India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரிமங்கலம் கலைக்கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரியில் இருந்து காரிமங்கலம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் பசுவராஜ் (42) சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பசுவராஜ் பலத்த காயமடைந்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பாதி வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஜூன் 9 குரூப் 4 போட்டி தேர்வு 228 மையங்களில் நடைபெற்றது.62 ஆயிரத்து 630 பேர் எழுத்து தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தனர் நிலையில் நேற்று நடைபெற்ற இந்த தெருவில் 51 ஆயிரத்து 203 பேர் தேர்வு எழுதினார்கள்.11, 427 பேர் தேர்வு எழுத வரவில்லை.அதாவது விண்ணப்பித்தவர்களில் 18.25 சதவீதம் தேர்வு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்ததற்கு மகிழ்ச்சி அடைவதாகவும், தன்னை தேர்ந்தெடுத்த மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றும் வகையில் தன்னுடைய பணிகள் சிறப்பாக இருக்கும் மற்றும் தனக்கு வாய்ப்பு அளித்த திமுக தலைவருக்கு நன்றி என தர்மபுரி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் வழக்கறிஞர் மணி தெரிவித்துள்ளார்.
தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு விலங்குகள் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிக்காக தேர்வு மாவட்ட மேலாளர் தலைமையில் நேற்று (ஜுன்.8) நடைபெற்றது. இதில் மாவட்ட இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் ஓட்டுனர் பணிக்கு 30 பேரும், உதவியாளர் பணிக்கு 65 பேரும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலத்துறை மாவட்ட சமூக நலன் மகளிர் உரிமை துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மற்றும் அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 24 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு 10/05/ 2024 முதல் 07/ 06 /2024 வரை விண்ணப்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது 13/ 06/ 2024 வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 94458 03042, 93617 45995 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பொது தேர்தல் 2024 முடிவடைந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் 6.6.2024 அன்று விளக்கிக் கொள்ளப்பட்டதால், வரும் 10.6.2024 திங்கட்கிழமை முதல் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் காலை 10 மணி முதல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற உள்ளது.
தர்மபுரி; நான் முதல்வன் திட்டத்தின் கீழ் எஸ்எஸ்சி, ரயில்வே மற்றும் வங்கி பணிகளுக்கான கட்டணம் இல்லாமல் ஆறு மாத கால உறைவிடப் பயிற்சி வழங்க ஆயிரம் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் https://naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
தர்மபுரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் மணி வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் கருணாநிதி, அண்ணா நினைவிடத்திற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் தர்மபுரி பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், முன்னாள் எம்.பி செந்தில் குமார், மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி பழனியப்பன் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் அடுத்த சில மணி நேரத்தில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இப்பகுதியில் கடந்த நில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.