Dharmapuri

News June 4, 2024

ELECTION: தருமபுரியில் வெல்லப்போவது யார்?

image

2024 மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் மொத்தம் 81.48 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக திமுக சார்பில் ஆ.மணி, அதிமுக சார்பில் அசோகன், பாமக சார்பில் சௌவுமியா அன்புமணி, நாம் தமிழர் சார்பில் அபிநயா போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.

News June 3, 2024

உங்கள் தொகுதி யாருக்கு?

image

2019 மக்களவைத் தேர்தல் தருமபுரி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்குமார் 70,753 (5.78%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் ஆ. மணியும், அதிமுக சார்பில் அசோகனும், பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணியும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? உங்கள் கருத்து என்ன?

News June 2, 2024

மனைவியுடன் தொடர்பு: வாலிபர் அடித்துக் கொலை

image

பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(34). இவரது நண்பர்கள் அறிவழகன்(34), மாயக்கண்ணன்(42). மணிகண்டனுக்கும் அறிவழகனின் மனைவிக்கும் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், மூவரும் மது அருந்தும் போது மணிகண்டனை இருவரும் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த மணிகண்டன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், கொலை செய்த அறிவழகன், மாயக்கண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

News June 2, 2024

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு

image

தர்மபுரி, பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி கிராமத்தில் விவசாய கிணற்றில் பசு மாடு ஒன்று தவறி விழுந்து விட்டதாக தீயணைப்பு துறைக்கு நேற்று (ஜூன் 1ஆம்) தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் போக்குவரத்து செல்வம் தலைமையிலான குழு பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்‌.

News June 1, 2024

தர்மபுரி: மழைப்பொழிவு விவரம்

image

தர்மபுரியில் நேற்று (மே.31) பெய்த மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பென்னாகரத்தில் 3 செ.மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டியில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News June 1, 2024

மதுபான கடைகள் மூட உத்தரவு

image

தருமபுரி மாவட்டத்தில் மக்களவை பொது தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 04.06.2024 அன்று நடைபெறவுள்ளது. இதனால், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அனைத்து மதுபான கடைகளும் அன்று மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மீறி மதுபான கடைகள் செயல்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

News May 31, 2024

தர்மபுரி இன்று மழைக்கு வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (மே.31) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தர்மபுரியில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News May 31, 2024

தர்மபுரி: 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் அடுத்த இரு நாட்களுக்கு (ஜூன்.1 & 2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தர்மபுரியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.

News May 31, 2024

தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை

image

பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனி மகள் சந்தியா +2 முடித்து விட்டு தனியார் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். இந்நிலையில் வீட்டில் வேலை செய்யாமல் செல்போன் பார்த்து கொண்டிருந்ததால் அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சந்தியா விஷம் குடித்து மயங்கினார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 31, 2024

கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை 

image

காரிமங்கலம், மணிக்கட்டியூரை சேர்ந்தவர் சிவன். இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து போலீசார் முன்னிலையில் கதவு உடைக்கப்பட்டது. வீட்டில் உள்ளே மனைவி நந்தினி,  2 குழந்தைகள் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். மூவரின் உடலையும் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், அங்கு இருந்த சிவனை மீட்டு  மருத்துவமனையில் சேர்த்தனர். இது கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரிக்கின்றனர். 

error: Content is protected !!