India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்டத்தில் அடுத்த இரு நாட்களுக்கு (ஜூன்.1 & 2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தர்மபுரியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.
பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனி மகள் சந்தியா +2 முடித்து விட்டு தனியார் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். இந்நிலையில் வீட்டில் வேலை செய்யாமல் செல்போன் பார்த்து கொண்டிருந்ததால் அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சந்தியா விஷம் குடித்து மயங்கினார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
காரிமங்கலம், மணிக்கட்டியூரை சேர்ந்தவர் சிவன். இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து போலீசார் முன்னிலையில் கதவு உடைக்கப்பட்டது. வீட்டில் உள்ளே மனைவி நந்தினி, 2 குழந்தைகள் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். மூவரின் உடலையும் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், அங்கு இருந்த சிவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரிக்கின்றனர்.
பஞ்சப்பள்ளி அணை, தர்மபுரியில் பஞ்சப்பள்ளி என்னும் ஊரின் அருகில் அமைந்துள்ளது. இது சின்னாறு ஆற்றின் குறுக்கே பஞ்சப்பள்ளியில் 1977 இல் கட்டப்பட்ட அணையாகும். இதன் கொள்ளளவு 500 மில்லியன் கன அடிகள். பாசனவசதிக்காக உள்ள இந்த அணையில் 19.27 அடி உயரத்திற்கு நீர் சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் 1821 எக்டர் நிலப்பரப்பு நீர்பாசனம் பெறுகின்றன.
காரிமங்கலம் அருகே மணிக்கட்டியூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவன் இவரது மனைவி நந்தினி. இவர்களது 2 மகன்கள் விஷம் அருந்தினர். தற்கொலை முயற்சியில் மனைவி, 2 மகன்கள் உயிரிழந்த நிலையில் கணவன் சிவன் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் இன்று (மே.31) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தலின்போது மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, அரூர் சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையை கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மொரப்பூரில் நாளை நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தர்மபுரி;வெளிநாடு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் ஜெர்மன், ஜப்பான் மற்றும் லண்டன் ஆகிய நாடுகளில் செவிலியர் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கு இலவச வெளிநாட்டு மொழி பயிற்சி வழங்கப்படுகின்றது. இதற்கு தகுதி உடையவர்கள் <
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அரூர், மொரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவரும் திருப்பூர் மாவட்டத்தில் பால் வியாபாரம் செய்து வந்தவருமான முனிராஜ் என்பவர் உடல் நலம் சரியில்லாமல் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதையடுத்து அவரது உள்ளுறுப்புகள் அவரது குடும்பத்தினரால் தானம் அளிக்கப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு இணங்க அரூர் ஆர்டி ஒ வில்சன் ராஜசேகர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே, அனுமந்தபுரம் அடுத்த சாவடியூர் கிராமத்தில், ஆண் சடலம் ஒன்று குப்பையில் புதைக்கப்பட்டிருந்தது. விசாரணையில், இறந்தவர் பாலக்கோடு பகுதியை சேர்ந்த மோகன்(38) என்றும், முன் விரோதம் காரணமாக சொந்த தம்பியான ரகு(35) அடித்துக் கொலை செய்து வீட்டின் அருகே குப்பையில் புதைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து இன்று(மே 29) காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.