India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் மக்காத மண்ணுக்கும், விவசாயத்திற்கு மாசு ஏற்படுத்தியும் பெரும் இடையூராக இருந்து வரும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், பொ.மல்லாபுரம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், ரோட்டோர கடைகள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வந்த நிலையில், இன்று 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
அயலகத் தமிழர் நல வாரியத்தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காப்பீடு திட்டம், கல்வி உதவித்தொகை, திருமண உதவி திட்டங்களில் அயலகத் தமிழர்கள் பயன் பெறலாம். இதற்கு, https://nrtamils.tn.gov.in/en/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 8003093793, 8069009901 என்ற எண்களில் தொடர்பு கொள்ள கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வாயிலாக பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகின்றது. இந்திய குடிமகனாக மற்றும் இந்தியாவின் வசிக்கும் 5 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் <
தருமபுரி; குழந்தை திருமண தடை சட்டம் 2006-ன் படி குழந்தை திருமணத்தை நடத்திய பெற்றோர் (அ) பாதுகாவலர்கள், மணமகன், திருமணத்தை நடத்தி வைக்கும் மத தலைவர்கள், திருமணத்தில் கலந்து கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள், உதவி செய்யும் நபர்கள் அனைவரும் குற்றம் செய்தவராக கருதப்பட்டு அவர்களுக்கு 2 வருடங்கள் கடும் சிறை தண்டனை அல்லது 1 லட்சம் வரை அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்
காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திராவை சேர்ந்த யோக திருப்பதி(35) என்பவர் நேற்று(மே 24) தருமபுரி நோக்கி காரை ஓட்டி சென்றார். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து திடீரென கார் மீது மோதியதில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த யோக திருப்பதி தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற 15 முதல் 35 வயது உட்பட்ட தகுதி வாய்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.in.gov.in என்ற இணையதளம் மூலமாக 31/05/2024அன்று மாலை4.00 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று (மே.24) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தர்மபுரியில் இடி மின்னலுடன் மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பதிவு செய்ய (24/05/2024) இன்றுடன் கால அவகாசம் முடிவடைகின்றது. எனவே பிளஸ் டூ முடித்த மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளத்தில் சென்று உடனடியாக விண்ணப்பம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
தர்மபுரி; தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு மக்களவைத் தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி கலந்து கொண்டார்.
பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த 13-வயது சிறுமிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டில் செங்கல் சூளை அதிபர் ஜெயக்குமார்(32) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து ஜெயக்குமார் குற்றம் செய்தது உறுதியானதை அடுத்து நீதிபதி சையத் பர்க்கத்துல்லா, ஜெயக்குமாருக்கு 20 ஆண்டு சிறை & 35 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Sorry, no posts matched your criteria.