Dharmapuri

News November 10, 2025

தருமபுரியில் உலக அமைதி தின பேரணி

image

நாளை உலக அமைதி தினத்தை (11-11-2025) முன்னிட்டு, ஒருங்கிணைந்த கிராமப்புற கல்வி அறக்கட்டளை & கிராம விழிகள் அறக்கட்டளை இணைந்து, இன்று (நவ.10) தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இருந்து அமைதிப் பேரணி நடைபாதையாக நடைபெற்றது. இது தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து மருத்துவமனை வரை நடைபெற்றது. இதில் மருத்துவத் துறைகளில் பயிலும் மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

News November 10, 2025

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய ஆட்சியர்

image

சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த செப்டம்பர் 15 அன்று தமிழ்நாடு முதலமைச்சர், பெற்றோர் இல்லாத உயர் கல்வியில் சேர்ந்துள்ள 8 தருமபுரி மாவட்ட மாணவ, மாணவியர்களுக்கு முதல் கட்டமாக மடிக்கணினிவழங்கப்பட்டது . இதை தொடர்ந்து மூன்று மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சதிஷ் இன்று (நவ.10) மடிக்கணினிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News November 10, 2025

தருமபுரி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News November 10, 2025

தருமபுரி: கேஸ் சிலிண்டரில் பிரச்னையா?

image

தருமபுரி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.

News November 10, 2025

தருமபுரி: உங்களிடம் G Pay / PhonePe / Paytm இருக்கா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News November 10, 2025

தருமபுரி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளுங்க!

News November 10, 2025

தருமபுரியில் கரண்ட் கட்!

image

பொம்மிடி, வே.முத்தம்பட்டி, கே.என்.புதூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ.11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிக்கவுண்டனூர், பொ.துரிஞ்சிபட்டி, நடூர், ஒட்டுபட்டி, பில்பருத்தி, ஆகிய சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News November 10, 2025

தருமபுரியில் இன்றே கடைசி-2,708 காலியிடங்கள்!

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று நவ.10. 5) விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

தருமபுரியில் 1,027 பேர் ஆப்சென்ட்!

image

தருமபுரி மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வு மையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு நேற்று (நவ.9) நடைபெற்றது. இதில் மொத்தம் 9,559 பேர் தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. இதில், 8,538 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்ததாகவும், 1,027 பேர் ஆப்சென்ட் ஆனதாகவும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

News November 10, 2025

தருமபுரி: தொடரும் வேட்டை-ரூ.80,000 அபராதம்!

image

காரிமங்கலம் பகுதியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அர்ஜுன் (28), சந்தோஷ் (30) ஆகியோர் திருப்பத்தூர் பகுதியில் வேட்டையாடிய முயல் கறியை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அப்போது காரிமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் அவர்களை பிடித்து, பாலக்கோடு வனச்சரகம் கொண்டு வந்து விசாரணை செய்தனர். தருமபுரி மாவட்ட வன அலுவலர் இருவருக்கும் தலா ரூ.40,000 வீதம் மொத்தம் ரூ.80,000 அபராதம் விதித்தார்.

error: Content is protected !!