India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர் (நிலை 2) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மேல் படித்திருந்த 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900, வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<

தருமபுரி மாவட்டத்திலுள்ள 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியில் பங்கேற்று தங்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் ரெ.சதீஸ் அக்.29 இன்று தெரிவித்துள்ளார்கள்.

தொப்பூர் கணவாயில் நேற்று (அக்.29) சேலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஆண் ஒருவர் மீது பின்னால் வந்த கார் இடித்ததில் கோர விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்றவர் தர தரவென இழுத்து செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின் வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று அக்.29 குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை தருமபுரி மாவட்ட மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களால் வழங்கப் 73 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 73 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்-29) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.

அக்.29 மாநில அளவிலான பாரா நீச்சல் சாம்பியன்சிப் போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த வெங்கடேசன், விஜயகுமார், கார்த்திகேயன் ஆகியோர் 7 தங்கப்பதக்கம் மற்றும் 2 வெள்ளிப்பதக்கம் வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா,மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் (தனி) ஆகிய சட்ட மன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து அக்.29 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொருப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சதீஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு, (அக்.28) இன்று விவசாயிகள் 22 கிலோ 1162.200 பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.683-க்கும், குறைந்தபட்சமாக ரூ.584.37-க்கும், சராசரியாக ரூ.274-க்கும் என மொத்த விற்பனை மதிப்பு ரூ.679151/- என அங்காடி அலுவலர்கள் தெரிவித்தனர்.

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <

தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www. Dharmapuri.nic.in முகவரியில் பதிவேற்றம் செய்து பூர்த்தி செய்து வருகிற நவ.17 மாலை 5 மணிக்குள், தருமபுரி மாவட்ட பழைய ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில், சமர்ப்பிக்க வேண்டும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதிஷ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.