Dharmapuri

News April 4, 2025

JUST NOW: கைவிலங்குடன் தப்பியவர் சடலமாக மீட்பு

image

தருமபுரி மாவட்டம் ஏமனூரில் தந்தத்திற்காக ஆண் யானையை கொன்றதாக கைது செய்யப்பட்ட செந்தில் என்பவர் கடந்த மாதம் 18ஆம் தேதி கைவிலங்குடன் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் ஏமனூர் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் அழுகிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் திட்டமிட்டே வனத்துறையினர் செந்திலை கொன்று விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

News April 4, 2025

1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு உள்ளது. ஷேர் செய்யுங்கள்

News April 4, 2025

குடிநீர் கேட்டு மாணவியர் போராட்டம் – சீமான் ஆவேசம்

image

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் தங்களுக்கு முறையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி கேட்டு மாணவ-மாணவியர் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். தங்களால் தான் தமிழ்நாடு முன்னேறியது என்றெல்லாம் பெருமை பேசும் 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் அடிப்படை தேவையான கழிவறை மற்றும் குடிநீர் வசதிகூட ஏற்படுத்தி தரவில்லை என்பது வெட்கக்கேடானது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

News April 4, 2025

தருமபுரி மாவட்டத்தில் மழை வெளுக்கும்

image

தருமபுரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று, காரிமங்கலம், பென்னாகரம், இண்டூர், தீர்த்தமலை போன்ற பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாளை (ஏப்ரல்.5) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News April 3, 2025

மகளிர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் கலெக்டர்

image

மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் தனிநபர் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும் கிராம மட்டத்தில் 10, 20 பெண்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுக்கள் ஆகும் இந்த குழுக்களுக்கு சுழல் நிதி கடன் பொருளாதார கடன் வங்கி கடன்கள் வழங்கப்படுகின்றது. இந்த கடன் உதவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தர்மபுரி கலெக்டர் சதீஷ் அறிவுறுத்தியுள்ளார்.

News April 3, 2025

கல்வி உரிமைச் சட்டம் (RTE) – 2025 விண்ணப்ப விவரங்கள்

image

கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ், தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்க விண்ணப்பிக்க தேவையான முக்கிய தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை LKG மற்றும் 1-ம் வகுப்பில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். வரும் ஏப்ரல்.22 முதல் மே.20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தருமபுரி மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News April 3, 2025

தருமபுரியில் ஒரு ஊட்டி

image

மேலே நீங்கள் பார்க்கும் படம் ஊட்டியோ, கொடைக்கனலோ அல்ல. கிழக்குத்தொடர்ச்சி மலைகளுள் ஒன்றான சித்தேரிமலை தான். தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள சித்தேரிமலை பசுமையான காடுகளையும், அழகிய மலை தொடர்களையும் செல்லும் வழி எங்கும் ரசித்துக் கொண்டே செல்லலாம். தற்போது வெயில் வாட்டி வைத்து வரும் நிலையில், இங்கு குடும்பத்துடன் சென்றால் அமைதியான சூழலில் பொழுதை கழிக்க இது ஒரு நல்ல ஸ்பாட். ஷேர் பண்ணுங்க

News April 3, 2025

ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

image

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணிணி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். ஷேர் செய்யுங்கள்

News April 3, 2025

டூவீலரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

image

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த நம்பிப்பட்டி சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன்கள் வீரமணி (42), அழகிரி (40). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம், டூவீலரில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேப்பநத்தம் – ஈச்சம்பாடி செல்லும் சாலையில் வந்தபோது, திடீரென டூவீலரில் இருந்து இருவரும் தவறி கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த வீரமணி பரிதாபமாக உயிரிழந்தார். 

News April 2, 2025

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர் மற்றும் நர்ஸ் வேலை

image

தருமபுரி அரசு மருத்துவமனையில் வரும் ஏப்.05 அன்று 10AM- 2PM வரை 108 ஆம்புலன் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனருக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. ஒட்டுனர்களுக்கு 10 வகுப்பில் தேர்ச்சியும், மருத்துவ உதவியாளருக்கு பி.எஸ்.இ நர்ஸ்ங் முடித்திருக்க வேண்டும். 19-35 வயதுடையோர் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். 10 வகுப்பு தேர்ச்சி பெற்ற நண்பர்களுக்கு பகிரவும்

error: Content is protected !!