India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி ஆட்சியரகம் 04342231500, எஸ்.பி 9498101055, வருவாய் அலுவலர் 9445000908, பேரிடர் கால உதவி-1077, காவல் கட்டுப்பாட்டு அறை-100, தீத்தடுப்பு- 101, அவசர கால ஊர்தி உதவி- 102, விபத்துக்கால உதவி- 108, குழந்தைகள் உதவி- 1098, பாலியல் வன்கொடுமை தடுப்பு- 1091, BSNL உதவி-1500, மாநில கட்டுப்பாட்டு அறை- 1070. *மிக முக்கிய எண்களான இவற்றை உங்களுக்கு தெரிந்த பெண்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் பகிரவும்.
திமுக இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளரும் சேலம் தருமபுரி 4 வது மண்டல பொறுப்பாளருமான சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவர் மு க ஸ்டாலினை இன்று சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்துக்களை பெற்றார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலரும் உடன் இருந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் <
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு வகையான புற்றுநோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெரிய நகரில் உள்ள வசதிகள் தற்போது இங்கே நவீன கதிர்வீச்சு சிகிச்சைகள் அளிக்க தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக புதிக கட்டடம் கட்டப்பட்டுள்ளது, விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
தர்மபுரி மாவட்ட பாஜக சார்பில் மாற்றுக்கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் பொதுமக்கள், மற்றும் VVIP-க்களை கட்சியில் இணைக்கும் பணிகளை செய்வதற்காக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காரிமங்கலம் கிழக்கு-ராமகிருஷ்ணன், காரிமங்கலம்- மேற்கு சரவணன், பாலக்கோடு நகர்- பெரியசாமி, பாலக்கோடு கிழக்கு- பசுபதி, பாலக்கோடு மேற்கு- முருகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 05 அங்கன்வாடி பணியாளர், 20 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 89 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் <
தர்மபுரி கோட்டத்திற்கு உட்பட்ட மின் இணைப்புகளின் மின் கணக்கீடு சம்பந்தமான குறைபாடுகள், குறைந்த மின் அழுத்தம் புகார்கள் மின் மீட்டர் மற்றும் மின் கம்பம் மாற்றுதல் தொடர்பாக புகார் இருப்பினும் அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு சிறப்பு முகாம் ஏப்ரல் 5 தர்மபுரி கோட்ட அலுவலகத்தில் இன்று காலை 11.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெற உள்ளது என்று செயற்பொறியாளர் தெரிவித்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஹரி லீடிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர் உறவு அதிகாரி பணிக்கு ஆட்கள் தேர்வு .இந்த வேலைக்கு 20-30 வயதுக்குட்பட்டவர்கள் 12ஆம் வகுப்பு முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 – ரூ.25,000 வழங்கப்படும். உணவு, போக்குவரத்து ஊக்கத்தொகை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்திற்கு இன்று கனமழையும் மற்றும் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கிய புகாரில் தர்மபுரியை சேர்ந்த காவல் ஆய்வாளர் நெப்போலியன் கைது செய்யப்பட்டார். நீர்வளத்துறை கையகப்படுத்திய நிலத்தில் இருந்து 30 தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் என்பவர் வெட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனிப்படையினர் நெப்போலியனை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.