India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று(ஜூன் 12) தர்மபுரி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் மூலமாக 10 & 12-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியினை பெற https://tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணையதளத்தில் விபரங்களை பதிவு செய்யலாம்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையில் (இன்று ஜூன் 12) நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தசையது முகைதின் இப்ராகிம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அருண்மொழித்தேவன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
அரூர் – சேலம் நெடுஞ்சாலையில் சுக்கம்பட்டி அருகே இன்று(ஜூன் 12) ஏற்பட்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். லாரி ஒன்றின் பின்னால் 2 பைக்குகளில் 4 பேர் சென்ற நிலையில், லாரி நின்றபோது பின்னால் அதிவேகமாக வந்த சண்முகா என்ற தனியார் பேருந்து மோதியதில் பைக்கில் இருந்த 4 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஏ.ஜெட்டிஅள்ளியில் தருமபுரி வட்டம், அதகப்பாடி, நல்லம்பள்ளி வட்டம் தடங்கம், அதியமான்கோட்டைமற்றும் பாலஜங்கமனஅள்ளி ஆகிய கிராமங்களில் புதிய தொழிற்பூங்காவை சிப்காட் நிறுவனம் நிறுவ தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையில் நேற்று(ஜூன் 12) பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
சுதந்திர தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்க உள்ளது. அதற்கு சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தருமபுரி கலெக்டர் சாந்தி இன்று ஜூன் 11 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில் (NADCP)5 5வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிகள்(ஜூன் 10) முதல் (ஜூன் 30) வரை முகாம் நடைபெறுகிறது. மேலும் கால்நடை உதவி மருத்துவர்கள் அடங்கிய 83 குழுக்கள் அமைக்கப்பட்டு இப்பணி அனைத்தும் கிராமங்களிலும் மலை கிராமங்களில் உள்ள மாடுகள் எருமைகளுக்கு செலுத்தப்பட உள்ளது என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் சாலையை எளிதாக கடக்க ஏதுவாக வேகத்தடை அமைக்க மாணவர்கள் கோரிக்கை வைத்தனர், இதனால் அரசு கலைக்கல்லூரி முன்பு அதிவேகமாக செல்லும் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை நெடுஞ்சாலை துறையினால் இன்று(ஜூன் 11)அமைக்கப்படுகிறது.
கல்லூரி தூங்குவதற்கு முன் பணிகள் முடிவடைந்துவிடும் என பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் சாந்தி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலக ஓட்டுநர் சங்கரன், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலக ஓட்டுநர் எஸ்.பொன்னப்பன் ஆகியோர் தங்களுடைய 20 வருட பணிக்காலத்தில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
தருமபுரி, தடங்கம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 5ஆம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகளை கலெக்டர் கி.சாந்தி இன்று தொடங்கி வைத்தார். உடன் தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சுவாமிநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி அரசு கலை கல்லூரி 2024-2025 ஆம் ஆண்டிற்கான இளநிலை படிப்பிற்கான முதலாம் கட்ட கலந்தாய்வு (10/06/24), (11/06/2024), (12/06/2024) ஆகிய தேதிகளில் கல்லூரி கலையரங்கில் காலை 10.00 மணி முதல் நடைபெறுகிறது. இதில், மாணவர்கள் கட்டாயம் பெற்றோர்களுடன் கலந்தாய்வில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.