Dharmapuri

News April 29, 2025

தருமபுரி: போதைப் பொருள் புகார் எண்கள் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட அளவில் பொதுமக்கள் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாடு குறித்து 24/7 செயல்படும் Whats app எண்ணிற்கு 63690 28922 தொடர்ப்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், DRUG FREE TN என்ற செயலி மூலமாகவும் புகார் அளிக்கலாமென தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார். இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 29, 2025

தர்மபுரியில் அரசு வேலை; நாளை கடைசி நாள்

image

தர்மபுரி அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்படவுள்ளன். இப்பணிக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து நாளை(ஏப்.30) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News April 29, 2025

தருமபுரியில் பார்க்க வேண்டிய அம்மன் கோயில்கள்

image

▶️காளியம்மன் கோயில், தருமபுரி,
▶️அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில், கடத்தூர்,
▶️ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் கோயில், தருமபுரி,
▶️கொல்லபுரி அம்மன் கோயில், கம்பைநல்லூர்,
▶️அழகி அம்மன் கோயில், ஜொதிப்பட்டி,
▶️வராகி அம்மன் கோயில், அன்னசாகரம்.
கோயிலுக்கு செல்லும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 29, 2025

24 மணிநேரமும் மதுபானங்கள் விற்பனை செய்தவர் கைது

image

மெணசியை சேர்ந்த சிவசக்தி டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை வாங்கி வீட்டில் பதிக்கி 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று சிவசக்தியின் வீட்டில் காவலர்கள் சோதனை செய்த போது அவர் விற்பனைக்காக வைத்திருந்த 21 மது பாட்டில்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர், மேலும் சிவசக்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News April 29, 2025

தர்மபுரியில் மலைத்தேனீ கொட்டி ஒருவர் பலி

image

பாப்பாரப்பட்டி அருகே உள்ள மலையூரை சேர்ந்தவர் சஞ்சீவமூர்த்தி, 35. நேற்று முன்தினம் கோடுப்பட்டி சின்னாறு வனப்பகுதியில் தன் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மலைத்தேனீக்கள் சஞ்சீவமூர்த்தியை கொட்டின. இதனால், மயக்க நிலைக்கு சென்றுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News April 28, 2025

12th பாஸ் போதும்: ரூ.25000 சம்பளத்தில் வேலை

image

தர்மபுரியில் உள்ள டாடா எலெக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தில் லைன் ஆப்ரேட்டர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இப்பணிக்கு 18-35 வயத்துக்குட்பட்ட பெண்கள் 12 வகுப்பு முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாத சம்பளம் 25,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இந்த வேலைக்கு இந்த<> லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தம்புரியில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 28, 2025

குருபர அள்ளி கிணற்றில் விழுந்த முதியவர்

image

மொரப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குருபர அள்ளி பகுதியை சேர்ந்தவர் மந்திரி(55). உணவு சாப்பிட்டு  கைகழுவ சென்றபோது இவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.  அரூர் தீயனைப்பு துறையினர், இவரது உடலை மீட்டு அரூர் G.H. க்கு அனுப்பி வைத்தனர். இவரது இறப்பு குறித்து மொரப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 27, 2025

உங்களுக்கு தெரியுமா ? தர்மபுரி அரசு நிறுவனங்களின் எண்கள்

image

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி- 04342-233177,அரசு மருத்துவக் கல்லூரி – 04342-233 600, அரசு சட்டக் கல்லூரி – 04348-291292, அரசு பெண்கள் கலைக் கல்லூரி – 04348-241399, அரசு பொறியியல் கல்லூரி – 04342-290090, அரசு ஐடிஐ கல்லூரி – 043482 35323, கூட்டுறவு சர்க்கரை ஆலை பல்தொழில்நுட்ப கல்லூரி-9442222102, *அட்மிஷனுக்காக +2 மாணவர்களுக்கு பகிரவும். ஷேர் பண்ணுங்க..

News April 27, 2025

மலைப்போல் குவிந்துள்ள குப்பை – நோய் தொற்று அபாயம்

image

இன்று ஏப்ரல்-27, தர்மபுரி மாவட்டப் பகுதியில் அமைந்திருக்கும் உழவர்சந்தையில் தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலையும் குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் மீதமான காய்கறிகளை உழவர் சந்தைக்கு வெளியே கொட்டி செல்வதால் மலைபோல் குவிந்துள்ள காய்கறிகளின் குப்பையில் இருந்து அழுகிய துர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம்

News April 27, 2025

அதியமான் கோட்டை அருகே ரயில்வே பணி

image

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட அதியமான் கோட்டை பஞ்சாயத்தில் அமைந்துள்ள பெங்களூர் முதல் சேலம் வரையிலான ரயில் பாதை, பராமரிப்பு பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. ரயில்வே பாதையின் இருபுறமும் மண் சரி செய்யப்பட்டு ரயில் பாதையில் சிறிய ஜல்லி கற்களையும் ரயில்வே துறை ஊழியர்கள் மாற்றம் செய்து வருகின்றனர். விரைவில் இந்த ரயில் பாதை பயன்பட்டிற்கு வரவேண்டும் என பொதுக்கல் கோரிக்கை

error: Content is protected !!