India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அடிலம் ஊராட்சி அ.சப்பாணிப்பட்டியில் உள்ள பூலாப்பட்டி ஆற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்படும் உயர்மட்ட மேம்பால பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இன்று (ஜுன் 7) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் இன்று(07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது. தருமபுரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தர்மபுரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பாலக்கோடு ARG, பாலக்கோடு ஆகிய பகுதிகளில் 7 செ.மீட்டரும், மரத்தஹள்ளியில் 4 செ.மீட்டரும், ஹரூர், பென்னாகரம் பகுதியில் 3 செ.மீட்டரும், தர்மபுரி PTO பகுதியில் 2 செ.மீட்டரும், தர்மபுரி நகரம் ப்குதியில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
தருமபுரி மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தருமபுரி உட்பட 10 மாவட்டங்களில் இன்று(ஜூன் 6) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
காரிமங்கலம் அருகே காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கந்தனின் மகன் கௌதம்(3) என்ற குழந்தை இன்று விளையாடிக் கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்து விட்டது. பின்னர் குழந்தையை மீட்டு காரிமங்கலம் ஜி.ஹெச்சுக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்
தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணியில் போட்டியிட்ட சவுமியா அன்புமணியும், அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோகனும் தோல்வியைத் தழுவினர். வெற்றியைக் குறிவைத்து சவுமியா அன்புமணியை களமிறக்கிய பாமகவின் வியூகம் பொய்த்து போனது. இந்த தொகுதியில் இதுவரை திமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், அதிமுக 2 முறையும், பாமக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, தருமபுரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
தருமபுரி புதியதாக கட்டப்படும் வரும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் மரக்கன்றுகள் நட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிலிப்பின்ஸ் ராஜ்குமார், கோட்டாட்சியர் காயத்ரி, வட்டாட்சியர் ஜெயசெல்வன் , வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.