Dharmapuri

News September 5, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்புஎண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News September 4, 2025

தர்மபுரி: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டால்.. இதை பண்ணுங்க

image

தர்மபுரி மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கும், பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News September 4, 2025

தருமபுரியில் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10 கோடி கடன்.

image

தருமபுரி மாவட்டத்தில், மகளிரைச் சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கும் வகையில், பரோடா வங்கி சார்பில் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (செப்.3) நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் இயங்கி வரும் 300-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, ரூ.10 கோடி மதிப்பிலான கடனுதவி ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், ஆதரவற்றோருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News September 4, 2025

தருமபுரி: EB துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு

image

தருமபுரி மக்களே, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும். வயது 18 முதல் 32 வரை இருக்கலாம். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. விருப்பமுள்ளவர்கள் அக்.02க்குள் விண்ணப்பிக்க வேண்டும் SHARE பண்ணுங்க

News September 4, 2025

தருமபுரி: EB துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு

image

தருமபுரி மக்களே, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும். வயது 18 முதல் 32 வரை இருக்கலாம். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. விருப்பமுள்ளவர்கள் அக்.02க்குள் விண்ணப்பிக்க வேண்டும் SHARE பண்ணுங்க

News September 4, 2025

என்ன தகுதிகள் இருக்க வேண்டும் 2/2

image

▶️ பெற்றோரில் ஒருவர் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ஆண்டு வருமானம் 1,20,000 க்குள் இருக்க வேண்டும்.
▶️இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்,
▶️ஒரே குழந்தை என்றால் அந்த குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்

*இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News September 4, 2025

தருமபுரி: குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.25,000 இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50.000 அரசு சார்பாக அவர்களின் பெயரில் ஒரு ரொக்கத்தொகை வரவு வைக்கப்படும். 18 வயதாகும் போது வட்டியுடன் சேர்த்து இந்த பணம் வழங்கப்படும். இதற்கு உங்கள் ஊரில் நடைபெற்று வரும் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிலும் விண்ணப்பிக்காலாம். ஷேர் IT <<17608063>>தொடர்ச்சி<<>>

News September 4, 2025

தருமபுரி மக்களே கவனமா இருங்க… ஒரு கிளிக் தான்

image

தருமபுரி மக்களே உங்கள் வாகனங்கள் சாலை விதிமுறைகளை மீறியதால் வாகனத்தின் மீது கேஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் மெசேஷ் வந்தால் கவனமா இருங்க. E-Challan .apk File Install அபராத பணத்தை கட்டுங்கள் என வரும் Message களை -நம்பி அந்த .apk File Install செய்தால் சைபர் குற்றவாளிகள் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்து விடுவர். 1930 என்ற எண் அல்லது <>இந்த லிங்கில்<<>> புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News September 4, 2025

தர்மபுரியில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

தருமபுரி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு <<>>கிளிக் செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 3, 2025

BREAKING-தருமபுரி: ஆசிரியர் பணியிடை நீக்கம்

image

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி இருக்கிறது. இந்த பல்லயில் படிக்கும் மாணவர்களை, தலைமையாசிரியர் கலைவாணி கை, கால் அமுக்க வைத்தார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், தலைமையாசிரியை கலைவாணியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, அரூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவவலர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவு பெற்றோர்கள் இடையே வரவேற்பு பெற்றுள்ளது.

error: Content is protected !!