Dharmapuri

News October 27, 2025

ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைத்திர்க்கும் நாள் கூட்டம்

image

ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் ஆட்சியர் சதீஸ் தலைமையில் இன்று அக்.27 நடைபெற்றது. இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 502 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் அரூர் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுப்பிரமணியன் என பலர் பங்கேற்கற்றனர்

News October 27, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்..

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்-27) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

News October 27, 2025

தருமபுரி: ரூ.30,000 சம்பளத்துடன் அரசு வேலை!

image

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். ஆரம்பக்கட்ட சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும். வயது வரம்பு: 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அக்.29-ம் தேதிக்குள் <>இந்த லிங்கின்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 27, 2025

தருமபுரி: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தருமபுரி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News October 27, 2025

தருமபுரி: உங்கள் PHONEல் இது இருப்பது கட்டாயம்!

image

1)TN alert: உங்கள் பகுதியில் மழை, பருவமாற்றம், பேரிடர் கால உதவிகளுக்கான செயலி.
2)நம்ம சாலை: உங்கள் பகுதி சாலைகள் குறித்த புகார் அளிப்பதற்கான செயலி.
3)தமிழ் நிலம்: பட்டா சம்மந்தமான அனைத்து சேவைகளுக்குமான செயலி.
4)e-பெட்டகம்: உங்கள் தொலைந்துபோன சான்றிதழ்களை மீட்கும் செயலி.
5)காவல் உதவி: அவசர காவல்துறை புகார், உதவிக்கான செயலி.
இவைகளை பதிவிறக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க!

News October 27, 2025

தருமபுரி: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; போன் போதும்!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.<>இங்கு க்ளிக் <<>>பண்ணி பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு செய்யுங்க. 2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க 3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. 7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News October 27, 2025

தருமபுரி: வரலாற்று ஓவியம் கண்டெடுப்பு

image

பென்னாகரம் வட்டம், நாகமரை காவிரி ஆற்றுப்படுகை மணிக்காரன் கொட்டகையை அடுத்த பூதிகுண்டில், பெருங்கற்கால பாறை ஓவியங்கள் இருப்பதாக வந்த தகவலையடுத்து, பென்னாகரம் வரலாறு மைய ஒருங்கிணைப்பாளர்கள் பெருமாள் தலைமையில், அப்பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதி பாறையில், பெருங்கற்கால வெண்சாந்து ஓவியம் இருப்பது கண்டறியப்பட்டது. அது 2,500 முதல், 3,500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்டிருக்கலாம்.

News October 27, 2025

பெற்றோர் திட்டியதால் மாணவன் விஷம் குடித்து தற்கொலை

image

கம்பைநல்லூர் மஞ்சமேடு பகுதியை சேர்ந்தவர் பச்சியப்பன் இவரது மகன் சதீஷ் (14), 11ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் இருந்த சதீஷ் பீடி குடித்துள்ளான். இதனை பார்த்த அவரது தாய், மகனை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த அவர் கடந்த 18 ஆம் தேதி வீட்டில் விஷத்தை குடித்த அவரை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அக்.25 உயிரிழந்தார்.

News October 27, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

News October 26, 2025

தருமபுரி: 10th போதும், அரசு வேலை!

image

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 10th, +2, டிகிரி, பி.எட் & நர்சிங் படித்தவர்கள்<> விண்ணப்பிக்கலாம்<<>>. இதற்கு ரூ.18,000-ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி அக்.28. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!