Dharmapuri

News November 15, 2024

தர்மபுரி மாவட்டத்தில் மழை நிலவரம் 

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மழை பதிவான நிலை. தர்மபுரி – 7மி.மீ, பாலக்கோடு – 35.4மி.மீ, மாரண்டஹள்ளி- 21மி.மீ, பென்னாகரம் – 5.5மி.மீ, ஓகேனக்கல் – 1.6மி.மீ, அரூர் – 7.2மி.மீ, பாப்பிரெட்டிபட்டி – 28.4மி.மீ, மொரப்பூர் – 7மி.மீ. மொத்தம் -113.1மி.மீ. மாவட்ட சராசரி -12.57 மி.மீ மொத்தமாக பதிவாகியுள்ளது.

News November 15, 2024

கல்வி உதவித் தொகைக்கு உடனடியாக பதிவு செய்யவும்

image

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த (BC, MBC/DNC) மாணவ மாணவிகள் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகைக்கு புதிதாக மற்றும் புதுப்பித்தலுக்காக விரும்பும் தகுதியான மாணவர்கள் tngovtitsscholarship@gmail.com என்ற முகவரிக்கு பூர்த்தி செய்து 15/01/2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தர்மபுரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 15, 2024

மீனவர் பட்டதாரிகளுக்கு குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி

image

அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி நிலையம் இணைந்த ஆண்டு தோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவர் பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்தியேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு:04342-232311,93848 24260 என்று தர்மபுரி கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News November 15, 2024

தர்மபுரியில் உறுதியளித்த எம்பி 

image

2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தூள்செட்டி கால்வாய் பணிகள் நிறைவேற்றப்படும் எனவும், தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து வருவதாகவும், மேலும் தருமபுரி மாவட்டத்தை முன்னேற்றம் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி பாலக்கோட்டில் தெரிவித்துள்ளார்.

News November 15, 2024

தருமபுரியில் வேலைவாய்ப்பு; ஆட்சியர் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் மருதிப்பட்டி டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் 24-25 ஆம் ஆண்டு கல்வி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தை தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நியமனம் செய்ய தகுதி பெற்ற நபர்கள் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நேரடியாகவோ, 636705 அஞ்சல் மூலமாகவோ 20/11/2024 க்குள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பலாம் என ஆட்சியர் சாந்தி வெளியிட்டார்

News November 14, 2024

தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு முகாம்; கலெக்டர் அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1501 வாக்கு சாவடிகளை உள்ளடக்கிய 907 வாக்குச்சாவடி மையங்களிலும் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் கோரிக்கைகளுக்கான படிவங்கள் பெறப்படும். படிவங்களை பெறுவதற்கு ஏதுவாக நவ 16, 17 மற்றும் 23, 24 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என தர்மபுரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 14, 2024

ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தில் 39 மனுக்கள் பெறப்பட்டன

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டறங்கில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த ஆண்டு பெறப்பட்ட ஓய்வூதியர் மனுக்களின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது ஓய்வூதியர்கள் இடம் இருந்து பெறப்பட்ட 39 மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மனுதாரர்களுக்கு பதில் தெரிவிக்கப்பட்டது.

News November 14, 2024

தர்மபுரி மாவட்டத்தில் வாக்குசாவடி மைய அலுவலர்கள் நியமனம்

image

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, மற்றும் அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் இடமிருந்து படிவங்களை பெற்றிட வாக்குசாவடி மைய அலுவலர்கள் DLO நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News November 14, 2024

தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் தகவல்

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை( நவ 15) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூடிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், அக்கவுண்டன்ட், மெக்கானிக் வேலைக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

தருமபுரி மாவட்ட மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், லிங்கை கிளிக் செய்யுமாறு கூறி, போலியான லிங்குகளை அனுப்பி தரவுகள் திருடப்படுவதால், எச்சரிக்கையாக இருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.  மேலும், உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்யலாம் எனக் கூறியுள்ள காவல்துறை, புகார்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கலாம் எனக் கூறியுள்ளது.

error: Content is protected !!