India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ளப்படும்
முன்னேற்பாடு பணிகள் குறித்து வாக்கு எண்ணும் அலுவலருக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட சாந்தி தலைமையில் நேற்று (22.05.2024) நடைபெற்றது. உடன், மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தை சேர்த்தவர் மாரியப்பன் (53). இவருக்கு சொந்தமான கொட்டகையில் தனது 3ஆடுகளை இரவு மழையின் காரணமாக கட்டி வைத்துள்ளார். இதனையடுத்து காலையில் எழுந்து பார்த்த போது இறந்து கிடைந்தது. அப்போது, அடையாளம் தெரியாத விலங்கு கடித்து 3 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி விளையாட்டு மேம்பாடு ஆணையம் சார்பில் இன்று முதல் 5ஆம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இப்பயிற்சி வரும் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பெண்களுக்கு தனியாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவிகள், பெண்கள் காலை 9 மணி முதல் 10 மணி வரை பெண்களுக்கு மட்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. நீச்சல் பயிற்சி கட்டணம் ₹1770. இதற்கான விண்ணப்பம் நீச்சல் குள அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய
முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,
தேர்தல் பிரிவு அலுவலர்களுடான ஆலோசனைக்கூட்டம் நேற்று (22.05.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.
தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவன் சஞ்சய் அகில இந்திய மற்றும் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் கைப்பந்து போட்டிகளில் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இதையடுத்து தர்மபுரி கல்லூரி முதல்வர் கண்ணன் அம்மாணவருக்கு பாராட்டு சான்றிதழ், கோப்பைகள் மற்றும் பதக்கம் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன் சக பேராசியர்கள் இருந்தனர்.
தருமபுரி மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தருமபுரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு அடைந்த நிலையில், 11ஆம் வகுப்பு சேர்க்கை இப்போது தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. அதேபோல்தான் இன்று இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம்வகுப்பு சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதை ஆர்வமுடன் மாணவ, மாணவிகள் சேர்ந்து வருகின்றனர்.
தர்மபுரி; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 06/05/2024முதல் தொடங்கியது. விண்ணப்பம் சமர்ப்பிக்க 20/05/24 இன்று இறுதி நாளாக இருந்தது. இன்னும் கூடுதல் மாணவர்கள் விண்ணப்பம் செய்யும் ஏதுவாக இணைய வழி விண்ணப்பம் செய்ய 24/05/2024 ஆக நீட்டிப்பு செய்யப்படுகின்றது.
தர்மபுரி, பென்னாகரம் தொகுதி ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் எம்எல்ஏ ஆய்வு நிகழ்ச்சி (மே.20) நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று பயணிகள் மற்றும் சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து பார்வையிட்டார். இந்நிகழ்வு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காரிமங்கலம் அருகே பைபாஸ் சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் எலக்ட்ரீசியனாக சேது(30) என்பவர் பணிபுரிந்து வந்தார். இன்று தொழிற்சாலையின் மேல் பகுதியில் வயர் இணைக்கும் பணியில் ஈடுபட்ட போது தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை தர்மபுரி
ஜி.ஹெ-ச்சுக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து காரியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.