(ஏப்.30) மாலை தன பைக்கில் வண்ணாத்திப்பட்டி அருகே வந்தபோது எதிரே வந்த பைக் மோதி தூக்கி வீசப்பட்டு, பின்னால் வந்த அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பென்னாகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 30, 2024

தருமபுரி அருகே பெரியாண்டவர் கோவில் திருவிழா

image

தர்மபுரி வட்டம்,
ஏ.கொல்ல அள்ளி ஊராட்சி குளியனுர் கிராமத்தில் பெரியாண்டவர் திருவிழா இன்று (30.424) 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிடாவெட்டி கோலாகலமாக கொண்டாடினர். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விழா குழு சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

News April 30, 2024

மது விற்ற 2 பெண்கள் கைது

image

கடத்தூர் அருகே உள்ள ராமியம்பட்டியில், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக கோபிநாதம்பட்டி போலீசாருக்கு நேற்று கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்பகுதியில் மதுவிற்ற லட்சுமி, மற்றும் கலா ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 4,200 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News April 30, 2024

தர்மபுரி மாவட்டத்தின் நேற்றைய வெப்பநிலை

image

தர்மபுரியில் நேற்று (ஏப்.29) 104.9 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் தர்மபுரி மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.

News April 30, 2024

பாலக்கோடு: கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் பணந்தோப்பு கிராமத்தில் நேற்று(ஏப்.29) ஜெய்கிருஷ்ணன் என்பவரது விவசாய கிணற்றில் கறவை மாடு தவறி விழுந்து விட்டதாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான குழு கிணற்றில் இறங்கி கயிறு மூலம் கறவைமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

News April 29, 2024

பறவைக்காய்ச்சல் தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் இன்று (29.04.2024) கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கௌரவ் குமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!