India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலை தேர்த்திருவிழாவை முன்னிட்டு அரூர் வருவாய் கோட்டத்திற்கு 18.03.2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 29 /03 /2025 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகின்றது இவ்வாறு தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் 11/03/2025 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இங்குள்ள தீர்த்தத்தில், அற்புத மூலிகைகளின் சத்து கலந்து விளங்குவதால், நீராடுபவர்கள் உடற்பிணி, உளப்பிணி யாவும் தீர்ந்து, புத்துணர்வும், புதுவாழ்வும் பெறுகின்றனர். மேலும் இக்கோயிலில் கடன் தொல்லை தீர வேண்டுவதுடன், வீடு கட்டவும், குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு இலவச படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பு மூலம் செயலிகளை உருவாக்குவும், செயல்படுத்தவும் முடியும். 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.35,000 – ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் <
தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலம் தமிழ்நாடு அரசின் அனைத்து போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மையத்தின் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு தொடர்பான புத்தகங்கள் இணைய வசதி கொண்டு நூலகம் மற்றும் 20க்கும் மேற்பட்ட கணினிகள் செயல்பட்டு வருகின்றன. பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இருமத்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற கொல்லாபுரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. வீடுகளில் பொருட்கள் எடுவும் திருடு போய் இருந்தால் இக்கோயிலில் உள்ள மரத்தில் கோழிகளை உயிருடன் கட்டி இந்த மரக்கிளைகளில் தொங்க விட்டால், கோழிகள் இறந்து அவற்றின் உடல் காய்ந்து போவதற்குள் திருட்டு போன பொருட்கள் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
அரூர் அடுத்த கருப்பிலிப்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன் இவரது வளர்ப்பு நாய், நேற்று காலை தெருவில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி, பிரதாப், இந்திராணி மற்றும் 2 வயதுடைய குழந்தையை கடித்தது. இதில் காயமடைந்த 4 பேரும் அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாயை பிடிக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மார்.12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த <
அ.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் வினோத் இவர் +1 படிக்கும் மாணவியிடம் பேச்சு கொடுத்து கடந்த 7ல் ஆட்டோவில் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததை அவரது தாய் கேட்டபோது, தனக்கு ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்ததை கூறியுள்ளார். மாணவியின் தாய் புகார்படி பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து ஆட்டோ டிரைவர் கைது செய்தனர்.
தருமபுரியில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதத்தின் இறுதி தொடங்கி மே மாதத்தில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது எனவும், பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்களுக்கு அசெளகரியமான சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இந்த செய்தியை உங்க ஊர் மக்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
காட்டம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (31) லாரிடிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி ஆனந்தி என்ற மனைவியும், 5 மற்றும் வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இன்று காலை பெண் குழந்தை ஹர்னிகாவை (2) சோமனஅள்ளியில் உள்ள தனது தாய் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அவர் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததில் உயிரிழந்தார். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
Sorry, no posts matched your criteria.