Dharmapuri

News October 28, 2025

சட்டவிரோத மண் கடத்தல்: லாரி பறிமுதல்

image

இன்று அக்.28 காரிமங்கலம் மொரப்பூர் மேம்பாலம் அருகே கனிமவளத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரியை மடக்கினர். லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த லாரி கரகப்பட்டியில் இருந்து சட்ட விரோதமாக மண் கடத்தி வந்தது தெரிந்தது. தொடர்ந்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 28, 2025

தருமபுரி: தமிழ் தெரிந்தால் போதும், அரசு வேலை!

image

தமிழத்தில் காலியாக உள்ள 1,429 HEALTH INSPECTOR பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, MPHW/ சுகாதார ஆய்வாளர் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 18-60 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கு ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.

News October 28, 2025

பயிற்சி கையேடுகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கிய ஆட்சியர்

image

தருமபுரி ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து இளம் நுகர்வோர்களுக்கான புத்தாக்க பயிற்சியினை ஆட்சியர் சதீஸ் இன்று (அக்.28) துவக்கி வைத்தார். இப்புத்தாக்க பயிற்சி கையேடுகளை பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் முக்கிய அதிகாரிகள் இருந்தனர்.

News October 28, 2025

தருமபுரி: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

image

தருமபுரி மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்.

News October 28, 2025

தருமபுரி: IT/ டிகிரி முடித்தவர்களா நீங்கள்?

image

மத்திய அரசு உளவுத்துறையில் உள்ள 258 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IT அல்லது டிகிரி முடிருந்திருந்து , 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ..44,900 – ரூ.1,42,400/- வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-16 க்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க

News October 28, 2025

தருமபுரி: PHONE தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

தருமபுரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<> கிளிக் செய்து<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 28, 2025

இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம்

image

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (23.07.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், புவனேஸ்வரி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் , தோப்பூரில் குமரவேல் , மதிகோன்பாளையத்தில் செல்வம் மற்றும் கிருஷ்ணாபுரத்தில் ராஜு ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

News October 27, 2025

தீயணைப்பு வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய ஆட்சியர்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இன்று (அக்.27) தி.அம்மாபேட்டை தென்பெண்னை ஆற்றில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட மாணவர்களை காப்பாற்றிய தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் சதீஸ் வழங்கினார். உடன் நர்மதா, மாவட்ட தீயணைப்புதுறை அலுவலர் செல்வி அம்பிகா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

News October 27, 2025

மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகளுக்கு ஆட்சியர் வாழ்த்து

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் சதீஸ், இன்று (அக்.27) மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகள் ஆட்சியர் சதிஷ்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

News October 27, 2025

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஆட்சியர்

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அக்.27 மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, தனிதுணை ஆட்சியர் சமூகபாதுகாப்பு திட்டம் சுப்பிரமணியன் என பலர் பங்கேற்கற்றனர்

error: Content is protected !!