Dharmapuri

News March 31, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News March 31, 2025

விஷம் குடித்து தொழிலாளி பலி

image

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோட்டுப்பட்டியை சேர்ந்தவர் அல்லி (55). குடிபழக்கம் கொண்ட இவர் நேற்றைய தினம் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை அவரின் மனைவி குமாரி கண்டிக்க, இதில் விரக்தி அடைந்த அல்லி நேற்று பூச்சிக்கொல்லி மருந்து குடித்து வீட்டில் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவரை அவரை மீட்ட உறவினர்கள் தர்மபுரி மருத்துவமறையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News March 30, 2025

பெங்களூரில் மத்திய அரசு BHEL நிறுவனத்தில் வேலை

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரிக்கல் நிறுவத்தின் (BHEL) பெங்களூர் பிரிவில் காலியாக உள்ள 33 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 01.03.2025 தேதியின்படி 32 வயது வரை இருக்கலாம். எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் முடித்திருக்க வேண்டும். ரூ.45,000- ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து வரும் ஏப்ரல் 16க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News March 30, 2025

யூடியூப் சேனல் தொடங்க தமிழக அரசு பயிற்சி

image

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

News March 30, 2025

பரிசலில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

image

ஊத்துபள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் லட்சுமி தம்பதிகள் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை வழக்கம் போல் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மீன் பிடித்த போது நிலை தடுமாறி லட்சுமி ஆற்றில் விழுந்தார். அவரை காப்பாற்ற தங்கராஜ் ஆற்றல் குதித்தார் இருப்பினும் லட்சுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து ஏரியூர் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

News March 30, 2025

தர்மபுரியில் 102.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு

image

தமிழ்நாட்டில் கடந்த 27ஆம் தேதியில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்றும் வெப்பம் சுட்டெரித்ததை பார்க்க முடிந்தது. அதன்படி, மதுரை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. இந்நிலையில் தர்மபுரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 102.2 டிகிரி வெயில் பதிவானதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்

News March 29, 2025

தருமபுரியில் சுட்டெரிக்கும் வெயில்- தப்பிக்க சில டிப்ஸ்

image

தருமபுரியில் இன்று வெயில் சதமடித்துள்ளது(102.2). இந்நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, 1. 2 மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் வீதம் (250 மி.லி) நாளொன்றுக்கு 10- 12 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். 2. எளிதில் செரிமானமாகும் உணவுகளை சாப்பிடுங்கள். 3. மது, புகைபிடிப்பதை தவிர்க்கவும். 4. நீர் சத்து நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும். 5. வெளியே செல்லும் போது குடை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 29, 2025

சிவன் கோயில்களில் இன்று சனிப்பெயர்ச்சி வழிபாடு

image

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்று இரவு 11.01 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. அதன்படி இன்று தருமபுரியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இங்கு சென்று சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம சனி நடைபெறுவர்களுக்கு அதன் தாக்கத்தில் இருந்து விடுப்பட்டு வாழ்க்கை வளமாகும். ஷேர் பண்ணுங்க

News March 29, 2025

பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

image

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 29, 2025

+2 மாணவிக்கு பாலியல் தொல்லை

image

மாரண்டஹள்ளியை சேர்ந்த 17 வயது சிறுமி +2 படித்து வந்தார். நேற்று முன்தினம், கால்நடைகளை கவனிக்க அதே பகுதியில் உள்ள நிலத்திற்கு சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், சிறுமியை பின்தொடர்ந்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, புகாரின் பெயரில் சக்திவேலை கைது செய்த போலீசார் போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!